குமாரபாளையம், ஏப்.30- குறைந்தபட்ட ஓய்வூதியம் வழங்கக்கோரி இபிஎப்ஓ ஓய்வூதியர்கள் நல சங்கத்தினர் ஞாயிறன்று குமார பாளையம் பேருந்து நிலையம் அருகில் மணி அடித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்திற்கு கே.பாலுசாமி தலைமை ஏற்றார். மண்டல தலைவர் மாணிக்கம் போராட்டத்தை துவக்கி வைத் தார். இதில், மூத்த குடி மக்களுக்கான ரயில்வே கட்டண சலுகையை மீண்டும் அமலாக்க வேண்டும். ஆன்லைன் பதிவுகளை கைவிட்டு நேரடியாக மனுக்களை பெற்றுக் கொள்ள வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ. 3 ஆயிரம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியு றுத்தி முழக்கங்கள் எழுப்பியும், மணி அடித்தும் போராட் டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில், இபிஎப் ஓய்வூதியர்கள் திராளனோர் கலந்து கொண்டனர்.