இடிபாடுகளில் சிக்கி தொழிலாளி பலி குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்
உதகை, டிச.1- பழைய கட்டிடத்தை இடிக்கும் போது, இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்துக்கு நிவா ரணத் தொகை ரூ.5 லட்சம் வழங்கப்பட்டது. நீலகிரி மாவட்டம், குன்னூர் டைகர் ஹில் காட்டேஜ் பகுதி யில், பழைய கட்டிடத்தை இடிக்கும் பணியில் தொழிலாளர் கள் கடந்த நவ.28 ஆம் தேதியன்று ஈடுபட்டிருந்தனர். அப் போது இடிபாடுகளில் சிக்கி சோலடாமட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி முருகையா (30) என்பவர் உயிரி ழந்தார். இதையடுத்து தொழிலாளர் நலவாரிய விபத்து நிவா ரண நிதியிலிருந்து ரூ.5 லட்சம் நிவாரணத் தொகை வழங்க தமிழக அரசு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து அரசு தலைமை கொறடா கா.ராமசந்திரன் சோலடாமட்டம் பகுதி யில் உள்ள முருகையா வீட்டுக்குச் சென்று அவருடைய தாயார் பத்மாவிடம் ரூ.5 லட்சத்துக்கான காசோலையை சனி யன்று வழங்கினார்.
கார் விற்பனையாளர் கொலை
அவிநாசி, டிச.1- அவிநாசியில் நடைப்பயிற்சி சென்றுக் கொண்டிருந்த கார் விற்பனையாளரை வெட்டிக் கொலை செய்த சம்ப வம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்னறர். திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே உள்ள வேலாயு தம்பாளையம் ஊராட்சி, காசிகவுண்டன்புதூர் பகுதியிலுள்ள தாமரை கார்டன் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (47). நான்கு சக்கர வாகனம் கார் விற்பனை தொழில் செய்து வந்த இவருக்கு, வித்யா என்ற மனைவியும், இரு பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், ஞாயிறன்று அதிகாலை நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தார். அவி நாசி - மங்கலம் சாலை, புறவழிச்சாலை அருகே சென்றபோது, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் அவரை கொலை வெறியுடன் வெட்டியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த ரமேஷ், அவிநாசி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, கோவை தனியார் மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே உயிரி ழந்தார். இச்சம்பவம் குறித்து அவிநாசி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வீடு கட்டித் தருவதாகக்கூறி மோசடி ரூ.6 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
சேலம், டிச.1- வீடு கட்டித் தருவதாகக்கூறி ரூ.3 லட்சம் வாங்கி ஏமாற் றிய வழக்கில், பாதிக்கப்பட்டவருக்கு ரியல் எஸ்டேட் நிறுவ னம் ரூ.6.10 லட்சம் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம், தாசநாயக்கன்பட்டி அருகே உள்ள சௌடாம்பிகா நகரைச் சேர்ந்தவர் ஆனந்த். இவர் சொந்த வீடு ஒன்றை கட்ட நினைத்து, சேலம் ஜங்சன் மெயின் ரோட் டில் செயல்பட்டு வரும் ரியல் எஸ்டேட் நிறுவனத்தை அணுகி யுள்ளார். அந்த நிறுவனம், மல்லூர், தேங்கல்பாளையம் பகுதி யில் 2,400 சதுரடியில் வீடு கட்டித்தரப்படும் என விளம் பரப்படுத்தி அதற்கான தொகை ரூ.33 லட்சம் என அறிவித் திருந்தது. வீடு கட்டி கொடுப்பதற்காக ஆனந்த் 2 தவணை யாக ரூ.3 லட்சத்தை ரியல் எஸ்டேட் நிறுவனத்திடம் வழங்கி யுள்ளார். 