districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

கீரம்பூர் சுங்கச்சாவடி முற்றுகை

நாமக்கல், செப்.4- சுங்கக்கட்டண உயர்வை திரும்பப்பெற வலியு றுத்தி மணல் லாரி உரிமையாளர்கள் நாமக்கல்  பர மத்தி சாலையில் உள்ள கீரம்பூர்  சுங்கச்சாவடியை முற்று கையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  நாடு முழுவதும் சுங்கச் சாவடிகளில்  உயர்த்தப் பட்ட கட்டண உயர்வை முழுமையாக ரத்து செய்ய  வேண்டும், அதேசமயம் தமிழகத்தில் காலாவதியான 22  சுங்க சாவடிகளை உடனடியாக மூட வேண்டும். அம லாக்கத் துறை நடவடிக்கையால் பல குவாரிகள் மூடப் பட்டுள்ளது. கடந்த 7 மாதங்களாக மணல் குவாரிகள் செயல்படாததால் தமிழகத்தில் கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக தரமற்ற எம்.சாண்ட் பயன்படுத்த வேண்டிய நிலையில் அதன் விலையும் பல மடங்கு உயர்ந்துள்ளது. எனவே கட்டு மானப் பணிகள் பாதிப்படையாமல் இருக்க தமிழக அரசு உடனடியாக மணல் குவாரிகளை திறக்க வேண்டும்  உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல் மாவட் டம், பரமத்தி சாலையில் உள்ள கீரம்பூர்  சுங்கச்சா வடியை மணல் லாரி உரிமையாளர் சங்கத்தினர் முற்று கையிட்டு, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதில் 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேள னத்தின் தலைவர் செல்லராசாமணி தலைமை வகித் தார். இதில், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மணல் லாரி உரிமையாளர்கள், மாட்டுவண்டி உரிமையாளர்கள், கட்டுநர் சங்கத்தினர், உள்பட ஏராள மானோர் கலந்து கொண்டனர். கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.

அடிப்படை வசதிகளுக்கு நிதி ஒதுக்கிடுக அமைச்சரிடம் ஊராட்சித் தலைவர் மனு

தருமபுரி, செப்.4- பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதிகளில் அடிப் படை வசதிகளுக்கு நிதி ஒதுக்கக்கோரி அமைச்சரிடம் பாடி ஊராட்சி மன்றத் தலைவர் மனு அளித்துள்ளார். தருமபுரிமாவட்டம், பாலக்கோடு வட்டம், பாடி ஊராட்சிக்குட்பட்ட முக்கம்பட்டி அருந்ததியர் காலனி யில் சிமெண்ட் சாலை அமைத்தல், சிறு பாலம் அமைத் தல், பழுதடைந்த தொகுப்பு வீடுகளை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள வேண்டும். இதற்காக  சிறப்பு உட்கூறு திட்டத்தின் கீழ், நிதி ஒதுக்கி பணி களை மேற்கொள்ள ஆவண செய்ய வேண்டும் எனக் கோரி, பாடி ஊராட்சி மன்றத் தலைவர் கே.கிருஷ்ணன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வ ராஜிடம் மனு அளித்துள்ளார்.

ரயில் பயணச்சீட்டு இன்றி பயணித்த 10,340 பேருக்கு அபராதம் விதிப்பு

சேலம், செப்.4- சேலம் ரயில்வே கோட்டத்தில் ரயில்களில் பயணச் சீட்டு இன்றி பயணித்த 10,340 பேருக்கு ரயில்வே அதிகாரி கள் அபராதம் விதித்தனர். சேலம் ரயில்வே கோட்ட மேலாளரின் உத்தரவின் பேரில், கோட்ட முதுநிலை வணிக மேலாளர் பூபதி ராஜா தலைமையிலான குழுவினர், ரயில் சேவை முறைகேடு களைத் தடுக்க தீவிர பரிசோதனைகளில் ஈடுபட்டு வரு கின்றனர். இந்தக் குழுவினர் கடந்த ஆகஸ்ட் மாதம் சேலம் கோட்டத்திற்குட்பட்ட ரயில்களில் பயணிகளிடம்  சிறப்பு சோதனைகளை மேற்கொண்டனர். இதில் பய ணச்சீட்டு இன்றி பயணித்த 10,340 பேருக்கு ரூ.69.46 லட் சம் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது. மேலும், முன்பதிவில்லாத பயணச்சீட்டு எடுத்துக்கொண்டு முன்பதிவு பெட்டியிலும், இரண்டாம் வகுப்பு முன்பதிவு  பயணச்சீட்டு எடுத்துக்கொண்டு ஏசி பெட்டிகளிலும் பய ணித்த 7,264 பேரிடமிருந்து ரூ.34.02 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் பயணச் சீட்டு இன்றி பயணம், அதிக லக்கேஜ் ஆகிய காரணங் களுக்காக ரூ.1.03 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள் ளது.

பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மாரியப்பன்
சேலத்தில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

சேலம், செப்.4- 2024 பாரா ஒலிம்பிக்கில் மாரியப்பன் பதக் கம் வென்ற நிலையில், அவரது சொந்த ஊரான சேலத்தில் பொதுமக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். பாரிஸில் நடைபெற்று வரும் பாரா ஒலிம் பிக் போட்டியில், இந்தியா சார்பில் உயரம் தாண்டுதல் பிரிவில் கலந்து கொண்ட சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தங்கவேலு மாரியப் பன் வெண்கல பதக்கம் வென்றுள்ளார். இந்தி யாவிற்காக 2016, 2020, 2024 பாரா ஒலிம்பிக் கில் முறையே தங்கம், வெள்ளி, வெண்கலம் பதக்கங்களை வென்றது குறித்து அவரது தாயார் சரோஜா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஏழ்மையான குடும்பத் தில் பிறந்த என் மகன், இன்று நாடே வியக்கும் அளவிற்கு பதக்கங்களை குவித்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது. வாழ்க்கையில் என்ன  செய்யப் போகிறான் என நினைத்து கவலைப் பட்டுக் கொண்டிருந்த எனக்கு, தற்போது பாரா ஒலிம்பிக் போட்டியில் விளையாடி, இந் தியாவிற்காக பதக்கங்களை குவித்து வரு வது மட்டற்ற மகிழ்ச்சியளிக்கிறது, என  பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். மாரியப் பனின் சகோதரர் குமார் பேசுகையில், எந்தப்  பதக்கம் என்றால், என்ன; இந்தியாவிற்காக பதக்கம் வென்றுள்ளது சந்தோஷத்தை அளிக் கிறது. தொடர்ந்து இன்னும் பல பயிற்சிகள் செய்து அடுத்த கட்ட நிலைக்கு அவர் மென் மேலும் உயர்வார், என்றார். இதைத்தொ டர்ந்து, பதக்கம் வென்ற மாரியப்பனின் சொந்த ஊரான, ஓமலூர் அருகே உள்ள பெரிய வடகம்பட்டி பொதுமக்கள், அவரது குடும்பத்தினர், ஆசிரியர்கள் உற்சாகமாக பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

உள்ளிருப்புப் போராட்டம் நடத்த மாணவர்கள் முடிவு

நாமக்கல், செப்.4-  செப்.19 அடிப்படை வசதிகள் கோரி திரு வள்ளுவர் அரசு கலைக்கல்லூரி முதல்வர் அறையில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்த வுள்ளதாக மாணவர் சங்கம் அறிவித்துள் ளது. நாமக்கல் மாவட்டம், திருவள்ளுவர் அரசு  கலைக் கல்லூரியில் கிளைக் கூட்டம் கிளைத்  தலைவர் ஜீவிதா தலைமை வகித்தார். மாவட் டத் தலைவர் தங்கராஜ் பங்கேற்றார். இதில், கல்லூரி விடுதியில் தரமான உணவு வழங்கு வதை உறுதி செய்ய வேண்டும். கல்லூரி வளா கத்தில் உள்ள புல்புதர்களை சுத்தம் செய்தல் வேண்டும். வணிகவியல் துறை அருகிலுள்ள புதிய கட்டடத்தை விலங்கியல் மற்றும் தாவர வியல் துறை பயன்பாட்டிற்கு விடுதல் வேண் டும். ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் னிருந்து போராட்டம் நடத்த முடிவெடுக் கப்பட்டது.

