திருப்பூர், ஏப்.25- மருத்துவம் மற்றும் மக்கள் நல் வாழ்வுத் துறை சார்பாக கலைஞ ரின் வருமுன் காப்போம் திட்டம், வட்டார அளவிலான சுகாதார திரு விழா பல்லடம் மற்றும் பொங்கலூர் வட்டாரத்தில் திங்களன்று நடை பெற்றது. பல்லடம் வட்டார அளவிலான சுகாதார திருவிழா பல்லடம் ஒன்றி யம் சித்தம்பலம் ஊராட்சியில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமையேற்று குத்துவிளக்கேற்றி துவக்கி வைத் தார். இந்த நிகழ்வில் வட்டார மருத் துவ அலுவலர் என்.சுடர்விழி, திருப் பூர் வடக்கு மாவட்ட பொறுப்பா ளர் பத்மநாபன், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தேன்மொழி, சித்தம் பலம் ஊராட்சி மன்ற தலைவர் திமுக மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பல்லடம் ஒன்றிய செயலாளர் பரமசிவம் உள்ளிட் டோர் பங்கேற்றனர். இம்மருத்துவ முகாமில் இருதய நோய்கள், சர்க் கரை நோய்கள், பல் மருத்துவம், ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோ தனை, ஈசிஜி பரிசோதனை, சித்த மருத்துவம், குடும்ப நல சிகிச்சை மற்றும் ஆலோசனை, குழந்தை களுக்கான மருத்துவம் மகப்பேறு மருத்துவம் தோல் நோய் மருத்து வம் உள்ளிட்ட பல்வேறு வகையான நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப் பட்டுள்ளது. பொங்கலூர் வட்டார அள விலான சுகாதார திருவிழா கடலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பொங்கலூர் வட்டார மருத்துவ அலுவலர் சுந்தரவேல் முன்னிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் பத்மநாபன், பொங்க லூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் எஸ். குமார், ஊராட்சி மன்றத் தலைவர் சதீஷ்குமார் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொங்கலூர் ஒன்றிய செயலாளர் பாலசுப்பிர மணியம் உள்ளிட்டோர் பங்கேற்ற னர்.