இளம் வயது திருமணங்களை தடுக்க கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றம்
நாமக்கல், அக்.2- இளம் வயது திருமணங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளி பாளையத்தில் நடைபெற்ற கிராம சபை கூட் டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் திங்களன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதன்ஒருபகுதி யாக பள்ளிபாளையம் அக்ரஹாரம் ஊராட் சிக்கான கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில், தலைவர் வசந்தி வெங்கடா ஜலம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட் டத்தில் 18 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு திரு மணம் செய்வதை தவிர்க்க வேண்டுமென குழந்தைகள் நல அமைப்பு வலியுறுத்து கிறது. அதன்படி நமது பள்ளிபாளையம் அக்ர ஹாரம் பஞ்சாயத்து பகுதியில் இளம் வயது திருமணங்கள் நடைபெற்றால், அதை ரகசி யமாக பஞ்சாயத்து நிர்வாகத்திற்கு தெரிவிக் கலாம். சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்டரீதி யான நடவடிக்கை எடுக்கப்படும். தங்கள் பெயர் விபரம் வெளியிடப்படாது. எனவே இத்தகைய முயற்சிக்கு பொதுமக்கள் அனை வரும் ஒத்துழைக்க வேண்டும். பெண் குழந் தைகளின் உயர்கல்வியில் கவனம் செலுத்த வேண்டும். மேலும், டெங்கு காய்ச்சல் அதிகளவு பரவி வருவதால் அதற்கான தடுப்பு நடவடிக் கையை துரிதப்படுத்துதல் உள்ளிட்ட நடவ டிக்கைகள் குறித்த பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்நிகழ்வில், பள்ளி பாளையம் அக்ரஹாரம் ஊராட்சி துணைத் தலைவர் சிவசுப்பிரமணியம், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சாலையில் பெருக்கெடுக்கும் கழிவுநீர்
நாமக்கல், அக்.2- நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே உள்ள காவேரி நகர் பகுதியில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்பு பகுதியிலிருந்து வெளியேறும் கழிவுநீர், கோப்பு கால்வாய் வழியாக காவிரி ஆற்றில் கலக்கும் படி செய் யப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த கோப்பு கால்வாயை நீண்ட நாட்களாக தூர்வாரப்படா ததால், கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள் ளது. இதனால் கடந்த மூன்று நாட்களாக கழிவு நீர் குமாரபாளையத்தில் இருந்து மேட்டூர் வரை செல்லும் முக்கியச் சாலையில் வெள் ளம் போல் பெருக்கெடுத்து ஓடிகிறது. ஏற்க னவே, காய்ச்சல் உள்ளிட்ட உடல் நல பாதிப்பு கள் ஏற்பட்டு வரும் சூழ்நிலையில், கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்பது, புதிய நோய்த் தொற்று ஏற்பட காரணமாக அமைந்துவிடும். நகராட்சி அதிகாரிகள் கடந்த மூன்று நாட்க ளாக கண்டுகொள்ளாத சூழ்நிலை உள்ள தால், பொதுமக்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனர். எனவே, போர்க்கால அடிப் படையில் பணிகளை மேற்கொள்ள வேண் டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறைதீர் கூட்டம்
ஈரோடு, அக்.2- ஈரோடு மின் பகிர்மான வட்ட மின் பயனீட்டாளர்க ளின் மாதாந்திர குறை தீர்க் கும் நாள் கூட்டம் புதனன்று (நாளை) ஈரோடு கோட்ட செயற்பொறியாளர் அலுவ லகத்தில் நடைபெற உள் ளது. இதில் ஈரோடு நகர் முழுவதும், கருங்கல்பாளை யம், மரப்பாலம், சூரம்பட்டி, ரங்கம்பாளையம், வீரப்பன் சத்திரம், சம்பத்நகர், திண் டல் அக்ரஹாரம் மற்றும் மேட்டுக்கடை, சித்தோடு, கவுந்தப்பாடி ஆகிய பகுதி களைச் சேர்ந்த மின் பயனீட் டாளர்கள் கலந்து கொள்ள லாம் என தெரிவிக்கப்பட் டுள்ளது.
