districts

img

தொழிலாளர்கள் வீடுகளுக்கு தீவைப்பு விவகாரம் ஆட்சியர் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை

நாமக்கல், மார்ச் 23- ஜேடர்பாளையத்தில் தொழி லாளர்கள் வீடுகளுக்கு தீவைத்த விவகாரத்தில், மாவட்ட ஆட்சியர்  ஸ்ரேயா பி.சிங் தலைமையில் வட கரையாத்தூர் மற்றும் வீ.கரப் பாளையம் உள்ளிட்ட கிராமங் களை சேர்ந்த இருதரப்பினர் களுக்கான அமைதி பேச்சு வார்த்தை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங்.  தெரி வித்ததாவது, நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் வட்டம், வடகரை யாத்தூர், மேல்முகம் கிராமம்,  வீ.கரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த நித்யா என்பவர் கடந்த  மார்ச் 11ஆம் தேதின்று மர்மமான   முறையில் கொலை செய்யப்பட் டார். இதனைதொடர்ந்து, மாவட்ட  நிர்வாகம் மூலம் காவல் துறையின்  வழியாக நடவடிக்கை மேற் கொண்டு குற்றவாளியை கண்டு பிடித்து சிறையில் அடைக்கப் பட்டனர்.  மேலும், இக்கொலை நிகழ் வினை சிலர் தவறாக சித்தரித்தின் விளைவாக வடகரையாத்தூர், மேல்முகம் கிராமத்தில் தனி யாருக்கு சொந்தமான தகர சீட்,  ஓலை வேய்ந்த குடிசைகள் மற்றும்  புதுப்பாளையம் என்ற இடத்தில் தனியாருக்கு சொந்தமான ஆலை கொட்டகை ஆகியவை அடையாளம் தெரியாத நபர் களால் தீ வைக்கப்பட்டது.    இதன் தொடர்ச்சியாக மேற் கண்ட இடங்களில் தீ வைத்த அடையாளம் தெரியாத நபர்களை காவல் துறையினர் கண்டுபிடித்து சிறையில் அடைத்துள்ளனர்.

ஆனால், தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வட கரையாத்தூர், மேல்முகம் கிரா மத்தில் சரளைமேடு பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான வேளாண் இயந்திரங்கள் மற்றும் தகர வீடு தீ வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்  துறையினர் தொடர்ந்து கண் காணித்து குற்றவாளிகளை கைது  செய்ய நடவடிக்கைகள் மேற் கொண்டு வருகிறார்கள். மேற் கண்ட அசாதாரண சூழ்நிலையை  சிலர் தவறாக பயன்படுத்தி தேவை யற்ற அசம்பாவிதங்களை உரு வாக்க நினைக்கிறார்கள்.  இது  போன்ற சூழ்நிலைகள் உருவா காமல், கிராமத்தில் அமைதியை காக்க கிராமங்களை சேர்ந்த அனை வரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.  கிராம மக்களுக்கு தேவையான பாதுகாப்புகளும், மாவட்ட நிர் வாகத்தால் செய்து தரப்படும். மேலும், மக்களின் இயல்பு நிலை  பாதிக்காத வகையில், அனைத்து  நடவடிக்கைகளும் மேற்கொள்ளப் படும். மேற்கண்ட நிகழ்வுகள் குறித்த தவறான தகவல்கள் சமூக ஊடகங்களில் வெளியிடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதால், இது போன்று உண்மைக்கு புறம்பான  செய்திகளை நம்பாமல் கிராம  அமைதிக்கு தேவையான ஆக்கப் பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க கிராம மக்கள் அனைவரும் இணைந்து செயல்படுவோம் என்றார். முன்னதாக, இக்கூட்டத்தில், வடகரையாத்தூர் மற்றும் வீ.கரப் பாளையம் கிராம பகுதியை சேர்ந்த  இருதரப்பினரின் கோரிக்கைகளை மாவட்ட ஆட்சித்தலைவர்  கேட்ட றிந்தார்.  இக்கூட்டத்தில் துணை காவல் கண்காணிப்பாளர் கலையரசன், வருவாய் கோட்டாட்சியர் (திருச் செங்கோடு) கௌசல்யா, பரமத்தி வேலூர் வட்டாட்சியர் கலைச் செல்வி ஆகியோர் உட்பட அரசுத் துறை அலுவலர்கள், கிராம பொது மக்கள் கலந்து கொண்டனர்.