districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

குட்கா  பறிமுதல்

நாமக்கல், ஏப்.23- நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே உள்ள வெப்படை பகுதியில் சுரேஷ் என்பவரது வீட்டில்  குடியேறிய வடமாநில கும் பல் குட்கா விற்பனையில் ஈடு படுவது குறித்து வெப்படை  போலீசாருக்கு தகவல் கிடைத் தது. இதையடுத்து வெப் படை போலீசார் தனிப்படை மூலம் சம்பவ இடத்திற்கு  சென்றபோது, குட்கா பொருட் களை விற்பனைக்காக வாக னத்தில் கடத்த முயன்றனர். அப்போது போலீசாரை கண் டதும் வடமாநில கும்பல் தப்பியோடியது. இதைய டுத்து வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2 டன் குட்கா பொருட்களை போலீசார் பறி முதல் செய்து, தப்பியோடிய வடமாநில நபர்களை தேடி வருகின்றனர்.

போட்டியின் போது உயிரிழந்த வீரர்

உதகை, ஏப்.23- நீலகிரி மாவட்டம், உதகையில் உள்ள சிறப்பு மேம்பாட்டு திட்ட திறந்தவெளி மைதானத்தில் 40 வயதுக்கு மேற்பட் டோருக்கான மாநில அளவிலான கூடைப்பந்து போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மாநிலத்திலிருந்து 20 அணி கள் இப்போட்டியில் பங்கு பெற்று விளையாடின. இந்நிலை யில், சனியன்று கோவை, மதுரை அணிகள் மோதின. போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது மதுரை அணியை சேர்ந்த நேருராஜன் (60) என்பவர் மயங்கி விழுந்து சம்பவ  இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவர் விளையாடி கொண்டிருக்கும் போது விழுந்து இறந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி, பெரும் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது.

விளைநிலத்தில் உயர்மின் கோபுரம் விவசாயி தற்கொலை; பரபரப்பு

ஈரோடு, ஏப்.23- ஈரோடு மாவட்டம், பெருந்துறை, கொம்மக்கோயிலில் மகேஸ்வரன் – தாமரைச்செல்வி தம்பதியினர், குழந்தை பிர ணிகாவுடன் வசித்து வந்தனர். தாமரைசெல்வியின் பூர்வீக நிலத்தில் உயர் மின்னழுத்த கோபுரம் அமைத்ததன் காரணமாக விவசாயம் பாதிக்கப்பட்டது. இதனால் மனம் உடைந்த தாம ரைச்செல்வி கடந்த இரண்டரை வருடங்களாக மன நலம் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சனி யன்று மகேஸ்வரன், பிரணிகாவை அவரது பாட்டி வீட்டில் விட்டு, வேலைக்காக சென்றுள்ளார். அங்கிருந்து தாமரைச் செல்விக்கு போன் செய்துள்ளார். போன் எடுக்காத நிலை யில் வீட்டில் வந்து பார்த்தபோது கதவு உள்பக்கமாக தாழிடப் பட்டிருந்தது. தட்டி பார்த்தும் திறக்காததால், கதவை உடைத்து சென்ற போது தாமரைசெல்வி மின்விசிறியில் தூக்கு மாட்டி இறந்த நிலையில் கிடந்துள்ளார்.  அவரை மீட்டு, பெருந்துறை ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர், வரும் வழியிலேயே இறந்து விட்டதாகக் கூறி னார். இதுகுறித்து வெள்ளோடு காவல் நிலையத்தில் வழக் குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தருமபுரி ஔவையார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தகைசால் பள்ளியாக தேர்வு: ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு

தருமபுரி, ஏப்.23- தருமபுரியில் கடந்த 166 ஆண்டு களாக செயல்பட்டு வரும் பழமை யான ஔவையார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தகைசால் பள்ளி யாக தேர்ந்தெடுக்கப்பட்டு, பள்ளி மேம்பாட்டிற்காக ரூ.15 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டம், கல்வி கற்ப தில் பின்தங்கியிருந்தாலும், 1857 ஆம் ஆண்டு ஔவையார் பள்ளி தெலுங்கு துவக்கப்பள்ளியாக துவங்கப்பட் டது. இதன்பின் 1884 ஆம் ஆண்டில் நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப் பட்டது. கடந்த 1917 ஆம் ஆண்டில் உயர்நிலைப்பள்ளியாக மாறியது. தொடர்ந்து 1920 ஆம் ஆண்டில் 10  ஆம் வகுப்பு துவங்கப்பட்டது. இரு பாலர் பள்ளியாக இருந்து வந்த  ஔவையார் பள்ளி, 1978 ஆம் ஆண்டு பெண்கள் அரசு பள்ளியாக மாற்றப் பட்டது. தருமபுரி நகரில் பெரும்பா லான மாணவிகள், ஔவையார் பள் ளியில் தான், தங்களது கல்வியை கற்று வருகின்றனர். தற்போது இந்த பள்ளியில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை 3 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வரு கின்றனர். மிகவும் பழமையான இப் பள்ளிக்கு சான்றாக, தலைமையாசிரி யர் அலுவலக கட்டடம் 63 ஆண்டு களாகியும் உறுதியுடன் உள்ளது. இதற்கிடையே தமிழ்நாடு முதல் வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவை யில் 110 விதியின் கீழ், தமிழ்நாட்டில்  தகைசால் பள்ளிகள் அமைக்கப் படும், என்றார்.