உணவக உரிமையாளருக்கு கொலை மிரட்டல்! சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்

தருமபுரி, செப்.4- சாப்பிட்ட உணவிற்கான பணத்தை கேட்ட உணவக உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த, சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பணி யிடை நீக்கம் செய்யப்பட்டார். தருமபுரி - நேதாஜி நெடுஞ்சாலை யில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனை செயல்பட்டு வருகிறது. இந்த  மருத்துவமனைக்கு உள் நோயாளிகள், வெளி நோயாளிகள் என தினந்தோறும் 3  ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இங்கு அமைந்துள்ள புறக்காவல் நிலையத்தில் காவல் துறை யினர் சுழற்சி முறையில் பணி செய்து  வருகின்றனர். இதனிடையே, அரசு  மருத்துவக்கல்லூரி மருத்துவமனை யில் பணிபுரியும் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் காவேரி என்பவர், தினமும் மருத்துவமனைக்கு எதிரே உள்ள உண வகத்தில் சாப்பிடுவது வழக்கம். அவ் வாறு சாப்பிடும் உணவிற்கு கையில் உள்ள பணத்தை கொடுத்துவிட்டு மீதியை பின்பு தருகிறேன் என கூறி விட்டு சென்று விடுவார் என கூறப்படு கிறது. இதேபோன்று, செவ்வாயன்று சாப்பிட்ட உணவிற்கு பணம் கொடுக்கா மல் பின்பு தருவதாக கூறியுள்ளார். அதேபோல் மாலை உணவு சாப்பிட  வந்த காவேரி உணவை சாப்பிட்டுவிட்டு சென்றபோது கடை உரிமையாளர் முத் தமிழ், ஏற்கனவே சாப்பிட்ட உணவிற் கும் சேர்த்து பணம் கேட்டுள்ளார். இத னால் ஆத்திரமடைந்த காவேரி, முத்த மிழை தகாத வார்த்தையால் பேசிய தாக கூறப்படுகிறது. மேலும் பணத்தை  தூக்கி வீசிவிட்டு கொலை மிரட்டல்  விடுத்ததாக தெரிகிறது. மேலும், காவேரி தனது காலில் அணிந்திருந்த ஷூவை கழற்றி அடிக்க சென்ற கண்கா ணிப்பு கேமரா காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் உத்தர வின்பேரில் தருமபுரி உதவி காவல் கண் காணிப்பாளர் சிவராமன் விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து காவே ரியை பணியிடை நீக்கம் செய்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் உத்தரவிட்டுள்ளார்.

2 கடைகளுக்கு சீல்; அபராதம்

2 கடைகளுக்கு சீல்; அபராதம் தருமபுரி, செப்.4- காரிமங்கலத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்து வந்த 2 கடைகளுக்கு, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். தருமபுரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையி லைப் பொருட்கள் புழக்கத்தை தடுக்க உணவு பாதுகாப்புத் துறை மற்றும் காவல்துறையினர் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன்ஒருபகுதியாக, காரி மங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால், காரிமங்கலம் காவல் நிலைய சிறப்பு  உதவி ஆய்வாளர் தலைமையிலான குழுவினர், காரிமங்கலத் தில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது, மொரப்பூர் சாலை, கரகப்பட்டி (கள்ளுக்கடை) பேருந்து நிறுத்தம் அருகே உள்ள ஒரு மளிகை கடையிலும் மற்றும் பாலக்கோடு சாலை, பொம்மள்ளி கூட் ரோடு அருகில் ஒரு மளிகைக் கடையிலும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் ஏ.பானுசுஜாதா, 2 கடை களுக்கும் சீல் வைத்து, அதன் உரிமையாளர்களுக்கு தலா  ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

