தருமபுரி, டிச.28- ஒரு மாதமாக குடிநீர் வழங்காததைக் கண்டித்து, பாப்பிரெட்டிப்பட்டி - தருமபுரி சாலையில் அமர்ந்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், பொம்மிடியை அடுத்த பாப்பி ரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், துறிஞ்சிப்பட்டி ஊராட்சி, 7 ஆவது வார்டுக்குட்பட்ட பகுதியில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்ப குதிக்கு கடந்த ஒரு மாதமாக குடிநீர் விநியோகம் செய் யப்படவில்லை. இதனால் பொதுமக்கள் பல்வேறு சிர மங்களை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், உடன டியாக குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும், என வலியு றுத்தி அப்பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர், சனியன்று பாப்பிரெட்டிப்பட்டி - தருமபுரி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவ லறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஊராட்சி மன்றத் தலை வர், பொம்மிடி காவல் ஆய்வாளர், வருவாய் கோட்டாட் சியர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர், கிராம நிர் வாக அலுவலர் ஆகியோர் போராட்டக்ககாரர்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். முடிவில், சனியன்று மாலைக்குள் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், என அதிகாரிகள் உறுதியளித்தனர். அதன்பேரில் பொது மக்கள் மறியலை கைவிட்டு, கலைந்து சென்றனர்.