districts

img

தூய்மைப் பணியாளர்களுக்கு தினக்கூலியாக ரூ.653 வழங்கிடுக

தருமபுரி, அக்.20- நகராட்சி தூய்மைப் பணியாளர் களுக்கு நாள்தோறும் ரூ.653 வழங்க வேண்டும் என வலியுறுத்தி  சிஐடியு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை தொழிலாளர்கள் சங்கத் தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டனர். நகராட்சியில் வேலை செய்யும் தூய்மைப் பணியாளர்களுக்கு அர சாணை எண்: 62, 2B-யின் படி  நாளொன்றுக்கு ரூ.653 ஊதியம்  வழங்க வேண்டும். ஒப்பந்த தொழி லாளர்கள் அனைவருக்கும் தீபா வளி போனஸ் வழங்க வேண்டும். நகர விரிவாக்கத்திற்கேற்றார் போல் தூய்மைப் பணியாளர்களை வேலைக்கு எடுக்க வேண்டும். ஓய்வு பெறும் தொழிலாளிக்கு ஓய்வுபெறும் நாளில் அனைத்து  பணப்பலன்களை வழங்க வேண் டும். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வேலை நேரம் மற்றும் வார விடு முறையை முறைப்படுத்த வேண் டும். தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த இஎஸ்ஐ, பிஎப், மற்றும் இதர பணத்தை மாதந்தோறும் உரிய அலுவலகத்தில் செலுத்த  வேண்டும். விபத்தில் படுகாயம டைந்த பெண் தொழிலாளிக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.  ஒரு வருடம் கடந்தும், நிரந்தர பணி யாளர்களுக்கு வழங்கப்படாத பிஎப் பணப்பலன்களை உடனடியாக  வழங்க வேண்டும் உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு ஊரக வளர்ச்சி, உள்ளாட் சித்துறை தொழிலாளர்கள் சங்கத் தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டனர். தருமபுரி நகராட்சி அலுவலகம்  முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு சங்கத்தின் மாவட்டத் தலை வர் சி.குட்டியப்பன் தலைமை வகித்தார். இதில் சிஐடியு மாநிலச் செயலாளர் சி.நாகராசன், மாநிலக் குழு உறுப்பினர் சி.கலாவதி, சங்கத் தின் மாவட்டப் பொருளாளர் டி. வெங்கட்ராமன் உட்பட தூய்மைப் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர். கோவை கோவை மாநகராட்சி தூய் மைப் பணியாளர்கள் காத்திருப்பு  போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாநகராட்சியில் 5 மண் டலங்களில் 7500 ஒப்பந்த பணியா ளர்கள் உள்ளனர். இந்த ஒப்பந்த பணியாளர்களுக்கு ரூ.721 சம்பளம் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், 2023-2024 ஆம் ஆண்டுக் கான மாவட்ட ஆட்சியர் அறிவித்த  சம்பளத்தை இதுவரை வழங்கப் படவில்லை. நீண்ட நாட்களாக ஒப் பந்த பணியாளர்களான தூய்மைப் பணியாளர்கள், ஓட்டுநர்கள், கிளீ னர்கள் அனைவருக்குமே எவ் விதமான சம்பளமும் நிர்ணயம் செய்யப்படவில்லை.  இதனால், கோவை மாவட்ட தூய்மைப் பணியாளர் உரிமை மீட்பு  கூட்டு இயக்கம் சார்பாக கோவை வஉசி மைதானத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.