சிபிஎம் கிளை மாநாடுகள்

திருப்பூர், செப்.4- திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் அனைத்து பிரிவுகளுக்கும் மருத்துவர்கள் நிய மிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தெற்கு மாநகரத்திற்கு உட்பட்ட கிளை மாநாடுகளில் தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தெற்கு மாநகரப் பகுதிக்கு உட்பட்ட 18 கிளை மாநாடுகள் நடை பெற்றன. செப்டம்பர் 1 மற்றும் 3 ஆகிய தேதிகளில் செங் கொடி ஏற்றப்பட்டு இந்த மாநாடுகள் நடத்தப்பட்டன. மாநக ரத்தில் குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்த வேண்டும், சாக் கடைகளை உடனே  தூர் வார வேண்டும், நகரப் பகுதிகளில் பழுதடைந்த சாலைகளை உடனே செப்பனிட வேண்டும், அரசு மருத்துவமனைகளில் அனைத்து பிரிவுகளுக்கும் மருத்துவர் களை நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. கோரிக்கைகளை நிறை வேற்ற மக்களை திரட்டிப் போராட்டம் நடத்துவது எனவும்  முடிவு செய்யப்பட்டது. நடைபெற்ற கிளை மாநாடுகளில் தென்னம்பாளையம் கிளையின் செயலாளராக நா.சஞ்சீவ், வெள்ளியங் காடு மேற்கு -சந்திரசேகர், துளசிராவ்வீதி - எஸ்.பானு மதி, பூம்புகார் - எஸ்.ராமகிருஷ்ணன், பூச்சக்காடு - வாசுமலை, தென்னம்பாளையம் காலனி - எஸ்.தங்க ராஜ், கருவம்பாளையம் தெற்கு -  பி.கோபால்,  கருவம் பாளையம் வடக்கு - ராஜகோபால், வெள்ளியங்காடு கிழக்கு - கதிரேசன், வெள்ளியங்காடு மாதர் - ஜி.சுப்பு லட்சுமி, கோபால்நகர் - பி.ராமு, பட்டுக்கோட்டையார் நகர் தெற்கு - எம்.விஜயகுமார், பட்டுக்கோட்டையார் நகர் வடக்கு ஏ - எம்.சந்தோஷ், பட்டுக்கோட்டையார் நகர்  வடக்கு பி - எம்.மௌனிஸ் கண்ணன், பட்டுக்கோட்டையார் நகர் மாதர் -  ஜி.சுமதி, போக்குவரத்து பி -  சபரீஸ், பிள்ளையார் கோவில் -  கே.கிஷோர் குமார்,  டவுன் - டீ.பழனிச்சாமி ஆகியோர் கிளைச்செயலாளர்களாக தேர்வு செய்யபட்ட னர். முன்னதாக இம்மாநாடுகளில் மார்க்சிஸ்ட் கட்சியின் திருப் பூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.ராஜகோபால், கே.உண்ணி கிருஷ்ணன், எஸ்.மணிகண்டன், தெற்கு மாந கரச் செயலாளர் த.ஜெயபால், மாவட்டக்குழு உறுப்பினர் கள் சுந்தரம், செல்லதுரை, ஷகிலா மற்றும் கமிட்டி உறுப்பி னர்கள் பங்கேற்று மாநாடுகளை நடத்தினர்.

ரூ.7.18 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

அவிநாசி, செப்.4- அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற் பனை சங்கத்தில் புதனன்று பருத்தி ஏலம் நடைபெற்றது.  9,466 கிலோ பருத்தியை விவசாயிகள்  கொண்டு வந்திருந்த னர். இதில், ஆர்.சி.எச்.ரகப்பருத்தி, கிலோ ரூ. 70முதல் ரூ.82 வரையிலும்,  மட்டரக (கொட்டு) ரகப் பருத்தி கிலோ ரூ.20 முதல் ரூ. 30 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 7 லட்சத்து 18 ஆயிரத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.

அரசுப்பள்ளியில் ஓவியம் வரைந்ததில் முறைகேடு விசாரணை நடத்த மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை

உடுமலை, செப்.4- ஸ்மார்ட் வகுப்பறைக்கு வர்ணம் பூச ரூ.53  ஆயிரம் ஒதுக்கப்பட்டதை முறையாக நடை முறை படுத்தாமல், முறைகேடு செய்து உள்ள தாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.  இதுகுறித்து உடுமலை வட்டார வளர்ச்சி அலுவலரிடம், மார்க்சிஸ்ட் கட்சி அளித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, குரல் குட்டை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் ஸ்மார்ட் வகுப்பறை செயல்படுத்தல் 2023-24,  பெயிண்டிங் அமைத்தல் திட்டத்தில் ரூ. 53 ஆயிரம் நிதியில் வர்ணம் பூசி சுவரோவியங் கள் வரையப்பட்டுள்ளது.  இதில், ஒரு கட்டி டத்தில் பாதிக்கட்டிடம் வர்ணம் பூசியும், மீதி  பாதிக்கட்டிடம் வெறுமனே பழைய நிலை யில் உள்ளது. ஒதுக்கப்பட்ட நிதியினை முழு மையாக பயன்படுத்தாமல் சின்னஞ்சிறு வகுப் பறையில் குறைந்த அளவிலேயே வர்ணம் பூசி படம் வரைந்துள்ளனர். பாலா (BALA) பெயிண்டிங் வேலைசம்பந்தமான “வொர்க் போர்டு” வேலைமுடித்து  மிகத் தாமதமாக எழுதப்பட்டுள்ளது. வகுப்பறையிலும் முழு மையாக திருப்தியில்லாமலே வரைந்து எழுதியுள்ளனர். எனவே இது குறித்து உடனடியாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும், பள்ளிக் கட்டி டத்தை முழுமையாக வர்ணம்பூசி பராமரிக்க வேண்டும். ஒதுக்கப்பட்ட நிதியினை முழுமை யாக மாற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தனர்.  இது குறித்து வட்டார வளர்சி அலுவலர் சுப்பிரமணியத்திடம் கேட்ட போது பள்ளி யில் நடைபெற்ற வேலைகள் குறித்து உடனடி யாக ஆய்வு செய்ய அதிகாரிகளை அனுப்பி வைத்து உள்ளோம், என்றார். முன்னதாக  கட்சியின்  உடுமலை ஒன்றியச் செயலாளர்  கனகராஜ் தலைமையில், குரல்குட்டை கிளைச் செயலாளர் தட்சினாமூர்த்தி, கண்ணமநாயக் கனூர் கிளைச்செயலாளர் இளையபாரதி ஆகியோர் மனு அளித்தனர்.

வளர்ச்சிப் பணிகள் ஈரோடு ஆட்சியர் ஆய்வு

ஈரோடு, செப் 4- பெருந்துறை கிராமப் பகுதிகளில் நடைபெற்று வரும்  பல்வேறு வளர்ச்சிப் பணிகளை, மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, செவ்வாயன்று ஆய்வு நடத்தினார். ஈரோடு மாவட்டம், பெருந்துறை அரசு நடுநிலைப் பள்ளியில், 46.40 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்படும்  கூடுதல் வகுப்பறை கட்டடப்பணி, பெருந்துறையில் செயல்படும் அறிவுசார் மையத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். நூலகத்திற்கு வருகை தரும்,  மாணவ, மாணவியர் வருகை குறித்து கேட்டறிந்தார். பின்னர், பெருந்துறை டவுன் பஞ்சாயத்து ஜீவா நகரில், பாதாள சாக்கடையுடன் வீட்டுக் கழிவு நீர் குழாய் களை இணைக்கும் பணி, பெருந்துறை அரசு  மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் கட்டடப் புனர மைப்பு பணியை பார்வையிட்டார். பெருந்துறை சிலேட் டர் நகரில் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதி, விஜய மங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்க ளில் ஆய்வு மேற்கொண்டார்.

அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பட்டயப் படிப்புக்கான சேர்க்கை

