ஈரோடு, ஏப்.6- மாதாந்திர மருத்துவப்படியை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்கிடக்கோரி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய அரசு ஓய்வூதியர்களுக்கு 65 வயது முதல் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். மாதாந்திர மருத் துவப் படியை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும், ஒன்றிய அரசின் சுகாதார நல மையங்களை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஓய்வூதியர் அமைப்புகளின் தேசிய ஒருங்கிணைப்புக் குழு சார்பில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. ஈரோட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு காப்பீட்டு ஓய்வூதியர் சங்க நிர்வாகி ஆர்.முருகேசன் தலைமை வகித் தார். இதில், பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்க நிர்வாகி பாபு, அஞ்சல் ஓய்வூதியர் சங்க நிர்வாகி என்.குப்புசாமி, ரயில்வே ஓய்வூதியர் சங்க நிர்வாகி வெங்கடாசலம், அஞ்சல் ஓய்வூதி யர் சங்க மாவட்ட செயலாளர் பி.சின்னச்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். பொள்ளாச்சி பொள்ளாச்சி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்ட உதவிச் செயலாளர் எஸ்.மனோகரன் தலைமை வகித்தார். இதில், ஓய்வூதியர் சங்க மாநில உதவி பொருளா ளர் பி.நிசார் அகமது, ஒப்பந்த ஊழியர் சங்க பொறுப்பா ளர் ஓ.ராமச்சந்திரன், ஓய்வூதியர் சங்க கிளை அமைப்பு செயலாளர் வி.மலைசாமி உட்பட பலர் கலந்து கொண்ட னர். திருப்பூர் நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரையை அமல் படுத்தக் கோரி அகில இந்திய மத்திய - மாநில ஓய்வூதி யர்கள் சங்கம் சார்பாக திருப்பூர் பிஎஸ்என்எல் தொலைபேசி நிலையத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சங்கத்தின் நிர்வாகிகள் கருணாநிதி, எஸ்டிஇ சந்திர சேகர், எம்.முருகசாமி, எம்.காந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.