சிஐடியு கட்டுமானத் தொழிலாளர் சங்க ஊத்துக்குளி தாலுக்கா மாநாடு
திருப்பூர், அக். 2 - திருப்பூர் மாவட்ட கட்டிடம், கட்டுமானத் தொழிலாளர் (சிஐ டியு) சங்கத்தின் ஊத்துக்குளி தாலுக்கா மாநாடு, ஊத்துக்குளி டவுன் காயத்ரி மஹாலில் ஞாயிறன்று நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு சங்கத்தின் சிறப்புத் தலைவர் ஆர்.குமார் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாய சங்க தாலுக்கா செய லாளர் எஸ்.கே.கொளந்தசாமி, தமுஎகச மாவட்டக்குழு உறுப் பினர் கை.குழந்தைசாமி ஆகியோர் வாழ்த்தி பேசினர். மாநில கட்டுமான சம்மேளன பொதுச்செயலாளர் டி.குமார் நிறைவு ரையாற்றினார். கட்டிட தொழிலாளர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும். தீபாவளி போனஸாக ₹.5000 வழங்க வேண்டும். உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. மாநாட்டில் ஊத்துக்குளி தாலுக்கா புதிய நிர்வாகிகளாக சிறப்பு தலைவர் ஆர்.குமார், தலைவர் மகேந்திரன், செயலா ளர் மணியன், பொருளாளர் அமரேந்திரன், துணைத்தலைவர் கள் சத்யநாராயணன், கருப்புசாமி, துணைச்செயலாளர்கள் சசிகுமார், காமராஜ் உள்ளிட்டு 19 பேர் கொண்ட கமிட்டி ஏகமன தாக தேர்வு செய்யப்பட்டது. தாலுக்கா துணைத்தலைவர் கே.சி.சத்யநாராயணன் நன்றி தெரிவித்தார்.
நூறு நாள் வேலை சம்பளப் பாக்கி உடனே வழங்க கிராமசபை தீர்மானம்
திருப்பூர், அக். 2 - தெற்கு அவிநாசிபாளையம் ஊராட்சியில் திங்களன்று நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் இந்த ஊராட்சிக்கு உட் பட்ட 100 நாள் வேலை செய்யும் பணியாளர்களுக்கு சம்பள பாக்கியை உடனடியாக தரக்கோரியம், கொடுவாய் பகுதி ஏ. கே.எஸ். நகர் பகுதியில் குண்டும், குழியுமாக இருக்கின்ற வழித்தடங்களை சரி செய்ய கோரியும், தீர்மானம் நிறைவேற் றப்பட்டது. இதில் விதொச ஒன்றிய செயலாளர் ஜி.சுந்தரம், கமிட்டி உறுப்பினர் எஸ்.சிவசாமி ஆகியோர் கலந்து கொண்ட னர்.
