districts

img

உடுமலை அரசு மருத்துவமனையில் பல ஆண்டுகள் செயல்படாமல் உள்ள நோயாளிகள் நல சங்கம்

உடுமலை, ஏப்.3- உடுமலை அரசு மருத்துவமனையில் பல  ஆண்டுகள் செயல்படாமல் உள்ள நோயாளி கள் நலசங்கத்தின் கூட்டத்தை கூட்ட வேண் டும் என்று பொது மக்கள் கோரிக்கை வைத் துள்ளார்கள். தமிழகம் முழுவதும் அரசு மருத்துவம னைகளில் நோயாளிகளின் நலன்களை காக் கும் வகையிலும், அடிப்படை பிரச்சனை களை அரசின் கவனத்திற்கு கொண்டு செல் லும் வகையில் நோயாளிகள் சங்கம் செயல்ப டுத்தப்பட்டு வருகிறது. ஆனால், பல ஆண்டுக ளாக உடுமலை அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் நல சங்கத்தின் கூட்டம் பெயர ளவில் கூட நடத்தவில்லை. இதனால் மருத்து வமனைக்கு எந்த அடிப்படை தேவையும் நிறைவேற்றப்படாமல் உள்ளது. சங்கத்தின் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. தமிழ்நாட்டில் கொரானா பரவல் அதிக ரித்திருக்கும் நிலையில், உடுமலை அரசு  மருத்துவமனை புதிய கட்டிட வேலைகள் இன்னும் முடிக்கப்படாமல் உள்ளது. கடந்த  வருடம் உடுமலை அரசு மருத்துவமனையில் பிரசவ கூடத்தில் மருத்துவர் ஒருவரால் ஏற் பட்ட பிரச்சனை பெரும் பரபரப்பை ஏற்படுத் தியது. இந்நிலையில், சில மருத்துவர்கள் மற் றும் பணியாளர்களின் நடவடிக்கையால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.  அரசு மருத்துவமனையில் உள்ள சீர்கேடுக ளைச் சரி செய்து சிறப்பான மருத்துவமனை யாக மாற்ற நோயாளிகள் சங்கம் கூட்டங் களை கூட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.