districts

img

ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகள் தவிப்பு

திருப்பூர், செப்.11 - பொங்கலூர் மேம்படுத்தப் பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலை யத்தில் போதுமான மருத்துவப் பணி யாளர்கள் இல்லாததால், சிகிச்சை  பெற முடியாமல் கிராமப்புற நோயா ளிகள் தவித்து வருகின்றனர்.  திருப்பூர் அருகே பொங்கலூ ரில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப  சுகாதார நிலையம் செயல்பட்டு வரு கிறது. சுற்று வட்டாரத்தில் முழுவ தும் கிராமப்புறங்களை கொண்ட பகுதியில் இந்த ஆரம்ப சுகாதார நிலையம் கிராமப்புற மக்களுக்கு சிகிச்சை அளிப்பதில் முக்கிய பங் காற்றி வருகிறது. கோவை திருச்சி  தேசிய நெடுஞ்சாலையில் அமைந் திருக்கும் இந்த ஆரம்ப சுகாதார  நிலையத்தை நம்பி பல்லாயிரக் கணக்கான மக்கள் உள்ளனர். விபத்து உள்ளிட்ட உயிர் காக்கும்  சிகிச்சைகளுக்கு இந்த வட்டா ரத்தைச் சேர்ந்த மக்கள் சுமார் 25  கிலோ மீட்டர் தொலைவில் உள்ள  திருப்பூருக்கு தான் பயணிக்க வேண்டி உள்ளது. பொங்கலூரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலை வில் உள்ள பல்லடத்தில் அரசு மருத் துவமனை செயல்பட்டு வருகிறது. எனினும் அங்கும் போதிய பணியா ளர்கள் இல்லாத பிரச்சனை உள் ளது.  பொங்கலூர் அரசு மேம்படுத் தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத் தில் ஐந்துக்கும் மேற்பட்ட மருத்து வர்கள் பணியாற்றுகின்றனர் என்று  இப்பகுதி மக்கள் தெரிவித்தனர். அதே சமயம் போதுமான செவிலி யர்கள், மருத்துவப் பணியாளர் கள், மருந்தாளுனர் மற்றும் இரவு  நேர காவலாளி ஆகியோர் இல்லை.  நாள் ஒன்றுக்கு 150 முதல் 200  பேர் வரை வரக்கூடிய இந்த மருத்து வமனையில் வேலை செய்யும் அரசு  மருத்துவர்கள் முடிந்த அளவுக்கு சிறப்பாக வேலை செய்ய முயற்சிக் கின்றனர். அதேசமயம் பணியாளர் கள் இல்லாததால் ஒவ்வொரு நோயாளியும் சிகிச்சை பெற நீண்ட  நேரம் தாமதம் ஏற்படுகிறது.  குறிப்பாக இங்கிருக்கும் ஆய் வகப் பணியாளர் மகப்பேறு விடுப் பில் சென்று விட்டதால், மாற்று ஏற் பாடு செய்து சமாளித்து வருகின்ற னர். எனினும் முழு நேர ஆய்வக பணியாளர் இல்லாத நிலையில் நோயாளிகளுக்கு ரத்தப் பரிசோ தனை உள்ளிட்ட ஆய்வகத் தேவை களை முழுமையாக செய்ய முடிய வில்லை.  அத்துடன் செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் போது மான அளவுக்கு இல்லாததால் சிக் கல் ஏற்படுகிறது. சுற்று வட்டார கிரா மப்புறங்களில் இருந்து வரக்கூடிய  ஏழை, எளிய மக்கள் சிகிச்சை பெற  தாமதமாவதால் தங்கள் வேலை யையும், வருமானத்தையும் இழக்க  நேரிடுகிறது.  இது தவிர, தேசிய நெடுஞ் சாலை ஓரத்தில் இந்த சுகாதார நிலையம் இருக்கக்கூடிய நிலை யில், இரவு நேரங்களில் பாதுகாப் பற்ற நிலை உள்ளது. மது போதை  ஆசாமிகள் மற்றும் சமூக விரோதி கள் இரவு நேரத்தில் சுகாதார நிலை யத்தில் அடைக்கலம் ஆகின்றனர்.  இது பல விரும்பத் தகாத சம்பவங் கள் நேரிடுவதற்கு ஆபத்தாக உள்ளது.  குறிப்பாக 30 படுக்கை வசதி  கொண்ட இந்த சுகாதார நிலையத் தில் மகப்பேறு மற்றும் மகப்பேறு அறுவை சிகிச்சை செய்து உள் நோயாளிகளாக பெண்கள் தங்கி  இருக்கும் நிலையில், அடையாளம்  தெரியாத நபர்கள் மற்றும் சமூக  விரோதிகளால் ஆபத்து ஏற்படக்கூ டிய நிலை உள்ளது. எனவே இங்கு  இரவு நேர காவலாளி நியமிப்பது மிகவும் அவசியத் தேவையாக உள் ளது.  எனவே பொது சுகாதாரத்துறை  மற்றும் மாவட்ட நிர்வாகம் பொங்க லூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேவையான மருத்துவப் பணியா ளர்கள், செவிலியர்கள், இரவு நேர  காவலாளி போன்ற பணியிடங் களை நிரப்ப வேண்டும் என்று  பொங்கலூர் வட்டார பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.