சென்னை, பிப்.10- தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு கருப்புக்கொடி காட்டியும், சாலைமறி யலில் ஈடுபட்டும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் கைதாகினர். சட்டமன்றம் கூடி நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் தர மறுப் பது; கிடப்பில் போடுவது, கம்யூ னிஸ்ட் தலைவர்கள், பெரியார், வள்ள லார் மற்றும் காந்தியடிகள் குறித்து அவதூறாக பேசுவது என தனது பத விக்கு பொருத்தமில்லாத நடவடிக்கை களில் ஈடுபட்டு வரும் ஆளுநர் ரவி செல்லும் இடங்களில் எல்லாம் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்தி வருகிறது. அந்த வகையில், ரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் கல்லூரி மற்றும் கருமண்ட பம் தேசியக் கல்லூரியில் நடை பெறும் நிகழ்வுகளில் பங்கேற்பதற் காக ஆர்.என். ரவி சனிக்கிழமையன்று திருச்சி வந்த நிலையில், அவரது வரு கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திரு வானைக்காவல் பகுதியில் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடை பெற்றது. கட்சியின் மாநகர் மாவட்டச் செய லாளர் ஆர். ராஜா தலைமையில் நடை பெற்ற இந்த போராட்டத்தில், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ரேணுகா, வெற்றிச்செல்வன், லெனின், கார்த்தி கேயன், மணிமாறன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் சரஸ்வதி, மோகன், இந்திய மாணவர் சங்க மாவட்டச் செய லாளர் சேதுபதி, பகுதிச் செயலாளர் கள் தர்மா, சுரேஷ், வேலுச்சாமி உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று, ‘தமிழக மக்களுக்கு எதிரான ஆளு நரே தமிழ்நாட்டை விட்டு வெளி யேறு’ என்று முழக்கங்களை எழுப்பி னர். அவர்களில் நூற்றுக்கும் மேற் பட்டோரை போலீசார் கைது செய்தனர்.