திருப்பூர், மார்ச் 26 - திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்த ஏழு நாட்களே ஆன பச் சிளம் குழந்தை கடத்தப்பட்டது. தனிப்படை போலீசார் துரிதமாக செயல்பட்டு குழந்தையை கடத்திய பெண்ணை கைது செய்ததுடன், பச்சிளம் குழந்தையை மீட்டு தாயி டம் ஒப்படைத்தனர். திருப்பூர் செரங்காடு சித்ரா காம்பவுண்டை சேர்ந்தவர் கோபி. இவரது மனைவி சத்யாவுக்கு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஆண் குழந்தை பிறந்துள்ளது. மருத்துவமனையில் தாய் சத்யா வுடன், கோபியின் தாயார் மாலா வும் உடனிருந்து குழந்தையை கவனித்துக் கொண்டனர். இந் நிலையில் சுமார் 35 வயது மதிக் கத்தக்க பெண் ஒருவர் சில நாட் களாக மருத்துவமனையில் மாலா மற்றும் சத்யாவுடன் நட்புடன் பழகி வந்திருக்கிறார். கடந்த 25 ஆம் தேதி அன்று திடீரென அந்தப் பெண், பிறந்து ஒரு வாரமே ஆன சத்யாவின் ஆண் குழந்தையை தூக்கிக் கொண்டு மருத்துவமனை யில் இருந்து தலைமறைவாகி விட்டார். திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பச்சிளங்குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற் படுத்தியது. தனது குழந்தை திருடப் பட்டது குறித்து கோபி திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப் படையில் மருத்துவமனையில் இருந்த கண்காணிப்பு கேமராக் களையும் ஆய்வு செய்து காவல் துறையினர் குற்றவாளியை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.
ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு காவல்துறை யினர் தீவிர தேடுதல் நடவடிக் கையில் ஈடுபட்டனர். மருத்துவமனை மட்டுமின்றி தாராபுரம் சாலை, சந்திராபுரம், பேருந்து நிலையம் உள்ளிட்ட பல் வேறு பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து காவல்துறையினர் துப்பு துலக் கினார். இதில், இடுவாய் ஊராட்சி வாசுகி நகரைச் சேர்ந்த பாண்டி யம்மாள் (42) என்ற பெண்மணி குழந்தையை கடத்திச் சென்றது தெரியவந்தது. குழந்தை கடத்தப் பட்ட 12 மணி நேரத்தில் காவல் துறையினர், பாண்டியம்மாளை கைது செய்து, கடத்தப்பட்ட குழந் தையை மீட்டனர். இந்தக் குழந்தை யை திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் முருகேசன் முன்னிலையில் தாய் சத்யாவிடம் ஒப்படைத்தனர். துரிதமாக செயல்பட்டு அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட 12 மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்து குழந்தையை மீட்ட தனிப்படை காவலர் சங்கரநாரா யணன் உள்ளிட்டவர்களை மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபினபு பாராட்டினார். குழந்தையை உடனடியாக மீட்டது மருத்துவமனை வட்டா ரத்தினருக்கு நிம்மதியை ஏற்படுத்தி யதுடன், காவல்துறையின் துரித நடவடிக்கைக்கு மருத்துவமனை வட்டாரத்தில் மற்றும் பொது மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.