6 மாத காலத்துக்குள் மீதித்தொகை பெற்றுக் கொண்டு கட்டுமானப் பணியை முடித்து ஒப்படைக்க வேண் டும் என ஒப்பந்தப் பத்திரம் எழுதி கொடுக்கப்பட்டது. அதன் படி, அந்த நிறுவனம் வீட்டை கட்டிக்கொடுக்கவில்லை. இதையடுத்து தான் கொடுத்த பணத்தை திரும்ப தரு மாறு கேட்ட நிலையில், கீரப்பாப்பம்பாடி பகுதியில் காலி நிலத்தை ஒதுக்குவதாகவும், ரூ.3 லட்சத்தை கழித்துக் கொண்டு மேலும் ரூ.4 லட்சம் கொடுக்குமாறு கூறியது. இதற் கான ஒப்பந்தமும் செய்து கொண்டது. அதன்படி ரூ.4 லட் சத்தை செலுத்துவதற்கு ஆனந்த் தயாராக இருந்தும், நிலத்தை கிரயம் செய்து கொடுக்காமல் ரியல் எஸ்டேட் நிறு வனம் ஏமாற்றிவந்தது. மேலும், ஒப்பந்தத்தை மீண்டும் 3 மாதம் நீட்டித்தது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஆனந்த், சேலம் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்குத் தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த ஆணைய தலை வர் கணேஷ்ராம், உறுப்பினர் ரவி ஆகியோர் பாதிக்கப்பட்ட நுகர்வோர் செலுத்திய ரூ.3 லட்சத்தை திரும்ப வழங்க வேண் டும். முறையற்ற வணிக நடவடிக்கைக்காக ரூ.1.50 லட்சம், சேவை குறைபாட்டிற்காக ரூ.1 லட்சம், மனுதாரருக்கு ஏற் பட்ட மனஉளைச்சலுக்காக ரூ.50 ஆயிரம், வழக்கு செலவு ரூ.10 ஆயிரம் என மொத்தம் ரூ.6.10 லட்சத்தை 9 சதவிகித வட்டியுடன் 2 மாத காலத்திற்குள் ரியல் எஸ்டேட் நிறுவனம் வழங்க வேண்டும், என தீர்ப்பளித்தனர்.
கோவை உணவுத் திருவிழாவில் தகராறு
கோவை, டிச.1- கோவையில் நடைபெற்ற உணவுத் திரு விழாவில் தகராறு ஏற்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டது. ‘கோவை விழா’வின் ஒரு பகுதியாக கொடிசியா மைதானத்தில் கொங்கு திரு மண உணவுத் திருவிழா மற்றும் கண்காட்சி, சனி மற்றும் ஞாயிறன்று நடைபெற்றது. இதற்காக பெரியவர்களுக்கு ரூ.799, குழந் தைகளுக்கு ரூ.499 என கட்டணம் நிர்ண யிக்கப்பட்டிருந்தது. ஒரு நபர் அனுமதிச் சீட்டு வாங்கி உள்ளே வந்து விட்டால், அன்லி மிடெட் முறையில் சாப்பிடலாம் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்திருந் தனர். அதன்படி, சனியன்று ஆயிரக்கணக் கான மக்கள் உணவுத் திருவிழாவிற்கு வந்தி ருந்தனர். அதிகளவிலான கூட்டம் காணப் பட்ட நிலையில், உணவு பரிமாறும் ஒரு இடத்தில் பொதுமக்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதல் இளைஞர் களுக்கும், பெரியவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதேசமயம் முறை யான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என வும், எந்த உணவு கேட்டாலும் இல்லை என்று கூறுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டி யுள்ளனர். மேலும், உணவை கேட்டாலும் தர மறுப்பதாகவும், கெஞ்சி கெஞ்சி வாங்க வேண்டி இருந்ததாகவும், உணவும் பாதி வெந்தும், வேகாமலும் ருசியில்லாமல் இருப் பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
ஆம்னி வேன் மோதி 3 பேர் உயிரிழப்பு
நாமக்கல், டிச.1- மோகனூரில் நடைப்பயிற்சி சென்ற போது, ஆம்னி வேன் மோதியதில், இரண்டு பெண்கள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். நாமக்கல் மாவட்டம், மோகனூர் அராக் காட்டூர் பகுதியை சேர்ந்தவர் மலையண் ணன் (68). இவரது மனைவி நிர்மலா (55). அதே பகுதியைச் சேர்ந்தவர் செல்லம்மாள் (65). தினசரி இவர்கள் மூவரும் காலையில் நடைப்பயிற்சிக்கு செல்வது வழக்கம். அந்த வகையில் ஞாயிறன்று காலை நாமக்கல் - மோகனூர் சாலையில் நடைப்பயிற்சிக்கு சென்றனர். அப்போது, நாமக்கல்லில் இருந்து மீன்களை ஏற்றிக் கொண்டு வந்த ஆம்னி வேன் திடீரென மூன்று பேர் மீதும் மோதியது. இதில் மலையண்ணன் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். மேலும், படுகாய மடைந்த இருவரும் நாமக்கல் அரசு மருத் துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், அவர்களும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இவ் விபத்து குறித்து மோகனூர் காவல் துறை யினர் வழக்குப்பதிவு செய்து, ஆம்னி வேன் ஓட்டுநரான மோகனூரைச் சேர்ந்த மணி கண்டன் என்பவரை கைது செய்தனர்.