வகுப்புக்கு ஒரு ஆசிரியர் நியமிக்க கிராமசபையில் தீர்மானம்
திருப்பூர், அக். 2 - காங்கேயம் வட்டம் பழையகோட்டைப் புதூர் அரசு நடு நிலைப் பள்ளிக்கு வகுப்புக்கு ஒரு ஆசிரியர் நியமிக்க வேண் டும் என கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கிராம சபைக் கூட்டம் ஊராட்சி மன்றத் தலைவர் எம். மீனாட்சி தலைமையில் முள்வாடிப்பாளையத்தில் நடை பெற்றது. பழையகோட்டை புதூர் பள்ளியில் 170 குழந்தைகள் படித்து வருகின்றனர். குழந்தைகளின் கல்வித் தரம் உயர 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை ஒர் ஆசிரியர் வீதம் இடைநிலை ஆசிரியர் நியமிக்க வேண்டும். 6 முதல் 8 வகுப்புகளுக்கு ஆங்கிலம் மற்றும் அறிவியல் பாடங்களுக்கு பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப் பின் நிர்வாகிகள், அரசுத் துறைகளில் பிரதிநிதிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
மின் கட்டண உயர்வை ரத்து செய்ய சைமா 67ஆவது மகாசபை வலியுறுத்தல்
திருப்பூர், அக். 2 - அபரிமிதமான மின் கட்டண உயர்வை ரத்து செய்யுமாறு தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம் (சைமா) 67 ஆவது ஆண்டு மகாசபை வலியுறுத்தி உள்ளது. கடந்த வெள்ளியன்று சைமா அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சங்கத் தலைவர் ஏ.சி.ஈஸ்வரன் தலைமை ஏற்று, தற்போதைய சூழ்நிலையில் பின்னலாடைத் தொழில் சந்தித்து வரும் சிரமங்களையும், அதை எதிர்கொள் வது பற்றியும் பேசினார். பொதுச் செயலாளர் கீதாஞ்சலி எஸ். கோவிந்தப்பன் ஆண்டறிக்கை முன்வைத்தார். பொருளாளர் ஆர்.சுரேஷ்குமார் வரவு செலவு அறிக்கை சமர்ப்பித்தார். சைமா சங்கத்திற்கு புதிய இணையதளம் பற்றி துணைத் தலைவர் எஸ்.பாலசந்தர் விளக்கினார். தொழில் துறையின் சிறு தவறுகளுக்கு ஜிஎஸ்டி துறை சட்டவிதிகளுக்கு உட்பட்டு குறைந்தபட்ச அபராதம் மட்டுமே விதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தேசிய பள்ளி அளவிலான கராத்தே போட்டிக்கு திருப்பூர் பள்ளி மாணவர்கள் இருவர் தேர்வு
திருப்பூர், அக. 2 - திருப்பூர் ஏவிபி டிரஸ்ட் நேஷனல் மெட்ரிகுலேஷன் மேல் நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வரும் எம்.ஆகாஷ் என்ற மாணவர் தேசிய பள்ளி அளவிலான காராத்தே விளை யாட்டுப் போட்டிக்குத் தேர்வாகி இருக்கிறார். 67ஆவது தேசிய பள்ளி அளவிலான கராத்தே போட்டி யில் பங்கேற்பதற்கான தமிழ்நாடு அளவிலான போட்டிகள் கோவை கேபிஆர் பொறியியல் தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெற்றது. இதில் 17 வயதுக்கு உட்பட்டோர் 78 கிலோ குமிட்டி பிரிவில் மாணவர் ஆகாஷ் முதலிடத்தைப் பெற் றார். இதன் மூலம் அவர் 67ஆவது தேசிய பள்ளி அளவி லான போட்டிக்குத் தேர்வாகி இருக்கிறார். அதேபோல் 14 வயதுக்கு உட்பட்டோர் 55 கிலோ சிறு வர்கள் குமிட்டி பிரிவில் திருப்பூர் பிளாட்டோ அகாடமி மெட்ரி குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்புப் படிக்கும் கே.எஸ்.ஸ்ரீகராளன் முதலிடம் பெற்று தேசிய பள்ளி அளவி லான போட்டிக்குத் தேர்வு பெற்றிருக்கிறார். ஆலன் திலக் கராத்தே பள்ளி பயிற்சியாளர் ஸ்ரீதரன் இத்தகவலைத் தெரி வித்துள்ளார்.
