districts

img

அங்கேரிபாளையத்தில் சிபிஎம் சார்பில் மக்கள் சேவை மையம் தொடக்கம்

திருப்பூர், ஆக. 31 - திருப்பூர் அங்கேரிபாளையத்தில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்கள் சேவை மையம் துவக்கப்பட்டது.  திருப்பூர் வடக்கு ஒன்றியம் அங்கேரிபா ளையம் பகுதி கிளைகள் சார்பில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் பொதுமக்களுக்குத் தேவையான அனைத்து இணைய வழி அரசு சேவைகளையும் பயன் பெறும் வகையில் “மக்கள் சேவை மையம்”  ஆகஸ்ட் 30 அன்று துவக்கப்பட்டுள்ளது. இந் நிகழ்ச்சிக்கு கிளைச் செயலாளர் ஆர். நரேந்திர பிரசாத் தலைமை தாங்கினார்.  இந்த மக்கள் சேவை மைய அலுவலகத்தை  மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப் பினர் கே.காமராஜ் ரிப்பன் வெட்டித் திறந்து வைத்து கணினியை இயக்கி வைத்தார். இதில் வடக்கு ஒன்றியச் செயலாளர் ஆர். காளியப்பன், மாவட்டக்குழு உறுப்பினர் ஆ. சிகாமணி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் பி. மகாலிங்கம், கே.வசந்தி, எஸ்.பாண்டியன், அ.சந்தோஷ் குமார் மற்றும் கிளைச் செயலா ளர்கள் ஆர்.என்.ரத்தினசாமி, எஸ்.ராஜேஷ்,  என்.மனோகரன், பி.கதிர்வேல் மற்றும் கட்சி  ஊழியர்கள் பங்கேற்றனர்.