districts

img

காகிதமில்லா பட்ஜெட் அல்ல; மக்கள் நலன் இல்லாத பட்ஜெட்

தருமபுரி, பிப்.10- காகிதமில்லா பட்ஜெட் அல்ல,  மக்கள் நலன் இல்லாத பட்ஜெட் என்றே ஒன்றிய அரசின் பட் ஜெட்டை அழைக்க வேண்டும் என  டி.என்.வி.செந்தில் குமார் எம்.பி.,  சாடியுள்ளார். இதுதொடர்பாக தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டி.என்.வி.செந்தில்குமார் நாடாளுமன் றத்தில் நடைபெற்ற நிதிநிலை அறிக்கை விவாதத்தில் கலந்து கொண்டு பேசியதாவது, கடுமை யான நோய்த்தொற்றுக்கு பிறகு  ஒன்றிய அரசின் நிதிநிலை  அறிக்கை தாக்கல் செய்யப்பட் டது.  நோய்த்தொற்று விளைவாக பல நபர்கள் வேலை மற்றும் அத னுடன் தொடர்புடைய வருமா னத்தை இழந்துள்ளனர். தற்போது 4 சகாப்தங்களாக  இல்லாத வேலையின்மை விகிதம்  உள்ளது.  நிதிநிலை அறிக்கையில் நிதி ஒருங் கிணைப்பு நடவடிக்கை என்ற  பெயரில் சமூக நலத் திட்டங்களுக் கான நிதியை குறைத்துள்ளனர். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம்,  சுகாதாரம், கிராமப்புற மேம்பாடு போன்றவற்றிற்கான நிதி குறைத் தலில் இருந்து நாம் அறியலாம்.  உணவு மற்றும் விவசாய தேவைக்கான உர மானியம் குறைக்கப்பட்டுள்ளது. ஒன்றிய பாஜக அரசின் கொள்கை பெரும் பணக்கார நிறு வனங்களுக்கு மட்டும் சாதகமாக உள்ளது. நடுத்தர வர்க்கத்திற்கு வருமான வரி விதிப்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால், கார்ப்பரேட் வரி கூடு தல் கட்டணம் 12 சதவீதத்திலி ருந்து 7 சதவீதமாக குறைத்துள்ள னர். அதேநேரம், குடைகள் மீதான  வரியை ஏற்றி உள்ளார். மௌலானா ஆசாத் கல்வி அறக் கட்டளைக்கு முந்தைய ஆண்டுக ளில் சுமார் ரூ.70 கோடியில் இருந்து  ரூ.90 கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது அது வும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த  ஏற்றத்தாழ்வு ஏன், இந்த நிறுவனத் துக்கு இஸ்லாமியர் பெயர் இருப்ப தாலா? . மேலும், ஒன்றிய அரசு ஓய்வூதி யம் பெறுவோரின் நிலையான மருத்துவ கொடுப்பனவு மாதத் திற்கு வெறும் ஆயிரம் மட்டுமே. ஆனால், தற்போது மருந்துகள் மற்றும் சிகிச்சையில் நிலவும் விலை உயர்வை கருத்தில் கொண்டால் இந்த தொகை மிக வும் குறைவாக உள்ளது. எனவே,  இதனை மாதத்திற்கு 6 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும். ஒரே நாடு, ஒரே பதிவு என்பது மீண்டும் மாநிலத்தின் உரிமைக ளில் கை வைக்கும் செயலாகும். தமிழகத்திற்கான 8 ரயில்வே திட் டங்களுக்கு நிதி ஒதுக்கீடு தொகை தலா ஆயிரம் ரூபாய் மட்டுமே. ஆகவே, ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையானது, பணக்காரர்களை இன்னும் பணக் காரர்களாக்கும். ஏழைகளை இன்னும் ஏழைகளாக மாற்றும். இது காகிதமில்லா பட்ஜெட் அல்ல, மாறாக மக்கள் நலன் இல் லாத பட்ஜெட் ஆகும். இவ்வவாறு டி.என்.வி.செந்தில்குமார் எம்.பி., பேசினார்.