இதையடுத்து, தரும புரி மாவட்டத்தில் ஔவையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, கிருஷ் ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி  அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சேலம் மாவட்டத்தில் குகை முனி சிபல் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளும், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல் பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திரு வண்ணாமலை, கள்ளக்குறிச்சி, ஈரோடு, உதகை, கோவை, திண்டுக் கல், கரூர், திருச்சி, கடலூர், நாகைப் பட்டினம், தஞ்சாவூர், சிவகங்கை, மதுரை, தூத்துக்குடி, திருநெல் வேலி, கன்னியாகுமரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்கள் என 28 மாவட்டங்களில் தலா ஒரு பள்ளி வீதம் தேர்வு செய்யப் பட்டு தகைசால் பள்ளியாக மாற்ற  ரூ.171 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள் ளது. இதுகுறித்து பள்ளி தலைமையா சிரியர் தெரசாள் கூறுகையில், தரும புரி மாவட்டத்தில் நமது ஔவையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தகைசால் பள்ளியாக தேர்வு செய்யப் பட்டு, ரூ.15 கோடி நிதி ஒதுக்கப்பட் டுள்ளது. இப்பள்ளி தேர்வானதற்கு மாவட்ட நிர்வாகத்திற்கும், பள்ளி கல் வித்துறை நிர்வாகத்திற்கும் நன் றியை தெரிவித்துக்கொள்கிறேன். இதையொட்டி கடந்த ஏப்.17 மற்றும் 18 ஆம் தேதியில் 28 பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த நிதியின் மூலம், பள்ளிக்கு 20 புதிய வகுப்பறை கள், புதிய கழிவறைகள், பாதுகாக்கப் பட்ட குடிநீர், கலையரங்கம், தலை மையாசிரியர் அறை புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற உள் ளது. மேலும் நவீன ஆய்வகம்,  ஸ்மார்ட் வகுப்பறைகள் கட்டப்பட உள் ளன. இதன் மூலம் மாணவிகளின் கல்வி தரம் உயர்வதோடு, அதிக எண் ணிக்கையிலான மாணவிகள் இங்கு  சேர்ந்து கல்வி கற்க இயலும், என் றார்.

ரமலான் வாழ்ந்து சொல்லி மஞ்சப்பை விழிப்புணர்வு

திருப்பூர், ஏப்.23- தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரியம் மற்றும் திருப்பூர் சிக்கண்ணா அரசு கலை கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம்  அலகு-2 இணைந்து ரம்ஜான்  தினத்தை முன்னிட்டு சனியன்று பெரிய பள்ளிவாசலில் 1499 ஆவது நிகழ்வாக  “நம் பூமியில் முதலீடு செய்யுங்கள்” என்ற மையக்கருத்தை வலியுறுத்தி வித்தியாசமான முறையில் நெகிழி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலையில் தெற்கு சட்ட மன்ற உறுப்பினர் செல்வ ராஜ், மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், பெரிய பள்ளிவாசல்  தலைவர் ஷாஜகான் ஆகியோர் கலந்து கொண்டு பொது  மக்களுக்கு துண்டு பிரசுரங்களையும், மஞ்சப்பைகளை யும் வழங்கினர். மாணவ செயலர்கள் சுந்தரம், காமராஜ், ராஜபிரபு, பூபதி  ராஜா ஆகியோர் தலைமையில் பெரிய பள்ளிவாசலில் தொழுகைக்கு வரும் மக்களிடம், அனைவரும் ஒன்றி ணைந்து பிளாஸ்டிக் பொருட்களை அகற்றி நெகிழி இல்லா  தமிழகமாக மாற்றுவோம் என்று விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர். 20க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணித் திட்ட மாணவ,  மாணவிகள் கலந்து கொண்டு இஸ்லாமியர்கள் போல் உடை அணிந்தும், மஞ்சப்பைகளையும்,  விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், துண்டு பிர சுரங்களையும் வழங்கினர். கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் நிகழ்ச்சி ஏற்பாடுகளைச் செய்திருந்தார். 

