districts

img

பரம்பிக்குளம் அணை நிரம்பியது

பொள்ளாச்சி, ஜூலை 19- பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணை முழு  கொள்ளளவு எட்டியது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி மூன்று மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேற்றப் பட்டு வருகிறது. கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த  மேற்கு மலைத்தொடர்ச்சிகளில் அமைந்துள்ள பரம்பிக்குளம் அணை பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக 70 அடி கொண்ட பரம்பிக்குளம் அணை திங்களன்று தனது முழு கொள்ளளவை எட்டியது. இந்நிலை யில், அணைக்கு நீர்வரத்து 2 ஆயிரத்து 779 கன அடியாக உயர்ந்துள்ளது. இதனால், அணையின் பாதுகாப்பு கருதி மூன்று மதகுகள் வழியாக உபரிநீர் (1300 கனஅடி) வெளி யேற்றபடுகிறது. எனவே, கரையோரம் உள்ள மலைவாழ் மக்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.