districts

img

பெற்றோர்- ஆசிரியர் கழகக் கூட்டம்

தஞ்சாவூர் நவ.15- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள ஊராட்சி ஒன்றிய வடகிழக்கு பள்ளியின், மேலாண்மைக் குழு மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவி வி.நீலவேணி தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் சித்ரா தேவி வரவேற்றார். வட்டார கல்வி அலுவலர் கோ.ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். பேராவூரணி வட்டாட்சியர் க.ஜெயலெட்சுமி, ஊராட்சி ஒன்றிய ஆணையர் சு.சடையப்பன் ஆகியோர் பேசினர்.  தலைமை இடத்து துணை வட்டாட்சியர் சுந்தரமூர்த்தி, வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் முருகேசன், சித்ரா உள்ளிட்டோர் பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பள்ளி வளர்ச்சி, மாணவர்கள் கல்வி மேம்பாடு, அடிப்படை வசதிகள் செய்து தருதல் உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.