உதகை, செப்.4- அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் செப். 5 மற்றும்  6 ஆம் தேதிகளில் பட்டயப் படிப்புக்கான சேர்க்கை நடை பெற்ற உள்ளது என உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரி  முதல்வர் தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம், உதகை அரசு பாலிடெக்னிக் கல் லூரி முதல்வர் கணேஷ் வெளியிட்ட அறிக்கையில், பத் தாம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ வகுப்பு துணை பொது தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கும் மற்றும் பட்டயப் படிப்பு பயில விரும்பும் தகுதியுள்ள அனைத்து  மாணவர்களுக்கும் பட்டயப் படிப்பு பயில வாய்ப்ப ளிக்கும் வகையில், இம்மாதம் 5 மற்றும் 6 ஆம் தேதி களில் பட்டயப் படிப்பு சேர்க்கைக்கு தொழில் நுட்ப கல்வி  இயக்ககத்தால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேற் கண்ட தேதிகளில் உதகை அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் பட்டயப் படிப்பு சேர்க்கை நடைபெறு கிறது. மாணவர்கள் அனைத்து அசல் சான்றிதழ்க ளுடன் கல்லுாரிக்கு நேரடியாக வருகை புரிய வேண்டும். தகவல் அறிந்திட 9787295723, 6369257236, 9626854629 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடிந்து விழுந்த அரசு தொகுப்பு வீடு
இடிந்து விழுந்த அரசு தொகுப்பு வீடு தருமபுரி, செப்.4- பாப்பாரப்பட்டி அருகே அரசு சார்பில் கட்டித்தரப்பட்ட தொகுப்பு வீடு இடிந்து விழுந்த நிலையில், வீடின்றி தவித்து  வரும் நபருக்கு புதிதாக வீடு கட்டித்தர வேண்டும் என அப் பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி பேரூராட்சிக்குட் பட்ட தியாகி சுப்பிரமணிய சிவா காலனியில், சுமார் 50க்கும்  மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. பட்டியிலின சமூகத்தைச்  சேர்ந்த இப்பகுதி மக்களுக்கு, சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு அரசு சார்பில் தொகுப்பு வீடுகள் கட்டித்தரப்பட்டன. அதில் பெரும்பகுதி வீடுகள் தற்போது பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளன. கூலி வேலை செய்து அதில் கிடைக்கும்  சொற்ப வருமானத்தில் வாழ்க்கை நடத்தவே சிரமப்பட்டு வரும் இப்பகுதி மக்கள், பழுதடைந்த வீட்டை சீரமைக்க முடிய வில்லை.  இதனிடையே, இப்பகுதியைச் சேர்ந்த செருப்பு தைக்கும் தொழிலாளி சிவாஜி (47) என்பவர், கடந்த 30 ஆண்டுகளுக்கு  முன்பு அரசு கட்டிக்கொடுத்த தொகுப்பு வீட்டில் தனது குடும் பத்துடன் வசித்து வந்தார். ஏற்கனவே, கூரையில் சிமெண்ட்  காரை பெயர்ந்து காணப்பட்ட இவரின் வீடு, சமீபத்தில் பெய்த  மழையில் மேலும் பழுதடைந்தது. இந்நிலையில், புதனன்று  சிவாஜி வழக்கம்போல பணிக்கு சென்றுவிட்டார். அவரது  மனைவி மற்றும் தாயார் வீட்டுக்கு வெளியில் இருந்தபோது, எதிர்பாராத விதமாக வீட்டின் கூரை முழுவதும் இடிந்து விழுந்தது. இதில் வீட்டுக்குள் இருந்த உணவுப்பொருட்கள், பாத்திரங்கள், துணிமணிகள் சேதமடைந்தன. அப்போது வீட் டுக்குள் யாரும் இல்லாததால், எந்தவிதமான உயிர்சேத மும் ஏற்படவில்லை. இதுகுறித்து தகவலறிந்த பாப்பாரப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் ரத்தினகிரி சம்பவ இடத்திற்கு சென்று சேதம் குறித்து ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு அறிக்கை அளித் துள்ளார். இதுபோன்று 20க்கும் மேற்பட்ட தொகுப்பு வீடுகள் பழுதடைந்து, எப்போது இடிந்து விழும் என்ற அபாய சூழ லில் அப்பகுதி மக்கள் வசித்து வருகின்றனர். எனவே, பழுத டைந்த வீடுகளை இடித்துவிட்டு, புதிய வீடு கட்டித்தர வேண்டும் எனவும், வீடு இடிந்த சிவாஜிக்கு நிவாரணமும், புதிய அரசு வீடும் வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள்  வலியுறுத்தியுள்ளனர்.

மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம்: அமைச்சர்கள் பங்கேற்பு

கோவை, செப்.4- கோவை ஆட்சியர் அலுவலக கூட்ட ரங்கில் கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கான மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர்கள் பங்கேற்றனர். கோவை மாவட்ட ஆட்சியர் அலு வலக கூட்டரங்கில் வேளாண்மை மற் றும் உழவர் நலத்துறை சார்பில் திருப் பூர், கோவை, ஈரோடு ஆகிய 3 மாவட் டங்களுக்கான மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் செவ்வாயன்று நடை பெற்றது. இக்கூட்டத்தில், தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம், செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, எம்.பி.க்கள் கண பதி ராஜ்குமார், கே.ஈஸ்வரசாமி, பிர காஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

