districts

img

போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மேம்பாலம் நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

கோபி, செப்.29- போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புறவழிச்சாலை அல் லது மேம்பாலம் அமைக்க வேண்டும் என கோபிசெட்டிபாளை யம் நகர்மன்றக் கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் சிறப்பு நகர் மன்றக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு, நகர்மன்றத்  தலைவர் என்.ஆர்.நாகராஜ் தலைமை வகித்தார். ஆணை யாளர் (பொ) பிரேம் ஆனந்த் முன்னிலை வகித்தார். இதில் நகராட்சிப் பகுதிகளில் பொது சுகாதாரம், தூய்மைப் பணி, குடிநீர், சாலை வசதிகள் குறித்து நகர்மன்ற உறுப்பி னர்கள் விவாதித்தனர். இதனைத்தொடர்ந்து, சத்தி - ஈரோடு  சாலை முக்கிய சாலையாக உள்ளதால் ஆம்புலன்ஸ், பள்ளி  கல்லூரி வாகனங்கள் அடிக்கடி செல்வதால் இடையூறு ஏற்ப டுகிறது. இதனால் விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே, வளர்ந்து வரும் நகரின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு அதி கரித்து வரும் மக்கள் தொகை அடிப்படையில் கோபி நக ராட்சி பகுதியில் மேம்பாலம் அமைக்கவும் அல்லது புறவ ழிச்சாலை அமைக்கவும் சிறப்பு தீர்மானம் நிறைவேற் றப்பட்டது.