பொள்ளாச்சி, ஏப்.13- மேம்பாலங்களை திறந்தவெளி மதுபான கூடமாக மாற்றி வரும் சமூக விரோதிகள் மீது காவல் துறையினர் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டுநர்கள் வேண்டு கோள் விடுத்துள்ளனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி – கோட்டூர் சாலையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த ரயில்வே மேம்பா லம் அமைக்கப்பட்டது. ஆழியாறு, வால்பாறை செல்லும் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் என தினமும் ஆயிரக் கணக்கானோர் பயன்படுத்தும் முக்கிய வழித்தடமாக இப் பாலம் உள்ளது. இந்நிலையில், இந்த பாலத்தை சமூக விரோதிகள் சிலர் திறந்தவெளி மதுக்கூடமாக மாற்றி வரு கின்றனர். இரவு நேரங்களில் மது அருந்திவிட்டு, பாட்டில் களை அப்படியே வீசிச் செல்கின்றனர். மேலும், சென்டர் மீடியன் தடுப்புகள் மீது, காலி மது பாட்டில்களை அடுக்கி வைத்து செல்கின்றனர். இதனால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து வாகன ஓட்டுநர்கள் கூறுகையில், பொள் ளாச்சி - கோட்டூர் சாலை மேம்பாலத்தை மது குடிக்கும் இட மாக, சிலர் மாற்றி வருகின்றனர். ஒரு சிலர் காரை நிறுத்தி யும், பாலத்தின் தடுப்பில் அமர்ந்தும் மது அருந்துகின்ற னர். மதுபாட்டில்களை அப்படியே தடுப்பு சுவரில் வைத்துச் செல்கின்றனர். அவை கீழே விழும் போது வாகன ஓட்டுநர் கள் விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது. இதுகுறித்து, காவல் துறையினர் கண்காணிப்பு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.