districts

img

இயற்கை முறையில் பார்த்தீனியத்தை அழிக்கலாம்: அனுபவ விவசாயிகள் வழிகாட்டல்

உடுமலை, ஏப்.7- பார்த்தீனியம் என்னும் களைச்செடி தற் போது விளைநிலங்களில் மட்டுமல்லாமல் வீதிகளிலும் பரவி விவசாயிகளுக்கும் பொது மக்களுக்கும் இடையூறு விளைவிக்கிறது. பார்த்தீனியத்தைக் கட்டுப்படுத்துவது குறித்து அனுபவ விவசாயிகள் வழிகாட்டி யுள்ளனர்.  பார்த்தீனியச் செடிகள் விஷத்தன்மை வாய்ந்தது. அது வளரும் இடத்தில் வேறு  செடிகளை வளர விடாமல் ஆக்கிரமித்து வள ரும் தன்மையுடையது. மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் தீங்கு விளைவிக்கக் கூடியதாக உள்ளது. இவற்றைக் கட்டுப்படுத் துவது மிகப்பெரிய சவாலாக உள்ளது. பார்த் தீனியத்தை கட்டுப்படுத்துவதற்கு வீரியமிக்க  களைக்கொல்லிகளை பயன்படுத்த வேண் டிய நிலை உள்ளது. அவ்வாறு பயன்படுத்தும் போது களைக்கொல்லிகளின் வீரியத்தால், வரப்புகளில் மண் அரிப்பைக் கட்டுப்ப டுத்தும் அருகம்புல், நன்மை தரும் பூச்சியி னங்கள் வளர்வதற்கு உதவும் சிறு தாவரங் கள் ஆகியவை முற்றிலுமாக அழிந்து விடுகிறது. இதனால் பிரதான பயிர்கள் பூச்சி  தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புக ளைச் சந்திக்கிறது. இந்நிலையில்,

இயற்கை  முறையில் பார்த்தீனியத்தைக் கட்டுப்படுத்து வது குறித்து அனுபவ விவசாயிகள் வழிகாட் டியுள்ளனர்.  இதுகுறித்து அவர்கள் கூறியதாவது, 1950 -60ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு கோதுமை மற்றும் உணவு தானியங்கள் இறக்குமதி செய்தபோது பார்த் தீனிய செடியின் விதைகளும் கலந்து  விட்டதாகக் கூறப்படுகிறது. இவற்றின் இலை கள் கேரட் செடிகளின் இலைகளைப் போல  காணப்படும். அதனால் இதை கேரட் களை  என்றும் கூறுவார்கள். பார்த்தீனிய விதை களில் காணப்படும் நச்சுப் பொருட்களினால் பொதுமக்களுக்கு தோல் வியாதி, கண் எரிச்சல், மூச்சுத்திணறல், ஆஸ்துமா உள் ளிட்ட அலர்ஜி நோய்கள் ஏற்படுகின்றன. மேலும் கால்நடைகளுக்குக் காய்ச்சல், அரிப்பு ஏற்படுத்தும் தன்மை இந்த செடி களுக்கு உண்டு. எனவே பார்த்தீனியத்தின் இளம் செடிகளை பூப்பதற்கு முன் உழவு செய்தோ அல்லது கையுறை அணிந்து கைக ளால் பிடுங்கி எடுத்து ஆழமாக மண்ணில், மாட்டு சாணம்,கோமியம் சேர்த்து புதைத்து விடவேண்டும். இது நன்கு மக்கியதும் இதை  அங்கக உரமாக பயன்படுத்தலாம். மேலும்  வளர்ந்த செடிகளை பூக்கும் பருவத்திற்கு முன் ஒரு லிட்டர் நீருக்கு 200 கிராம் சமை யல் உப்பு மற்றும் ஒரு மில்லி சோப்பு திரவத்தி னைக் கலந்து தெளித்தும் கட்டுப்படுத்தலாம் என்று தெரிவித்தனர்.