தருமபுரி, ஜன.14- தொப்பூர் - பொம்மிடி பிரதான சாலை யான தொப்பையாறு அணையை ஒட்டிய சாலையை செப்பனிட வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ள னர். தருமபுரி மாவட்டம், தொப்பூர் அருகே உள்ள தொப்பையாறு அணை அமைந்துள் ளது. இந்த அணையை ஒட்டிய சாலை தொப் பூரிலிருந்து பொம்மிடி பகுதிக்கு செல்லும் பிர தான தார்ச்சாலையாகும். இச்சாலையில் கன ரக வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வகை யான வாகனங்கள் செல்கின்றன. இந்நிலையில், தொப்பையாறு அணை முழு கொள்ளளவை எட்டி நிரம்பியதாலும் அணையின் தண்ணீர் சாலையின் இருபுற மும் தேங்கி நிற்கிறது. இதனால் அணையை ஒட்டி உள்ள சாலையின் பக்கவாட்டு சுவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்நிலையில், மண் அரிப்பால் சாலை ஒரு பகுதி உடைந்துள்ளது. இதையடுத்து. வெள்ளியன்று சாலையின் மற்றொரு பகுதி யும் உடைய தொடங்கியுள்ளது. கடந்தாண்டு சாலை உடைப்பை முறை யாக சீரமைக்கவில்லை. இந்நிலையில், மாற்று சாலைக்கான ஏற்பாடுகள் செய்யமால் பிரதான சாலையை தடை செய்யப்பட்டுள் ளது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிக ளும் பல கிலோமீட்டர் சுற்றி செல்கின்றனர். எனவே, சாலையை செப்பனிட்டும் வரை மாற்று பாதை அமைத்து தரவேண்டுமென பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.