தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புதனன்று மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. பொதுமக்களிடமிருந்து மொத்தம் 85 மனுக்கள் பெறப்பட்டு, 77 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் இளங்கோவன், பாலசுப்பிரமணியம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.