districts

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

ஒகேனக்கல் நீர்வரத்து 7 ஆயிரம் கனஅடியாக சரிவு

பென்னாகரம்,  மே 27- ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 7 ஆயிரம்  கனஅடியாக சரிந்தது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. மேலும், கர்நாடகா அணைகளில் இருந்தும் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக ஒகேனக் கல்லுக்கு வியாழனன்று வினாடிக்கு 8 ஆயி ரம் கனஅடி தண்ணீர் வந்தது. இந்நிலை யில், காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழை தற்போது குறைந்தது. இதனால், ஒகே னக்கல்லுக்கு வெள்ளியன்று காலை 8 மணி  நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 7 ஆயி ரம் கனஅடியாக குறைந்து வந்தது. ஒகேனக்கல் ஐந்தருவி, மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண் ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால், சுற்றுலா பயணிகள் மெயின் அருவி, சினி பால்ஸ் மற்றும்  காவிரி ஆற்றில் குளித்து மகிழ்ந்தனர். மேலும், தொங்குபாலத்தில் இருந்து காவிரி ஆற்றின் அழகை ரசித்து சென்றனர். பரிசல் சவாரி செய்தும் சுற் றுலா பயணிகள் சென்று காவிரி ஆற்றின் அழகை ரசித்து மகிழ்ந்தனர்.

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை

ஈரோடு, மே 27- ஈரோட்டில் மருத்துவரின் வீட்டின் பூட்டை உடைத்து 45 பவுன் நகை மற்றும் ரூ.3  லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளைய டித்துச் சென்றுள்ளனர். ஈரோடு பெருந்துறை ரோடு டாக்டர் தங்க வேல் வீதியை சேர்ந்தவர் விஷ்ணு தீபக். இவர் தனியார் மருத்துவமனையில் மருத்து வராக உள்ளார். இவரது மனைவி சத்யா.  இவர்களுக்கு யோக சந்திரன் என்ற மகன்  உள்ளார். இந்நிலையில், விஷ்ணு தீபக்  குடும்பத்தினருடன் கடந்த 22 ஆம் தேதி விரு தாச்சலத்திற்கு சென்று விட்டார். இதனை யடுத்து வெள்ளியன்று அதிகாலை குடும் பத்துடன் மீண்டும் வீட்டுக்கு வந்தார். அப் போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு  திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந் தார். உள்ளே சென்று பார்த்த போது பொருட் கள் சிதறிக் கிடந்தன. அறையில் இருந்த அல மாரி உடைக்கப்பட்டு, அதில் இருந்த 45  பவுன் நகை, அரை கிலோ வெள்ளி, ரூ.3 லட் சம் ரொக்கப் பணம் கொள்ளை போய் இருந் ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து, ஈரோடு தலைமை அரசு  மருத்துவமனை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத் துக்கு சென்று விசாரணை நடத்தினார். கைரேகை நிபுணர்களும் வந்து தடயங் களை சேகரித்தனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் வீட்டில் ஆள் இல்லா ததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இந்த துணி கர திருட்டில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. மேலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். ஈரோடு மாநகர் பகுதியில் கடந்த சில தினங்களாகவே ஆள் இல்லாத வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு சம்பவம் நடை பெற்று வருவது தொடர் கதையாகி வருகி றது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பூட்டிய  வீட்டில் கைவரிசை காட்டிய தெலுங்கா னாவை சேர்ந்த 3 தம்பதிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து கடந்த 2   நாட்களுக்கு முன்பு திண்டலில் மூதாட்டியின்  வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம்  கொள்ளை போயிருந்தது. அதேபோல்,  மூதாட்டியின் வீட்டு அருகே உள்ள மளிகை கடையின் பூட்டு உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டிருந்தது.  இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மீண்டும் ஒரு திருட்டு  சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இளம்பிள்ளையில் தக்காளி திருட்டு

