திருப்பூர், அக். 8- கீழ்பவானி பாசன பகுதிகளில் நெல் நட வுப்பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில் நெல் கொள்முதல் விலையை உயர்த்த விவ சாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பவானி சாகர் அணை மூலம் திருப்பூர் மாவட்டத்தில் கீழ்பவானி வாய்க்கால் பாச னத்தில் 18 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்கள் பயன் பெற்று வருகிறது. பாசனத்திற்காக ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி நீர் திறக்கப்பட் டது. கடந்த ஒரு மாதமாக நாற்று விடுதல் மற் றும் நிலங்களை உழவு செய்தல் ஆகிய பணி களில் விவசாயிகள் ஈடுப்பட்டு வந்தனர். இதில் சில விவசாயிகள் இயற்கை விவசாய முறையில் நெல் சாகுபடி செய்வதன் மூலம் கூடுதல் லாபம் அடைவது மட்டுமன்றி மண் வளத்தையும் பாதுகாக்க முடியும் என தெரி வித்திருந்தனர். இதற்காக 2 ஆயிரம் ஏக்கரில் பசுந்தாள் உரம் கிடைக்க சணப்பை, தக்க பூண்டு உள்ளிட பயிர்கள் வளர்க்கப்பட்டது. தற்போது இதை உழவு செய்து வருகின்ற னர். மேலும், கீழ்பவானி பாசனப் பகுதிகளில் விவசாயிகள் நெல் நடவுப் பணிகளை தீவிர மாக மேற்கொண்டு வருகின்றனர். இதில் நத் தக்காடையூர், முத்தூர், மங்களப்பட்டி பகுதி யில் பாசனம் பெறும் பகுதி மற்றும் கசிவு நீரால் ஓடையில் வரும் தண்ணீரை கொண்டு நடவுப் பணிகள் முடிக்கும் தருவாயில் உள்ள னர். இது குறித்து விவசாயிகள் கூறியதாவது, ஒரு ஏக்கர் நெல் சாகுபடிக்கு நடவுக் கூலி யாக ரூ.6500, ட்ராக்டரின் மூலம் உழவு செய்ய ரூ. 10000, கரை கட்டி சேறு பூச ரூ.6000 கூலியாகிறது. மேலும் பூச்சி மருந்து அறு வடை செலவு என நெல் விளையும்போது ஒரு ஏக்கருக்கு ரூ.45 ஆயிரம் வரை செலவாகி றது. இந்தாண்டு கீழ்பவானி பாசன பகுதிக யில் கரும்பு நடவு செய்யப்பட்டிருந்த பல ஏக் கர் பரப்பு நிலங்கள் நெல் சாகுபடிக்கு தயார் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக நெல் பயிரிடும் பரப்பு அதிகரித்து விவசாய கூலித் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு அதிக ரித்துள்ளது. உரம் விலை 30 சதம் அதிகரித் துள்ள நிலையில், நடவிற்காக வயலை தயார்ப்படுத்தும் செலவு அதிகரித் துள்ள தால் நெல் கொள்முதல் விலையை ரூ.25 வரை அதிகரித்து அரசு தர வேண்டும் என தெரிவித்துள்ளனர்.