districts

img

தற்காலிக மின் இணைப்பு பெற்றதற்கு வெவ்வேறு நபர்களுக்கு தண்டமா? பாதிக்கப்பட்டவர் கேள்வி

திருப்பூர், ஜூன் 17 - திருப்பூர் மாவட்டம், அவினாசி மின்  பகிர்மான வட்டம், பாண்டியன் நகர்  உதவி மின் பொறியாளர் அலுவலகத் தில், ஈஸ்வரன் என்பவர் கடந்த 2016 ஆம் ஆண்டு ஜனவரி 21ஆம் நாள்  தற்காலிக மின் இணைப்பு பெற்றுள் ளார். அதன் பிறகு பயன்பாடு ஏதும்  இல்லாமல் மின் இணைப்பு துண்டிக் கப்பட்டு மின் மீட்டர் திரும்ப எடுத்துச்  செல்லப்பட்டுள்ளது. இதன்பிறகு ஐந்தாண்டுகள் கழித்து மின் இணைப்பு கணக்கு முடித்து வைக்கப்பட்டதாக கூறியும், ஏழு நாட்களுக்குள் பணம் செலுத்த வேண்டும் என மின்வாரியத்தினர் அறி வுறுத்தி உள்ளனர். பணம் செலுத்த வில்லை என்றால், இதனை இவருக்கு  சொந்தமான வேறொரு மின் இணைப்பு எண்ணில் சேர்த்து வசூல்  செய்யப்படும் என்று இரண்டு மாதத் திற்கு முன் மின் பணியாளரால் நேரில்  கடிதம் கொடுத்து தெரிவிக்கப்பட்டுள் ளது. எனினும் ஈஸ்வரனுக்கு சொந்த மாக வேறு மின் இணைப்பு இல்லை.  இந்நிலையில் இவரது வீட்டுக்கு அரு கில் உள்ள இவரது உறவினரான கருப் புசாமி வீட்டின் மின் இணைப்பு (எண்:  0317300936) அதில் கணக்கில் சேர்த்து பெறப்படுவதாக மின்வாரியத் தால் வழங்கப்பட்ட கடிதத்தில் தெரி விக்கப்பட்டிருந்தது.

இப்பிரச்சனை குறித்து கேள்வி எழுப்பிய நிலையில் உறவினர் கணக் கில் சேர்த்து பெறும் முயற்சி கைவிடப் பட்டது. அதேசமயம் ஈஸ்வரன் மனைவி தனசெல்வி பெயரில் உள்ள  வீட்டின் மின் இணைப்பு (எண் – 0317300 91756) கணக்கில் ரூ.7474 சேர்த்து  கட்டுமாறு மறுபடியும் மின்வாரியத் தினர் கூறி வருகின்றனர்.  இப்படி மூன்று வெவ்வேறு மின்  இணைப்பு பெயரில் உள்ள கணக் கிற்கு மாற்றி மாற்றி தொகை செலுத் தும்படி கேட்டு நிர்பந்தம் செய்ய முடி யுமா என்று ஈஸ்வரன் கேள்வி எழுப்பி  இருக்கிறார்.  இது குறித்து ஈஸ்வரன் கூறுகை யில், நான் ஒரு விவசாயி. எனது அறியா மையையும், படிப்பறிவின்மையை யும் பயன்படுத்தும் அலுவலர்களிடம் மின் இணைப்பை துண்டிக்கும்படி கூறி யும், அவ்வாறு செய்யாமல் எனது மனுவை ஏற்க மறுத்து அனுப்பி வைத்து விட்டனர். தற்பொழுதும் இப் படி அலைக்கழிப்பு செய்கின்றனர், என்ன செய்வதென்றே தெரியவில்லை  என வேதனையுடன் குறிப்பிட்டார். அலுவலர்கள் சரியானபடி வேலை  செய்யாமல் விட்டுவிட்டு, எங்க ளைப் போன்ற அப்பாவிகள் மீது தண் டம் விதிப்பது சரியா? கணக்கு பார்ப்ப திலும் பிழை, கணக்கு கேட்பதிலும் பிழை செய்யும் அலுவலர்களால் சாமா னியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாக் கப்படுகிறார்கள். மின்வாரிய உயர் அதிகாரிகள் இதில் உரிய தீர்வு காண  வேண்டும் என்றும் ஈஸ்வரன் கேட்டுக்  கொண்டிருக்கிறார்.