districts

img

நூறுநாள் வேலை சம்பள பாக்கியை விரைந்து வழங்கிடுக

தருமபுரி, அக்.10- நூறுநாள் வேலை திட்டத்தில் சம்பள பாக் கியை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தி னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில், பணி செய்த மாற்றுத்திறனாளிக ளுக்கு சம்பள பாக்கி உடனடியாக வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு 100  நாள் வேலையை 200 நாளாகவும், சம்ப ளத்தை ரூ.600 ஆகவும் உயர்த்தி வழங்க  வேண்டும். அணைத்து மாற்றுத்திறனாளிக ளுக்கும் நிபந்தனையின்றி வேலை வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு 4 மணி நேர வேலை மற்றும் ஊதா கலர் அட்டையை  உத்தரவாதப்படுத்த வேண்டும். மாற்றுத்திற னாளிகளுக்கு தனியாக வருகைப்பதிவேடு வைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப் போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் செவ் வாயன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தரு மபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் ஒன்றி யத் தலைவர் பி.திருஞானம் தலைமை வகித்தார். இதில் மாவட்டச் செயலாளர் எம். மாரிமுத்து, ஒன்றியச் செயலாளர் கே.சுசிலா, மாவட்டக்குழு உறுப்பினர்கள் எஸ்.துளசி, ராமசாமி, ஜெயக்கொடி, அங்கம்மாள் உட் பட திரளான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். சேலம் இதேபோன்று சேலம் மாவட்டம், ஓம லூர் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாற்றுத்திறனாளி கள் சங்க ஒன்றியத் தலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார். இதில் மாவட்டத் தலை வர் ஹரிகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் குணசேகரன், இணைச்செயலாளர் அமலா ராணி, ஒன்றியச் செயலாளர் ஏழுமலை, விவ சாய தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலா ளர் சின்னதுரை உட்பட பலர் கலந்து கொண்ட னர். காடையாம்பட்டி ஊராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத் தின் ஒன்றியத் தலைவர் கோவிந்தன் தலைமை வகித்தார். இதில் மாவட்டத் தலைவர் ஹரி கிருஷ்ணன், இணைச்செயலாளர் அமலா ராணி, ஒன்றியச் செயலாளர் ஜெகநாதன், துணைச்செயலாளர் கந்தசாமி, துணைத் தலைவர் கோவிந்தன், பொருளாளர் பழனிச் சாமி, விவசாய சங்க நிர்வாகி ஈஸ்வரன் உட் பட பலர் கலந்து கொண்டனர்.

மேட்டூர் - கொளத்தூர் ஊராட்சி அலுவல கம் முன்பு சங்கத்தின் மாவட்ட துணைத்தலை வர் ஜான் பெர்னாண்டஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட  துணைத்தலைவர் அம்மாசி, தாலுக்காப் பொரு ளாளர் பவுல்ராஜ், துணைச்செயலாளர் கோபாலகிருஷ்ணன், மாவட்டக்குழு உறுப் பினர் நடராஜன் உட்பட பலர் கலந்து கொண் டனர். பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு டி.ராமமூர்த்தி தலைமை வகித்தார்.  இதில் சங்கத்தின் மாவட்டக்குழு உறுப்பினர் காளிதாஸ், விவசாய தொழிலாளர் சங்க மாவட் டக்குழு உறுப்பினர் ரங்கசாமி, சிபிஎம் பேரூ ராட்சி கவுன்சிலர் ராமசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆத்தூர் ஊராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், சங்கத்தின் தாலுக்காச் செயலாளர் அழகுவேல், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகேசன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் பத்மினி, ராதா  ஆகியோர் கலந்து கொண்டனர். கெங்க வல்லி ஊராட்சி அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் ஒன்றி யச் செயலாளர் சின்னதுரை தலைமை  வகித்தார். இதில் மாவட்ட இணைச்செயலா ளர் கந்தன் உட்பட பலர் கலந்து கொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங் களை எழுப்பினர்.