அனைத்து தொழில் அமைப்புகள் சேர்ந்து ஒரே கூட்டமைப்பாக செயல்பட முடிவு
திருப்பூர், அக். 2- திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழில் அமைப்புகள் ஒரே கூட்டமைப்பாக செயல்படுவது என்று முடிவு செய்துள்ளனர். திருப்பூரில் உள்ள தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்க (சைமா) அரங்கில் சனியன்று நடந்த கூட்டத்தில் அனைத்து தொழில் துறை சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு இதுகுறித்து தீர்மானம் நிறைவேற் றினர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழில் அமைப்புகளையும் ஒருங்கி ணைத்து ஒரே அமைப்பாக ஃபெடரேஷன் ஆக உருவாக்குவது என்று தீர்மானிக்கப் பட்டது. தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர் வோர்கள் கூட்டமைப்பினர் எடுக்கும் முயற் சிக்கும், போராட்டத்திற்கும் இந்த திருப்பூர் மாவட்ட தொழில் அமைப்புகளின் கூட்ட மைப்பு முழு ஒத்துழைப்பையும் ஆதரவை யும் வழங்கும் என்றும் தீர்மானம் நிறைவேற் றப்பட்டது. அக்டோபர் 4ஆம் தேதி மதுரையில் நடக் கும் மாநிலம் தழுவிய, தமிழ்நாடு அனைத்து தொழில் அமைப்பு சங்க நிர்வாகிகள் கூட்டத் தில் திருப்பூர் மாவட்ட தொழில் அமைப்புக ளின் சார்பாக கலந்துகொண்டு ஆதரவை அளிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் கிரேசியஸ் கோபி பழனியப்பன், டெக்பா ஸ்ரீ காந்த், டீமா முத்துரத்தினம், சைமா தலைவர் ஈஸ்வரன், துணைத்தலைவர் பாலசந்தர், நிட்மா தலைவர் அகில் ரத்னசாமி, டெக்மா தலைவர் மார்ஸ் கிருஷ்ணன், மற்றும்டையிங் இணைச்செயலாளர் செந்தில், காம் பேக்ட்டிங், எம்பிராய்டரி, ரைசிங், பிரின்டிங், கிரில், கிரசர் உட்பட 36 சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மகாத்மா காந்தியடிகள் பிறந்த நாள்
திருப்பூர், அக். 2 - ஊத்துக்குளி அருகே மொரட்டுப்பாளையம் அரசு ஆரம்பப் பள்ளி முன்புள்ள மகாத்மா காந்தியடிகள் திரு வுருவ சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊத்துக் குளி வட்டக் குழு சார்பில் மலர் மாலை அணிவித்து மரி யாதை செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ஆர்குமார், வட்டக்குழு செயலாளர் எஸ்.கே.கொ ளந்தசாமி மற்றும் எம்.ஆர். ரங்கசாமி, ராஜா, எஸ்.கோபா லகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விமான டிக்கெட் போல் உயர்ந்த ஆம்னி பேருந்து கட்டணம்
சென்னை, அக்.2- தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில் இருந்தும் சென்னைக்கு வரும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பல மடங்கு உயர்ந்திருப்பது பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தொடர் விடுமுறை தமிழ்நாட்டில் கடந்த 28ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை அறி விக்கப்பட்டது. மேலும் 28ஆம் தேதி வியாழக் கிழமை மிலாடி நபியை முன்னிட்டு விடு முறை அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வார இறுதிநாட்களாக அமைந்தது. அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி கொண்டாடப்படவுள்ளது. இதனால் 5 நாட் கள் தொடர் விடுமுறை நாட்களாக அமைந் தது. சென்னையில் இருந்து பலரும் விடு முறையை கழிக்க தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர். கட்டணம் உயர்வு தமிழக அரசு சார்பில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட பல்வேறு நகரங் களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப் பட்டன. அனைவரும் மீண்டும் சென்னை திரும்ப உள்ள நிலையில் ஆம்னி பேருந்து களின் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள் ளதால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 