districts

img

ஒரு கோடி பனை விதைகளை விதைக்கும் திட்டம் தொடக்கம்

சென்னை, அக்.2- தமிழ்நாடு பனைமரத் தொழி லாளர்கள் நல வாரியம் சார்பாக பனை மரங்கள் வளர்ப்பதை ஊக்கு விக்கும் வகையில் தமிழ்நாடு கடற்கரை பகுதிகளில் ஒரு கோடி பனை விதைகளை விதைக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.  இதனை சென்னையில்  ஞாயி றன்று (அக்.1) தொழிலாளர் நலத்  துறை அமைச்சர் சி.வெ. கணேசன் மற்றும் தமிழ்நாடு பனைமரத் தொழி லாளர்கள் நல வாரியத் தலைவர் எர்ணாவூர் ஆ. நாராயணன் ஆகி யோர் தொடங்கிவைத்தனர்.  ஒரு கோடி பனை விதைகள் விதைக்கும் இத்திட்டத்தினை தமிழ்நாடு பனைமரத் தொழி லாளர்கள் நல வாரியத்துடன் இணைந்து கிரீன் நீடா சுற்றுச் சூழல் மற்றும் நாட்டு நலப் பணித்திட்ட அமைப்பினர், ஒரு லட்சம் தன்னார் வலர்களின் ஒத்துழைப்புடன் செயல் படுத்துகின்றனர்.  ஞாயிறன்று (அக்,1) திரு வள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சா வூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 14 கடற்கரை யோர மாவட்டங்களிலும் 430 இடங்க ளில் ஒரு கோடி பனை விதைகள் விதைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் போது குளோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் (Global World Record) நிறுவனம் தமிழ்நாட்டில் 1,076 கி.மீ.  நீள கடற்கரை பகுதிகளில் ஒரு கோடி பனை விதைகள் விதைக்கும் இச்சாதனையை பாராட்டி சான்றிதழ் வழங்கியது.