மேட்டுப்பாளையம், நவ.19- உதகை மலை ரயில் சேவை ஞாயி றன்று மீண்டும் துவங்கியதால், பய ணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோவை, நீலகிரி மாவட்டங்க ளில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதன் கார ணமாக மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்டு, தண்டவாளத்தில் பாறை கள் உருண்டு விழுந்தன. மேலும் பாதையோரத்தில் நின்றிருந்த மரங் கள் வேரோடு சரிந்து தண்டவாளத் தின் குறுக்கே விழுந்தன. இதன் கார ணமாக மேட்டுப்பாளையம் - உதகை இடையே இருமார்க்கங்களிலும் மலை ரயில் சேவை, கடந்த நவ.4 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை யும், நவ.9 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரையும் ரத்து செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து மலை ரயில் பாதையில் சீரமைப்பு பணிகள் தொடங்கியது. இதற்கான பணியில் 25க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழி யர்கள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், மேட்டுப்பாளையம் – உதகை இடையேயான ரயில் தண்ட வாளப்பாதை முழுமையாக சீரமைக் கப்பட்டது. இதைத்தொடர்ந்து மேட் டுப்பாளையம் - உதகை இடையே இருமார்க்கங்களிலும் மலை ரயில் சேவையை ஞாயிறன்று முதல் தொடங்குவது என ரயில்வே அதிகா ரிகள் முடிவு செய்தனர். அதன்படி மேட்டுப்பாளையத் தில் இருந்து மலை ரயில் சேவை ஞாயிறன்று காலை தொடங்கியது. அப்போது 100க்கும் மேற்பட்ட சுற் றுலா பயணிகள் பயணச்சீட்டு எடுத்து மிகுந்த ஆர்வத்துடன் மலை ரயிலில் பயணம் செய்தனர். மேட்டுப்பாளை யத்தில் இருந்து உதகைக்கு மலை ரயிலில் செல்லும்போது அந்த வழி யில் உள்ள இயற்கை காட்சிகள், பள் ளத்தாக்குகள் மற்றும் நீர்வீழ்ச்சி களை அருகில் இருந்து பார்த்து ரசிக்க முடியும். எனவே சுற்றுலா பயணிகள் மிகுந்த ஆர்வத்துடன் மலைரயிலில் பயணம் சென்று வந்தனர். 11 நாட்க ளுக்கு பிறகு மலை ரயில் சேவை மீண் டும் தொடங்கியதால், சுற்றுலா பய ணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந் துள்ளனர்.