districts

img

போதிய இருக்கைகள் இல்லாததால் அவதிக்குள்ளாகும் பயணிகள்

அன்னூர், மார்ச் 15- அன்னூர் பேருந்து நிலை யத்தில் போதிய இருக்கை கள், நிழற்குடை அமைத்து தருமாறு பேரூராட்சி நிர்வா கத்தை பேருந்து பயணி கள் கோரிக்கை விடுத்துள் ளனர்.  கோவை மாவட்டம்,  அன்னூர் பகுதி கோவை மற்றும் திருப்பூர்,  ஈரோடு என மூன்று பகுதிகளையும் இணைக்கக் கூடிய பகுதியாக உள்ளது.  இப்பகுதியில் விவசாயம் பிரதானமாகும்.  இந்த பகுதியில் மக்கள் வேலைவாய்ப்புக் காக சத்தியமங்கலம்,கோவை,திருப்பூர்  போன்ற வெளியூர் செல்வோர் இப்பேருந்து  நிலையத்திலிருந்துதான் பயணம் மேற் கொள்கின்றனர். இதனால் தினந்தோறும்  ஆண்கள், பெண்கள் என ஆயிரக்கணக் கானோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில், பேருந்து நிலையத்தில் போதியளவில் இருக்கை வசதிகள் இல்லாத தால் பேருந்துக்காக வரும் பயணிகள் பேருந்து நிலையத்தில் தரையில் அமர்ந்து காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், நிழற்குடைகள் இன்றி வெயிலில் காத்திருக்கின்றனர்.  குறிப்பாக, வயது முதிர்ந்த பெரியவர்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனை  அன்னூர் பேரூராட்சி நிர்வாகம் கண்டு கொள்வதில்லை என பேருந்து பயணிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். அத் துடன் பேருந்து நிலையம் முறையாக தூய்மை பணி கூட மேற்கொள்ளாத நிலை உள்ளதாக பயணிகள் கூறுகின்றனர்.  இதுகுறித்து, பலமுறை அன்னூர் பேரூ ராட்சி நிர்வாகத்தில் புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டு மென பயணிகள் கோரிக்கை விடுத்துள் ளனர்.