districts

img

இயற்கை முறையில் பார்த்தீனியத்தை அழிக்கலாம்

பார்த்தீனியம் என் னும் களைச்செடி தற் போது விளைநிலங்க ளில் மட்டுமல்லாமல் வீதிகளிலும் பரவி விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு விளை விக்கிறது. தான் வளரும் இடத்தில் வேறு செடிகளை வளர விடாமல் ஆக்கிரமித்து வளரும் குணம் கொண்ட பார்த்தீனியச் செடிகள் விஷத்தன்மை வாய்ந்தது. மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் தீங்கு விளைவிக்கக் கூடியதாக பார்த்தீனியம் உள்ளது. இவற்றைக்  கட்டுப்படுத்துவது மிகப் பெரிய சவாலாக உள்ளது. பார்த்தீனியத்தைக் கட்டுப்படுத்துவதற்கு வீரிய மிக்க களைக்கொல்லிகளைப் பயன்படுத்த வேண் டியிருக்கிறது. அவ்வாறு பயன்படுத்தும்போது களைக்கொல்லிகளின் வீரியத்தால் வரப்பு ஓரங் களில் மண் அரிப்பைக் கட்டுப்படுத்தும் அருகம்புல், நன்மை தரும் பூச்சியினங்கள் வளர்வதற்கு உதவும் சிறு தாவரங்கள் உள்ளிட்டவை முற்றிலுமாக அழிந்து விடுகிறது. இதனால் பிரதான பயிர்கள் பூச்சி தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புக ளைச் சந்திக்கிறது. இந்த நிலையில் இயற்கை  முறையில் பார்த்தீனியத்தைக் கட்டுப்படுத்துவது குறித்து அனுபவ விவசாயிகள் வழிகாட்டுகின்ற னர்.

1950-60ஆம் ஆண்டுகளில் அமெரி காவிலிருந்து இந்தியாவுக்கு கோதுமை மற்றும் உணவு தானியங்கள் இறக்குமதி செய்தபோது பார்த்தீனிய செடியின் விதைகளும் கலந்து வந்து விட்டதாகக் கூறப்படுகிறது. இவற்றின் இலைகள் கேரட் செடிகளின் இலைகளைப் போல காணப் படும். அதனால் இதை கேரட் களை என்றும் கூறு வார்கள். பார்த்தீனிய விதைகளில் காணப்படும் நச்சுப் பொருட்களினால் பொதுமக்களுக்கு தோல்  வியாதி, கண் எரிச்சல், மூச்சுத்திணறல், ஆஸ்துமா உள்ளிட்ட அலர்ஜி நோய்கள் ஏற்படுகின்றன.  மேலும் கால்நடைகளுக்குக் காய்ச்சல், அரிப்பு ஏற்படுத்தும் தன்மை இந்த செடிகளுக்கு உண்டு. எனவே பார்த்தீனியத்தின் இளம் செடிகளை பூப்ப தற்கு முன் உழவு செய்தோ அல்லது கையுறை அணிந்து பிடுங்கி எடுத்து ஆழமாக மண்ணில், மாட்டு சாணம், கோமியம் சேர்த்து புதைத்து விடவேண்டும். இது நன்கு மக்கியதும் இதை அங்க உரமாகப் பயன்படுத்தலாம். மேலும் வளர்ந்த செடிகளை பூக்கும் பருவத்திற்கு முன் ஒரு லிட்டர் நீருக்கு 200 கிராம் சமையல் உப்பு மற்றும் ஒரு மில்லி சோப்பு திரவத்தினைக் கலந்து தெளித்தும் கட்டுப்படுத்தலாம், என விவ சாயிகள் தெரிவிக்கின்றனர்.