அவிநாசி, ஜூலை.22 திருமுருகன்பூண்டி 22 ஆவது வார்டு பகுதியில் அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருமுருகன்பூண்டி நகராட்சி கிளைகள் சார்பில் ஞாயிற்றுக்கிழமை மக்கள் சந்திப்பு கையெழுத்து இயக் கம் நடைபெற்றது. பூண்டி தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்களுக்கு இடையூறாக இருக் கும் டாஸ்மாக் கடையை வேறு இடத் திற்கு மாற்ற வேண்டும். திருமுருக நாதர் கோவில் வளாகத்தில் பழுத டைந்த நிலையில் உள்ள பொதுக் கழிப் பிடத்தை சீரமைக்க வேண்டும். அகில் நகர் பகுதியில் கட்டி முடித்து முழுமை பெறாமல் உள்ள பூங்காவில் விளை யாட்டு உபகரணங்கள் அமைத்து தர வேண்டும். ரிதம் அவென்யூ குடி யிருப்பு பகுதியிலுள்ள சாக்கடை கழி வுநீரை நிரந்தரமாக வெளியேற்ற நடவ டிக்கை எடுக்க வேண்டும். சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். வாரம் ஒரு முறை பாதுகாப் பான குடிநீர் வழங்க வேண்டும். நல் லாற்றுப் பாலம் பகுதியை ஒட்டிய அம் மாபாளையம், பூண்டி மயானத்தின் அருகிலும், அகில்நகர், ஆர்.ஜிகார்டன் ஒட்டிய பகுதிகளிலும் உள்ள புதர்களை அகற்ற வேண்டும். நல்லாறு முழுவதும் தூர்வாரி சுகாதார சீர்கேடு ஏற்படாமல் இருக்க வழிவகை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து மக்கள் சந்திப்பு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில், சிஐடியு மாநிலக் குழு உறுப்பி னர் முத்துசாமி, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் ஏ. ஈஸ்வரமூர்த்தி, ஒன்றியக்குழு உறுப்பி னர்கள் வெங்கடாசலம், வேலுச்சாமி, பாலசுப்பிரமணியம், காமராஜ், வையா புரி, நகர்மன்ற உறுப்பினர்கள் தேவ ராஜ், சுப்பிரமணியம், கிளைச் செயலா ளர் ராஜ், அவிநாசியப்பன், பாண்டியன் மற்றும் அருணாச்சலம், சந்திரன் உள் ளிட்டோர் கலந்து கொண்டனர். இதைதொடர்ந்து, மக்கள் சந்திப்பு இயக்கத்தில் பொதுமக்களிடம் கையெ ழுத்து பெற்ற கோரிக்கை மனுவை திங்க ளன்று மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் அளித்தனர்.