இளம்பிள்ளை, மே 27- இளம்பிள்ளையில் தக் காளி திருட்டில் ஈடுபட்ட நபர் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகி வரு கிறது. மழையின் காரணமாக தக்காளி வரத்து குறைந்து, தற்போது கிலோ ரூ.100 யை  எட்டியுள்ளது. இந்நிலை யில், சேலம் மாவட்டத்தில் இளம்பிள்ளை, பெருமாக வுண்டம்பட்டி, இளம் பிள்ளை புதுரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த ஒரு வாரமாக தக்காளி திருட்டு அதிக அளவில்  நடைபெற்று வந்தது. இது குறித்து விசாரிக்கையில் இருசக்கர வாகனத்தில் வரும் நபர் ஒருவர், தக்கா ளியை கிரேடுடன் எடுத்து செல்வது போன்ற காட்சிகள் கடைகளில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள் ளது. இந்த வீடியோ காட்சி  தற்போது சமூக வலைதளங் களில் வைரலாக பரவி வரு கின்றன.

குடிநீர் விநியோகத்தில் சூயஸ் பாரபட்சம்: திமுக மண்டல தலைவர் குற்றச்சாட்டு

கோவை மாநகராட்சி மத்திய மண்டல தலைவர் மீனா லோகு பேசுகையில், 100 வார்டுகளிலும் குடிநீர் தட்டுப்பாடு என்பதும் பெரும் பிரச்சனையாக உள்ளது. ஒவ்வொரு வார்டுகளிலும் குடிநீர் விநியோகத்தில் பெரும் வேறுபாடு நிலவுகிறது. குடிநீர் விநியோக பொறுப்பில் உள்ள அதிகாரி களுக்குள் நிலவும் அரசியலால் ஒரு வார்டுக்கு அதிகமாக வும், ஒரு வார்டுக்கு குறைவாகவும் குடிநீர் விநியோகிக்கப் படுகிறது. ஒரு வார்டுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறையும், ஒரு  வார்டுக்கு 5 நாட்களுக்கு ஒரு முறையும் என குடிநீர் விநி யோகம் நடைபெறுகிறது. அதிகாரிகளின் சீனியர், ஜூனியர் அரசியலால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படு கின்றனர். இதற்கு மாநகராட்சி தீர்வு காண வேண்டும் என்றார். அப்போது, குடிநீர் விநியோகம் தொடர்பான அதிகாரி ராமசாமி பேசுகையில், அதிகாரிகளுக்குள் சீனியர், ஜூனி யர் பிரச்சனை உள்ளதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால்,  நமது மாநகரத்தில் குடிநீர் விநியோகத்தை சூயஸ் நிறு வனத்திடம் வழங்கியுள்ளோம். அவர்களின் குடிநீர் விநியோ கத்தில் சில சிரமங்கள் இருக்கிறது. இதனை கண்காணித்து வருகிறோம். இதுதொடர்பாக தொடர்ந்து அவர்களுடன் பேசி தீர்வை எட்டுவதற்கு முயற்சி மேற்கொண்டு வருகி றோம் என்றார். இதைத்தொடர்ந்து ஆவேசமான மீனா லோகு, தனியாரிடம் ஒரு திட்டத்தை கொடுத்துவிட்டால் அவர்களே பார்த்துக் கொள்வார்கள் என அலட்சியமாக  விட்டுவிடுவதா. அதிகாரிகள் தான் இதனை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சூயஸ் நிறுவனத்தினர் என்றும் நமக்கு கட்டுப்பட்டு தான் இருக்க வேண்டும். குடிநீர் வரவில்லை என்றால் மக்களிடம் கவுன்சிலர்கள் தான் பதில்  சொல்ல வேண்டியதாக உள்ளது. உடனடியாக அனைத்து  வார்டுகளிலும் சீரான குடிநீர் விநியோகத்திற்கான நடவ டிக்கையை எடுக்க வேண்டும் என்றார்.

