districts

img

தூய்மைக்கான மக்கள் இயக்கம்

பள்ளிபாளையம், ஜூன் 11- திருச்செங்கோட்டில் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சனியன்று நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகராட்சி, கிழக்கு ரத வீதியில் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில்,  தூய்மைப் பணி நடைபெற்றது. இதனை நகர் மன்ற தலைவர்   நளினி சுரேஷ் பாபு  கொடியசைத்து துவக்கி வைத்தார்.  இரண் டாவது, நான்காவது சனிக்கிழமைகளில் தூய்மைப் பணி நடை பெற்று வருகிறது.  இதில் பிளாஸ்டிக் இல்லா நகரம், குடிநீர்  சேமிப்பு, குப்பைகள் இல்லா நகரம், விளம்பர தட்டிகள் அகற்றுதல், மக்கும் குப்பை, மக்கா குப்பைகள் பிரித்தல் என  தனித்தனியாக பணிகள் நடந்து வந்தன.  நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் கணேசன், நக ராட்சி பொறியாளர் சண்முகம் மற்றும் நகர் மன்ற உறுப்பி னர்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர் கள் தூய்மை பணியில் ஈடுபட்டனர். மேலும் பொதுமக்கள் மக்கும் குப்பை, மக்கா குப்பைகளை பிரித்து வழங்க வேண்டும் என வலியுறுத்தி துண்டு பிரசுரங்களை பொது மக்களுக்கு விநியோகித்தனர்.  இந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் கணேசன், நக ராட்சி பொறியாளர் சண்முகம் மற்றும் நகர் மன்ற உறுப்பி னர்கள் திவ்யா வெங்கடேஸ்வரன், மனோன்மணி சரவண முருகன், மகேஸ்வரி தங்கவேல், புவனேஸ்வரி உலக நாதன், மைதிலிகாந்தி, செல்வி ராஜவேல் ஆகியோர் உடனி ருந்தனர்.