districts

img

தார்ச்சாலை அமைக்க மக்கள் எதிர்ப்பு

நாமக்கல், டிச.17- நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தில் சாலை விரி வாக்கம் மற்றும் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடை பெற்று வருகிறது. இதனால், பள்ளிபாளையம் நான்கு ரோடு  உள்ளிட்ட இடங்களில், தற்போது அதிக போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. போக்குவரத்து சிர மங்களை குறைக்கும் வகையில், மாற்று வழியில் வாக னங்கள் செல்வதற்கு ஏதுவாக நெடுஞ்சாலை துறையினர் சாலைகளை சீர்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் பள்ளிபாளையம் ராஜவீதி வழியாக குமாரபாளையம் செல் லும் வழியில், தார் சாலை அமைக்கும் பணியினை நெடுஞ் சாலை துறையினர் மேற்கொண்டனர். அப்பொழுது அங்குள்ள ஊர் பொதுமக்கள் தங்கள்  பகுதியில் மழை பெய்யும் பொழுது மழைநீர் வீடுக ளுக்குள் புகுந்து விடுகிறது. எனவே போர்க்கால அடிப்ப டையில் கழிவு நீர் மற்றும் மழைநீர் செல்லும் வகையில் தார்ச்  சாலை நடுவில் குழாய் வைத்து அமைத்துத்தர வேண் டும் என கோரிக்கை வைத்தனர். ஆனால், நெடுஞ்சாலைத் துறை மக்களின் கோரிக்கையை கண்டுகொள்ளாததால், சாலை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இத னால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.