திருப்பூர், மே 2 - பல்லடம் அருகே அனுப்பட்டியில் இரும்பாலை எதிர்ப்பு போராட்டம் நடை பெற்று வரும் நிலையில், மாவட்ட ஆட்சியர் அங்கு நேரில் சென்று ஆய்வு செய்து உரிய தீர்வு காண வேண்டும் என்று கோவை நாடாளுமன்ற உறுப் பினர் பி.ஆர்.நடராஜன் வலியுறுத்தி யுள்ளார். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத்தை செவ்வாயன்று மாலை 4 மணிக்கு கோவை நாடாளுமன்ற உறுப் பினர் பி.ஆர்.நடராஜன் நேரில் சந்தித்து பின்வரும் கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தினார். பல்லடம் வட்டம், அனுப்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் இரும்பு உருக்காலை சுற்றுச்சூழல் மாசு பாட்டை ஏற்படுத்தி வருவதை ஒட்டி, அப்பகுதி பொதுமக்கள் கடந்த 40 நாட்களுக்கு மேலாக பல்வேறு வகையான போராட் டங்களை மேற்கொண்டு வருகிறார் கள். மாவட்ட ஆட்சியர் அந்தப் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்து பிரச்ச னைக்கு உரிய தீர்வை மேற்கொள்ள வேண்டும். காவல்துறை, வருவாய்த் துறை மூலம் பொது மக்களுக்கு அச் சுறுத்தல் ஏற்படுத்துவதை கைவிட வேண்டும் என வலியுறுத்தினார். பல்லடம் பகுதியில் கடந்த நவம்பர் மாதம் ஆய்வு பணிகளின்போது ஏராளமான பொதுமக்கள் வீட்டுமனை பட்டா கேட்டு மனுக்கள் கொடுத்தனர். அந்த மனுக்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், உடனடி யாக தீர்க்கப்படாமல் உள்ள பிரச்சனை களை தீர்க்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். திருப்பூர் அரசு தலைமை மருத்துவ மனையில் நோயாளிகள் நல சங்கம் இது நாள் வரையில் ஏற்படுத்தப்படாமல் உள்ளது. எனவே நோயாளிகள் நல சங்கம் உடனே துவக்க வேண்டும். மருத்துவமனைக்கு வரக்கூடிய நோயா ளிகளுக்கு உரிய முறையில் வசதிகளை செய்து கொடுக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். இந்த சந்திப்பின்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட செயலாளர் செ.முத்துக் கண்ணன், மாநிலக்குழு உறுப்பினர் கே. காமராஜ், பல்லடம் ஒன்றிய செய லாளர் ஆர்.பரமசிவம் ஆகியோர் உடனிருந்தனர்.