districts

img

கூடுதல் ஓய்வூதியம் வழங்க ஓய்வூதியர் சங்கம் வேண்டுகோள்

கோவை, செப்.10- 70 வயது நிறைவடைந்த ஓய்வூ தியர்களுக்கு 10 சதவிகிதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க கோவை மாவட்ட பேரவை வலியுறுத்தியுள்ளது.  தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை  ஓய்வூதியர் சங்க கோவை மாவட்ட 8  ஆவது பேரவை கூட்டம், செவ்வா யன்று, தாமஸ் கிளப்-பில் தோழர்  கே.வேலுசாமி நினைவு அரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு மாவட் டத் தலைவர் எஸ்‌.மதன் தலைமை வகித்தார். மாவட்ட இணைச் செய லாளர் எஸ். பாலகிருஷ்ணன் வர வேற்றார். மாநில துணைத்தலைவர் என்.அரங்கநாதன் துவக்க உரை யாற்றினார். மாவட்டச் செயலாளர் கே.அருணகிரி, பொருளாளர் பி.நட ராஜன் ஆகியோர் முறையே செயல்  அறிக்கை மற்றும் வரவு செலவு அறிக்கையை முன்மொழிந்தனர். பேரவையை வாழ்த்தி, அரசு ஊழியர்  சங்க மாவட்ட துணைத் தலைவர் எஸ்.சையது உசேன், ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுச் செயலாளர் ஏ.குடியரசு ஆகியோர் உரையாற்றினர். இதில் புதிய ஓய்வூதிய திட்டத்தை, ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட் டத்தை அமல்படுத்த வேண்டும். 70  வயது நிறைவடைந்த ஓய்வூதியர் களுக்கு 10 சதவீகிதம் கூடுதல் ஓய்வூ தியம் வழங்க வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, வருவாய், கிராம உத வியாளர்கள், ஊரக நூலகர்கள், வனக் காவலர்கள். ஊராட்சி எழுத்தர்கள் உள்ளிட்ட பிரிவினர்களுக்கு குறைந் தபட்ச ஓய்வூதியமாக ரூ. 7850 வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பேரவையில், துணைத்தலைவராக பொன்னையா  தேர்வு செய்யப்பட்டார். அரசு அனைத் துத்துறை ஓய்வூதியர் சங்க மாநிலப் பொருளாளர் எம்.ஜெயச்சந்திரன் நிறைவுரையாற்றினார். முடிவில் மாவட்ட இணைச்செயலாளர் கே. ஜானகி நன்றி கூறினார்.