தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஈரோடு வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் ஓய்வூதியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.சங்கரன், செயலாளர் வ.பன்னீர்செல்வம், பொருளாளர் எஸ்.பாலசுப்ரமணியம், அரசு ஊழியர் சங்க மேனாள் மாநிலத் தலைவர் கே.ராஜ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.