districts

img

பள்ளி பாடத்திட்டங்களில் ஆணாதிக்க கருத்துக்கள்

திருப்பூர், மே 30- பள்ளி பாடத்திட்டங் களில் ஆணாதிக்க கருத்துக் கள் நீக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந் துள்ளது. காங்கயத்தில் பெரி யாரின் பெண்கள் அமைப்பு சார்பில், பெண்கள் மீதான பாலியல் ஒடுக்கு முறைகளும், தீர்வுகளும் எனும் தலைப்பில் கருத்தரங்கம் ஞாயி றன்று மாலை தீயணைப்பு நிலையம் அருகே  உள்ள தனியார் மண்டபத்தில் நடை பெற்றது. இந்த கூட்டத்திற்கு அமைப்பின் நிர்வாகி கனிமொழி தலைமை ஏற்றார். பள்ளி பாடத்திட்டங்களில் இருந்து ஆணாதிக்க கருத்துக்கள் நீக்கப்பட வேண்டும். பெண்கள் மீதான குற்றத்திற்கு பெண் நீதிபதியே விசாரணை செய்து தீர்ப்பு  வழங்க வேண்டும். வாழ்வற்ற பெண் களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பொருட்டு மகளிர் பாதுகாப்பு இல்லங்கள் தாலுகா  தோறும் அமைக்கப்பட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக, பெண்கள் கலந்து கொண்ட  கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் பேராசிரியர் உமாராணி, ஆசிரியர் சசிதா, ஆதித்தமிழர் பேரவையின் மாவட்ட மக ளிர் அணி தலைவர் சாவித்திரி, பெரியாரின் பெண்கள் அமைப்பின் காங்கயம் நிர்வாகி கள் ஜோதி, ஜென்னி ரூபி, லோகமாதா உள் ளிட்டோர் பங்கேற்று, உரையாற்றினர். இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.