ஆதார் புதுப்பித்தல்: திருப்பூர் மாவட்டத்தில் ஒரு மாத வாகனப் பிரச்சாரம் தொடக்கம்

திருப்பூர், ஏப்.23– ஆதார் அட்டையில் உள்ள டெமோகிராபிக் எனப்படும் விப ரங்களின் துல்லிய தன்மை தொடர்வதற்கு, ஆதார் ஆவணங் களைப் புதுப்பித்தல் குறித்து திருப்பூர் மாவட்டத்தில் ஒரு மாத  காலத்துக்கு விழிப்புணர்வு வாகனப் பிரச்சாரம் வெள்ளி யன்று தொடங்கப்பட்டது. ஆதார் ஆவணங்களை புதுப்பிக்கவும், அதற்கு அடையா ளச் சான்று மற்றும் முகவரிச் சான்று ஆவணங்களைப் பதி வேற்றவும் ஆன்லைன் செயல்முறை குறித்து பொதுமக்களி டம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பிரச்சார வாகனத்தை மாவட்ட  ஆட்சியர் எஸ்.வினீத் கொடியசைத்து துவக்கி வைத்தார். திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு நகரங்கள் மற்றும் கிரா மங்களுக்கு வெள்ளியன்று முதல் மே 20 வரை 30 நாட்க ளுக்கு விழிப்புணர்வு பிரச்சார வாகனம் பயணிக்கிறது. விழிப் புணர்வு பிரச்சாரம் நடைபெறும் நாட்களில் இப்பிரச்சார வாக னம் மூலம் ஆதார் ஆவணங்களை பொதுமக்கள் புதுப்பித்து  கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சி யில், ஆதார் ஆணையத்தின் உதவி மேலாளர் ப.தியாகரா ஜன், மாவட்ட ஒருங்கினைப்பாளர் (எல்காட்) நாகராஜ் உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஏப். 30க்குள் சொத்து வரி செலுத்தினால் 5 சதவிகித ஊக்கத்தொகை: மாநகர ஆணையர் தகவல்

திருப்பூர், ஏப். 22 - திருப்பூர் மாநகரத்தில் சொத்து வரி செலுத்துவோர் நடப்பு  2023 - 24 நிதியாண்டுக்கான முதல் அரையாண்டு சொத்து வரியை ஏப்.30 ஆம் தேதிக்குள் செலுத்தினால் ஐந்து சத விகிதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று மாநகராட்சி  ஆணையர் பவன் குமார்  கூறியிருக்கிறார். தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் சட்டம் 1998க்கு திருத் தங்கள் மேற்கொள்ளப்பட்டு, கடந்த ஏப்ரல் 13 ஆம் தேதி முதல்  தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் விதிகள் 2023 நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. இந்த சட்ட பிரிவு 84 (1) ல் சொத்து வரியை  முதல் 30 நாட்களுக்குள் செலுத்தும் உரிமையாளர்களுக்கு, 5  சதவீத ஊக்கத் தொகை, அதிகபட்சமாக ரூ.5,000 வரை வழங் கப்படும். சொத்து உரிமையாளர்கள், சொத்து வரியை தங்க ளது இல்லம் தேடி வரும் வரி வசூலிப்பாளர்கள், திருப்பூர்  மாநகராட்சி அலுவலங்களில் அமைந்துள்ள அரசு இசேவை  மையங்கள் ஆகியவற்றில் கடன் மற்றும் பற்று அட்டை, காசோலை மற்றும் வரைவோலை மூலமாகவும், திருப்பூர்  மாநகராட்சி இணையதளம், (NEFT) மற்றும் (RTGS) ஆகிய வற்றின் மூலமாக டிஜிட்டல் பரிவர்த்தனை வாயிலாக சொத் துவரி செலுத்தவும் வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே, திருப்பூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட உரிமை யாளர்கள் தங்களது சொத்து வரியை ஏப்.30 ஆம் தேதிக்குள்  செலுத்தி ஊக்கத் தொகை பெறுமாறு மாநகராட்சி ஆணையா ளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் வியாழனன்று வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருக்கிறார்.

