districts

img

காகிதப் பயன்பாடுகளும், எதிர்கொள்ளும் சவால்களும்

நாமக்கல், ஜூலை 31- நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளை யத்தில் செயல்படும் எஸ்பிபி தனியார் காகித ஆலை நிர்வாகம் சார்பில், ஒவ் வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி யன்று (இன்று) காகித தினம் கொண் டாடப்படுகிறது. இதுகுறித்து எஸ்பிபி காகித ஆலை நிர்வாக இயக்குநர் கே. எஸ்.காசி விஸ்வநாதன் கூறுகையில், 1940 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1 ஆம் தேதி யன்று புனேயில், கையால் தயாரிக்கப் படும் காகித நிறுவனத்தை முன்னாள் பாரத பிரதமர் ஜவஹர்லால் நேரு  துவக்கி வைத்தார். அதன்பிறகு காகிதம் தயாரிப்பு பல்வேறு படிநிலைகளை தாண்டி தற்பொழுது காகிதம் பயன் படுத்தாத மனிதர்களே இல்லை என்ற  நிலை உருவாகியுள்ளது. என்னதான் டிஜிட்டல் பயன்பாடு அதிகரித்து இருந் தாலும், மின்னணு ஊடகம், மொபைல் போன்றவற்றை காட்டிலும், காகிதத் தில் படிக்கவே அதிகம் விரும்புகின்ற னர். உண்மையில் காகிதத்தில் படித் ததை மனதில் விரைவாக பதிய வைப் பது எளிது என்று கருதுகின்றனர். இந்நிலையில், காகிதத்தின் தேவை கள் குறித்தும், அதுகுறித்த விழிப்பு ணர்வை ஏற்படுத்தும் வகையிலும் ஒவ் வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி யன்று (இன்று) காகித தினம் இந்தியா வில் கொண்டாடப்பட்டு வருகிறது. காகி தத்தின் முக்கிய பயன்பாடுகளாக குழந் தைகளுக்கு கல்வி கற்பித்தல், கல்வி  அறிவை பரப்புதல், செய்தித்தாள் மூலம் செய்திகள் பரப்புதல், பிளாஸ் டிக் பைகளை தவிர்த்து தற்பொழுது காகிதப்பை அதிகளவு பயன்படுத்தப் படுவது உள்ளிட்டவை காகித பயன் பாட்டை அதிகரித்து வருகிறது. இந்தியா வில் காகிதம் மூன்று அடிப்படை மூலப் பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுகி றது. விவசாயிகளிடமிருந்து பெறப் படும் மரம், கரும்பு சக்கை, மறுசுழற்சி  செய்யப்பட்ட கழிவு காகிதம்  மூலமாக காகித உற்பத்தி நடைபெறுகிறது. காகி தம் தயாரிக்க இதற்கென  இந்தியாவில் சுமார் 5 லட்சம் விவசாயிகள் மரம் வளர்ப் பதிலும் நடவு செய்வதிலும் ஈடுபட்டுள் ளனர். ஆனால் காடுகள் அழிப்பதன்  மூலமாக காகிதம் தயாரிக்கப்படுவதாக தவறான செய்தி சமூகத்தில் உள்ளது. இத்தகைய செய்திகள் முற்றிலும் தவ றானது. காகிதத்தொழில் என்பது காடு  சார்ந்த தொழில் அல்ல. ஆயிரக்கணக் கான விவசாயிகளுக்கு உதவும் வேளாண் சார்ந்த தொழில். காகிதம்  மக்கும் மற்றும் மறுசுழற்சி செய்யக் கூடியதாகும். காகிதத்தை பயன்படுத்து வதும் எளிதான ஒன்றாகும். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் காகிதத்தின் தேவைகள் குறித்தும், காகிதம் குறித் தான தவறான எண்ணங்களை மக்களி டையே போக்கும் வகையிலும் பள்ளி பாளையம் காகித ஆலை நிர்வாகத்தின் மூலமாக பள்ளி, கல்லூரிகளில் பல் வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் ஏற்ப டுத்தப்பட்டு வருகின்றன. இதன்ஒரு பகுதியாக செவ்வாயன்று மாலை  எஸ்பிபி காகித ஆலை ஆடிட்டோரிய ரங்கில் நடனம், பட்டிமன்றம், காகிதம் சம்பந்தமான நாடகம் மற்றும் பரிச ளிப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ள தாக, கே.எஸ்.காசி விஸ்வநாதன் தெரி வித்துள்ளார்.