ஈரோடு, நவ.4- சுதந்திர போராட்ட வீரர்களின் நினைவுச்சுவர் அமைக்க தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கம் மற்றும் சுக்ரா விஷன் இந்திய பவுண்டேஷன் சார்பில் கோபிசெட்டிபாளை யத்தில் உள்ள தியாகி ஜி.எஸ்.இலட்சுமண ஐயர் வாழ்ந்த இடத்தில் மண் எடுக்கும் நிகழ்வு வியாழக்கிழமை நடை பெற்றது. ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் தியாகி ஜி.எஸ்.இலட்சுமண ஐயர் வாழ்ந்த இடமான தக்கர்பாபா வித்யாலயா பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தியாகி இலட்சுமண ஐயர் சிலைக்கு திரைப்பட இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி, ஆர்.வி.உதயகுமார், பேரரசு, லிங்கு சாமி, சீனுராமசாமி, சித்ரா லட்சுமணன், ராஜசேகர், மித்ரன், ஜவஹர், அருண்ராஜா காமராஜ் ஆகியோர் மாலை அணி வித்து மரியாதை செய்தனர். இதனைத் தொடர்ந்து தியாகி இலட்சுமண ஐயரின் நினைவகத்தில் மண் எடுக்கப்பட்டது. இதில், ஏராளமானோர் பங்கேற்றனர்.