மன்ற உறுப்பினர்களுக்கு அலுவலகம்

சிபிஎம் கவுன்சிலர் வி.இராமமூர்த்தி பேசுகையில்,  அனைத்து வார்டுகளிலும் மாமன்ற உறுப்பினர்களுக்கு வார்டுக்குள் அலுவலகம் வேண்டும். ஏற்கனவே இது குறித்து பேசியுள்ளேன் உடனே தீர்வு காண வேண்டும்.  அதேபோன்று டெக்ஸ்டூல் மேம்பாலத்தின் தொடர்ச்சி யாக ராமகிருஷ்ணாமில் வரை மேம்பாலம் அமைக்க வேண்டும் என 2013 ஆம்ஆண்டு மாமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஏதோ ஒரு காரணத்திற்காக அது கிடப்பில் போடப்பட்டுள்ளது. இப்போது கணபதி டெக்ஸ்டூல் பாலத்தில் இருந்து சத்தி சாலை கரட்டுமேடு வரை மேம்பாலம் அமைக்க வேண்டும். இதுபோக ஊராட் சிகளில் உள்ளமன்ற உறுப்பினர்களுக்கு அமர்வு நிதி (சிட்டிங் பீஸ்) பத்து மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், நமது மாமன்ற உறுப்பினர்களுக்கு சிட்டிங் பீஸ்  வெறும் 800 ரூபாய் மட்டுமே கொடுக்கப்படுகிறது. அதனை  பத்து மடங்காக உயர்த்தி 8 ஆயிரம் ரூபாயாக வழங்க வேண்டும் என்றார்.

கீழ்பவானி வாய்க்கால் காங்கிரீட் திட்டம் எதிர்ப்பு தெரிவித்து கடையடைப்பு

திருப்பூர், மே 27- கீழ்பவானி வாய்க்கால் காங்கிரீட் திட்டதிற்கு எதிர்ப்பு  தெரிவித்து நத்தக்காடையூரில் கடையடைப்பு போராட்டம்  நடைபெற்றது. கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் அமைக்கும் திட்டத்தை கைவிடக் கோரியும், முழுமையாக தூர்வாரி பராமரிக்க வலியுறுத்தியும் வெள்ளிக்கிழமை இந்த கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. அத்துடன் இத் திட்டத்தை கைவிடக் கோரி விவசாயிகள், பொதுமக்கள் கவனயீர்ப்பு கூட்டம் நடத்தினர். நத்தக்காடையூர், பழைய கேட்டை, மருதுறை மற்றும் சுற்று வட்டார கிராமப் பகுதி களில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. நத்தக்காடை யூர் ஊராட்சிமன்றத் தலைவர் செந்தில்குமார் தலைமை யில் நடைபெற்ற கவன ஈர்ப்புக் கூட்டத்தில் அந்த வட்டார  விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள், ஈரோடு, திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கணேசமூர்த்தி, சுப்பராயன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

தொழிலாளியை தாக்கியவர் கைது

தாராபுரம், மே 27- தாராபுரம் அருகே தொழிலாளியை இரும்பு கம்பியால்  தாக்கியவரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். தாராபுரத்தை அடுத்துள்ள கோனேரிபட்டியை சேர்ந்த வர் ராஜகோபால் (52). கூலித்தொழிலாளி. இவரது பக்கத்து  வீட்டை சேர்ந்தவர் சுப்பிரமணி (60). இவர்கள் இருவருக்கு மிடையே வீட்டில் படிக்கட்டு கட்டியது தொடர்பாக பிரச் சனை இருந்து வந்துள்ளது. இந்நிலையில், ராஜகோபால் வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த  சுப்பிரமணி, ராஜகோபாலிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில், ஆத்திரமடைந்த சுப்பிரமணி, இரும்பு கம்பியால்  ராஜகோபலை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த ராஜகோபால் தாரா புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  இதுகுறித்து மூலனூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு  செய்து சுப்பிரமணியை கைது செய்தனர். இதன்பின் தாரா புரம் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி சிறையில் அடைத் தனர்.