தேர்த்திருவிழா ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்

அவிநாசி, ஏப்.23 - அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் தேர்த்திருவிழா குறித்து அரசு துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைப்புக்குழு ஆலோசனைக் கூட்டம் அவிநாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் வெள்ளியன்று நடைபெற்றது. அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் தேர்த்திருவிழா ஏப்.25 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, மே.2, மே.3 ஆகிய தேதிகளில் பெரிய தேரோட்டமும், மே.4ஆம் தேதி (அம்மன் தேர்) சிறிய தேரோட்டத்துடன் மே.8 ஆம் தேதியன்று விழா நிறைவு பெறுகிறது. இதையொட்டி நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்திற்கு திருப்பூர் சார் ஆட்சியர் ஸ்ருதன் ஜெய்நாராயணன் தலைமை வகித்தார். இதில், தேரோட்டம் நடைபெறும் வீதிகளை ஆய்வு செய்து சீரமைத்தல், சாலையின் குறுக்கே செல்லும் மின் இணைப்பு, கேபிள் இணைப்புகள், ஆக்கிரமிப்பு, மரக்கிளைகள் ஆகியவற்றை அகற்றுதல், குடிநீர் வழங்குதல், தற்காலிக கழிவறைகள் அமைத்தல், பொது சுகாதார வசதிகள் ஏற்படுத்துதல், கண்காணிப்பு கேமரா பொருத்துதல், தீயணைப்பு, அவசர கால மருத்துவ வசதிகள், தேரோட்டத்தின்போது மண்டபங்களில் வழங்கப்படவுள்ள அன்ன தானத்தை தர ஆய்வு செய்து வழங்குவது என்பதை உறுதி செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. அதேபோல தேரோட்ட நாட்களில் பொதுமக்களுக்கு கோயிலில் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில், கோயில் நிர்வாகத்தினர், அவிநாசி பேரூராட்சி நிர்வாகத்தினர், காவல்துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்புத் துறை, மின்உற்பத்தி மற்றும் மின்பகிர்மான கழகம், பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை, வருவாய்த் துறையினர், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, உணவு பாதுகாப்புத் துறையினர், கோயில் மிராசுதாரர்கள், அரசு துறையினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பட்டுக்கோட்டையார் நகர் பட்டா பிரச்சனை:  தொடர் உண்ணாவிரதம் இருக்க முடிவு

திருப்பூர், ஏப்.23 – பட்டுக்கோட்டையார் நகர் பட்டா பிரச்ச னைக்கு தீர்வு காண வலியுறுத்தி தொடர் உண்ணாவிரதம் இருக்க குடியிருப்போர் நலச் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர். திருப்பூர் மாநகராட்சி, 55ஆவது வார்டு, பட்டுக்கோட்டையார் நகர் குடியிருப்போர் நலச் சங்கத்தின் கூட்டம் நிர்வாகக்குழு உறுப் பினர் ஆறுக்குட்டி தலைமையில் நடை பெற்றது. சங்கத்தின் தலைவர் என்.சேகர்,  செயலாளர் எஸ்.சுந்தரம், பொருளாளர் கு.ந. தங்கராசு, துணை தலைவர் கணேசன், துணை  செயலாளர் சினிவாசன், நிர்வாக குழு  உறுப்பினர்கள் கோவிந்தராஜ், செந்தில் குமார், கதிரேசன், வேலுச்சாமி உள்ளிட்ட திரளான மக்கள் கலந்து கொண்டனர்.  இக்கூட்டத்தில், பட்டுக்கோட்டையார் நகரில் 8 வீதிகள் உள்ளன. அனைத்து சாலை களும் குண்டும், குழியுமாக உள்ளன. குடிநீர்  பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகிறது. சாக்கடை சுத்தம் செய்யாமல் தேங்கி கிடக்கிறது. எனவே அடிப்படை வசதிகள் கேட்டு மே 8ஆம் தேதி மாநகராட்சியில் மனுக்  கொடுக்கும் போராட்டம் நடத்துவது என்றும்,  பட்டுக்கோட்டையார் நகர் வடக்கு பகுதி  வீட்டுமனை பட்டா பிரச்சனையில் அதிகாரி களின் மெத்தன போக்குகின் காரணமாக நீண்டகாலமாக கிடப்பில் உள்ளது. அவற் றிற்கு உடனடியாக தீர்வு காண வலியுறுத்தி யும் மே மாதம் கடைசியில் தொடர் உண்ணா விரதம் இருப்பது என்றும் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.