சேலம், நவ.5- சேலம் அரசு மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று பெண் குழந்தைகளை மருத்துவமனையி லேயே விட்டுச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட பிரசவங்கள் நடைபெற்று வருகின்றன. சேலம், தருமபுரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் சேலம் அரசு மருத்துவமனையை பயன்படுத்தி வருகின்றனர். இந் நிலையில், கடந்த அக்.20 ஆம் தேதியன்று சேலம் அரசு மருத் துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு பிரசவத்தில் மூன்று பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. இதையடுத்து நல்ல நிலைமையில் பிறந்த 3 குழந்தைகளையும் தங்களால் வளர்க்க முடியாது என பெற்றோர்கள் மருத்துவமனையிலேயே விட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து மருத்துவமனை நிர்வாகத் தின் சார்பில் குழந்தைகள் பராமரிக்கப்பட்ட வந்த நிலையில், சனியன்று சேலம் மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் மருத்துவ மனைக்கு சென்று மூன்று குழந்தைகளையும் பார்வையிட்டு அதன் உடல் நலம் குறித்து மருத்துவர்களிடம் கேட்ட றிந்தார். இதைத்தொடர்ந்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலரை வரவழைத்து அவரிடம் மூன்று குழந்தைகளை யும் ஒப்படைத்ததோடு, குழந்தைகளை பாதுகாப்பாக பரா மரிக்குமாறு கேட்டுக்கொண்டார். மேலும், 60 நாட்களுக்குள் மனம் மாறி திரும்பி வந்தால் குழந்தைகள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படும். இல்லையென்றால் 3 குழந்தைகளையும் தத்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும், என தெரிவித் தார்.