3 மடங்கு உயர்வு தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில் இருந்து சென்னைக்கு வரும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் 3 மடங்கு வரை உயர்ந்துள்ளது. நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு வரும் ஆம்னி பேருந்தில் ஒரு டிக்கெட் விலை 4,620 ரூபாயாக உயர்த்த ப்பட்டுள்ளது. அதேபோல் நெல்லையில் இருந்து சென்னைக்கு ஆம்னி பேருந்து கட்டணம் 4,700 ரூபாயாகவும், மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து சென்னைக்கு ஆம்னி பேருந்துகளின் டிக்கெட் 4,710 ரூபாயா கவும் அதிகரிக்கப்பட்டுள்ளது, தூத்துக்குடி யில் இருந்து சென்னை வரும் ஆம்னி பேருந்துகளின் கட்டணமும் உயர்ந்துள்ளது. கோவையில் இருந்து சென்னைக்கு 4,510 ரூபாயாகவும், திருச்சியில் இருந்து சென்னைக்கு 4,600 ரூபாயாகவும் அதி கரித்துள்ளது. ஆம்னி பேருந்துகளின் கட்டண உயர்வால் பயணிகள் சென்னை திரும்ப முடி யாமல் அவதி அடைந்துள்ளனர். விழாக்காலங்களிலும், தொடர் விடு முறை நாட்களிலும் ஆம்னி பேருந்து களில் கட்டணம் பல மடங்கு உயர்த்தி வசூலிக்கப்படுகிறது. ஆம்னி பேருந்து களின் கட்டணக் கொள்ளையை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பயணிகள் சிரமம் இன்றி ஊர் திரும்ப அரசு கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு
சென்னை, அக்.2- தமிழகத்தில் சில வாரங்களாக பகலில் கடும் வெயிலும் இரவு கன மழையும் பெய்து வருகிறது. எப்போது மழை பெய்யும், எப்போது வெயில் அடிக்கும் என்று தெரியாத சூழல்தான் மக்கள் மத்தியில் நிலவி வரு கிறது. மாறி வரும் வானிலை மாற்றம் காரண மாக பலருக்கும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. கன மழை காரணமாக கொசுப் புழுக்கள் உற்பத்தி அதிகரித்ததால், டெங்கு காய்ச்சல் பரவலும் அதிகரித்துள்ளது. இந்த நிலை யில் சில வாரங்களில் தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தொடங்கவுள்ளது. இதனால் மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தமிழக அரசு அறி வுறுத்தியுள்ளது. இந்த நிலையில் வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, திங்களன்று (அக்,2) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும், அக். 3ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் கூறியுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப் படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்ன லுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்த பட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும் என்றும் தெரி விக்கப்பட்டுள்ளது.
கனரக வாகனங்கள் செல்ல தடை விதிப்பு
நாமக்கல், அக்.2- நாமக்கல் மாவட்டம், பள் ளிபாளையத்தில் சென்னை - கன்னியாகுமரி தொழிற்தட திட்டத்தில், மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடை பெற்று வருகிறது. பள்ளி பாளையம் பிரதான சாலை யில் பணிகள் நடைபெற்று வருவதால், ஆவரங்காடு வழி யாக ஏராளமான வாகனங் கள் உள்ளூர் மற்றும் திருச் செங்கோடு சாலைக்கு சென்று வருகின்றன. இதனிடையே பழைய ஈ.ஆர். திரையரங் கம் சாலையில் ஒரே நேரத் தில் அதிகளவு கனரக குறு கிய சாலையில் செல்ல முடி யாமல் போக்குவரத்து பாதிக் கப்பட்டது. இதுகுறித்து பள் ளிபாளையம் நகராட்சி நிர் வாகத்திற்கு புகார்கள் வந்த நிலையில், பழைய ஈ.ஆர் திரையரங்கம் வழியாக செல்ல கனரக வாகனங்க ளுக்கு தடை விதிக்கப்பட் டுள்ளது. மேலும், ஆவரங் காடு எம்ஜிஆர் சிலை சாலை வழியாக கனரக வாகனங் கள் வெளியேற வேண்டும் என அறிவிப்பு பலகை வைக் கப்பட்டுள்ளது.'