குழந்தைக்கு இருதய, அறுவை சிகிச்சை ஆம்புலன்ஸ் ஓட்டுரின் பங்களிப்பு

கோவை, செப்.4- குழந்தைக்கு இருதய, அறுவை சிகிச்சை செய்வ தற்காக, திருச்சியிலிருந்து இரண்டரை மணி நேரத்தில் கோவைக்கு ஆம்புலன்சை இயக்கி வந்த ஆம்புலன்ஸ் ஓட்டு நருக்கு பாராட்டு குவிந்து வருகிறது. திருச்சி அரசு மருத்துவமனையில், பிறந்து 7 நாட்கள் ஆன குழந்தைக்கு, இருதய குறைபாடு இருந்துள்ளதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். மருத்துவ சிகிச்சை செய்ய, கோவை மாவட்டம், ராமகிருஷ்ணா தனியார் மருத்துவமனை யில் நவீன இயந்திரங்கள் இருப்பதால், குழந்தையை கோவைக்கு அழைத்து செல்ல முடிவு செய்யப்பட்டது. இதனால், புதனன்று பிற்பகல் ஒரு மணியளவில், திருச்சியில் இருந்து கிளம்பிய ஆம்புலன்ஸ், காவல்துறை உதவியுடன் போக்குவரத்து நெரிசலில் சிக்காத வகையில் வேகமாக கோவையை நோக்கி முன்னேறியது. ஆம்பு லன்ஸ் தங்கு தடையின்றி செல்வதற்காக, சாலை முழுவதும் கிரீன் காரிடார் ஏற்படுத்தி, காவல்துறையினர் வழிவகை செய்தனர். இதனால், இரண்டரை மணி நேரத்தில் குழந்தைத் பாதுகாப்பாக ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு அழை துவரப்பட்டது. குழந்தையை காப்பாற்ற வேண்டும் என்கிற முனைப்போடு குறித்த நேரத்தில் திருச்சியில் இருந்து கோவைக்கு ஆம்புலன்சை இயக்கி வந்த ஓட்டுநருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. 

கோவை – தன்பாத் சிறப்பு ரயில் இயக்கம்

சேலம், செப்.4- கோவை - தன்பாத் இடையே வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம் செப்.7 ஆம் தேதியன்று முதல் துவங்கவுள்ளது. இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், செப்.4 ஆம் தேதி முதல் அடுத் தாண்டு ஜன.1 ஆம் தேதி வரை புதன்கிழமைகளில் தன் பாத்தில் இருந்து காலை 10.10 மணிக்கு புறப்படும் தன்பாத் - கோவை வாராந்திரச் சிறப்பு ரயில் (எண்:03325) வெள்ளிக்கி ழமை நண்பகல் 12.30 மணிக்கு கோவை ரயில் நிலை யத்தை வந்தடையும். மறுமார்க்கத்தில் செப்.7 ஆம் தேதி முதல் ஜன.4 ஆம் தேதி வரை சனிக்கிழமைகளில் கோவையில் இருந்து நண்பகல் 12.55 மணிக்கு புறப்படும் கோவை - தன்பாத் வாராந்திரச் சிறப்பு ரயில் (எண்: 03326) திங்கள்கிழமை மாலை 5.10 மணிக்கு தன்பாத் ரயில் நிலையத்தைச் சென்றடை யும். இந்த ரயில் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார் பேட்டை, காட்பாடி, பெரம்பூர், கூடூர், நெல்லூர், ஓங்கோல், விஜயவாடா, வரங்கல், ஜபல்பூர், கயா உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள் ளது.

போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்

இதேபோன்று, செப்.4 மற்றும் 6 ஆகிய தேதிகளில் நண்பகல் 12.40 மணிக்கு எர்ணாகுளத்தில் இருந்து புறப்ப டும் எர்ணாகுளம் - யெலஹங்கா சிறப்பு ரயில் (எண்: 06101) அன்றிரவு 11 மணிக்கு யெலஹங்கா ரயில் நிலையத்தைச் சென்றடையும். செப்.5 மற்றும் 7 ஆகிய தேதிகளில் காலை 5 மணிக்கு யெலஹங்காவில் இருந்து புறப்படும் யெல ஹங்கா - எர்ணாகுளம் சிறப்பு ரயில் (எண்:06102) அன்று பிற்பகல் 2.20 மணிக்கு எர்ணாகுளம் ரயில் நிலையத்தைச் சென்றடையும். இந்த ரயில் திருச்சூர், பாலக்காடு, போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம், கிருஷ்ணராஜபுரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.