districts

img

குடிநீர் கேட்டு உடுமலையில் சாலை மறியல்; குடிமங்கலத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை

உடுமலை, ஜீலை 22 - உடுமலை ஆண்டியகவுண்ட னூர் பகுதியில் முறையாக குடிநீர் வழங்காத நிர்வாகத்தை கண்டித்து திங்களன்று பொதுமக்கள் சாலை  மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அதேபோல, குடிநீர் கேட்டு பெரிய பட்டி பொதுமக்கள் குடிமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடு பட்டனர். உடுமலை ஒன்றியம்: உடுமலை ஒன்றியப் பகுதியான  ஆண்டியகவுண்டனூர் ஊராட்சியில்  கடந்த சில வாரங்களாக குடிநீர் விநி யோகம் செய்யப்படவில்லை. இது குறித்து பல முறை ஊராட்சி நிர்வா கத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றும், குடிநீர் விநியோகம் செய் யப்படவில்லை. இதை கண்டித்து  ஆண்டியகவுண்டனூர் பொதுமக் கள் குடியகவுண்டணூர் பிரிவு அருகே அரசு பேருந்தை மறித்து போராட்டம் நடத்தினார்கள். இதைய டுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற் றும் காவல்துறை அதிகாரிகள் பொது  மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி னர். இதில், குடிநீர் விநியோகம் உடன டியாக வழங்கப்படும் என அதிகாரி கள் உறுதியளித்ததை அடுத்து, பொது மக்கள் போராட்டத்தை முடித்துக் கொண்டனர். குடிமங்கலம் ஒன்றியம்: குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியத் திற்கு உட்பட்ட பெரியபட்டி ஊராட் சிக்கு வழங்க வேண்டிய குடிநீர், பல  மாதங்களாக குடிநீர் வாரிய அதிகாரி களின் குளறுபடியால் வழங்கப்பட வில்லை. கூட்டு குடிநீர் திட்டத்தில் வழங்க வேண்டிய குடிநீர் வழங்கா மல் உள்ளதை கண்டித்து, பொது மக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத் தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடு பட்டனர். இந்த போராட்டம் குறித்து பொது  மக்கள் தெரிவிக்கையில், பெரிய பட்டி ஊராட்சிக்கு எவ்வித அடிப் படை வசதிகளும் செய்வது இல்லை.  மக்களின் அடிப்படை தேவையான குடிநீர் கூட முறையாக வழங்குவது இல்லை. மேலும் ஊரக வேலை திட் டத்தின் கீழ் வேலை வழங்குவதில் பாரபட்சமாக ஊராட்சி ஒன்றிய நிர் வாகம் செயல்படுகிறது. பெயருக்கு ஊரக திட்டத்தின் வேலைகள் வழங் கினாலும், வேலை செய்த நாட்க ளுக்கு சம்பளம் வழங்க பல மாதங் கள் இழுத்தடிப்பு செய்கின்றனர். இது குறித்து அதிகாரிகளிடம் தெரிவித் தும் எவ்வித நடவடிக்கை எடுக்காத தால் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி  வருகிறோம் என்றார்கள்.   திருமூர்த்தி அணையில் இருந்து  பொதுமக்களின் குடிநீர் தேவைக்கு  தினமும் 28 கனஅடி தண்ணீர் எடுக் கப்பட்டு வரும் நிலையில், உடுமலை மற்றும் மடத்துக்குளம் பகுதியில் தினமும் குடிநீர் பிரச்சனைக்காக மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு  பகுதியாக ஊராட்சி ஒன்றிய அலுவ லகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றுள்ளது. குடிநீர் பிரச் சனை சட்ட ஒழுங்கு பிரச்சனையாக  மாறாமல் இருக்க மாவட்ட நிர்வாகம்  கூட்டுக் குடிநீர் திட்டங்களை முறைப் படுத்த வேண்டும். என சமூக ஆர்வலர்கள் கூறினர்.