சிபிஎம் கிளைச்செயலாளர்கள் தேர்வு
கோவை, டிச.1- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை, நகர, ஒன் றிய, மாவட்ட மாநாடுகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக மதுக்கரை ஒன்றியத்திற்குட்பட்ட சிபிஎம் கிளை மாநாடுகள் நடைபெற்று கிளைச்செயலாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதன்படி, வெள்ளலூர் -1.சி - ரங்கநாதன், வெள்ள லூர் 2 - பிரபு, வெ.இடையர்பாளையம் .1 - ஏ.செல்வராஜ், வெ.இடையர்பாளையம் .2 - வி.வரதராஜ், வள்ளியம்மை புரம் - ஆறுமுகம், வெள்ளலூர் மாதர். அமுதா, செட்டி பாளையம் .1 - அருணாசலம், செட்டிபாளையம் 2.சி - கே.எம்.சிவக்குமார், செட்டிபாளையம் -3 ஏ திருமூர்த்தி, மலுமிச்சம்பட்டி. 1 - கூரத்தாழ்வார், மலுமிச்சம்பட்டி .2 - சண்முகசுந்தரம், மலுமிச்சம்பட்டி .3 - ஆர்.வரதராஜ், ஜெஜெ நகர் கிளை - பி.ஆறுமுகம், மயிலேறி பாளை யம் கிளை - பி.சண்முகம், ஒத்தக்கால் மண்டபம் கிளை - பழனிச்சாமி, ஜிகேடி கட்சி கிளை - ஆர். சீதாபதி, ஓகே பாளையம் 2ஆவதுவார்டு கிளை - பி.மருதாசலம், ஓகே பாளையம் 3ஆவதுவார்டு கிளை - எம். பழனிச்சாமி, ஓகே பாளையம் மாதர் 1 - பி.மகேஸ்வரி, மாதர் 2 - விஜய லட்சுமி, சீரப்பாளையம்.1 - எஸ். கணேசன், சீரபாளையம். 2 -ஆர். பழனிச்சாமி, பாலத்துறை கிளை - வி. ஆறுச்சாமி, திருமலையாம் பாளையம் - கீதா, மதுக்கரை - எம்.பத்மநா பன், சாவடி கிளை - பி. கந்தசாமி, வாளையார் -கே. ரங்க நாதன், மலுமிச்சம்பட்டி மாதர் கிளை - எஸ். சரஸ்வதி ஆகிய கிளைச் செயலாளர்கள் தேர்வு செய்யப்பட்ட னர்.
மேட்டுப்பாளையம்
இதேபோன்று மேட்டுப்பாளையம் தாலுகா விற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற கிளை மாநாடு களில் கிளைச்செயலாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதன்படி, பில்லூர் - மல்லிகா, தோலாம்பாளையம் - பி. சுரேஷ், சீலியூர்- எஸ்.ஆர்.கந்தசாமி, தாயனூர் - சத்திய மூர்த்தி, விஜயநகரம் - தங்கமணி, குந்தா காலனி-கே. ஜீவாமணி, ரங்கநாதபுரம் - தனலட்சுமி, காரமடை - ஆர். சுரேஷ், டி.பாலன்நகர் - நடேசன், காட்டூர் - பி.பூபதி ராஜன், மேட்டுப்பாளையம்.2 - எம்.மெகபுனிசா, ராம்பாளை யம் - பழனிச்சாமி, தென் பொன்முடி - பி.சுப்பிரமணி, சிறு முகை நால்ரோடு- நாகேந்திரன், சிறுமுகை - செல்வ மார, வெள்ளிபாளையம் - பி.பூபாலன், சிட்டேபாளையம் - எஸ்பி செல்வராஜ் ஆகியோர் தேர்வு ெய்யப்பட்டனர்.
ஆனைமலை தாலுகா
வேட்டைக்காரன் புதூர் - சி சஞ்சீவி, வேட்டைக்கா ரன் புதூர் பெண்கள் கிளை - எஸ். ரத்தினா, ஆனைமலை - ஏ.கே. செல்வகுமார் குப்புரம், டாப்ஸ்லிப் - கே.முருக தாஸ், காளியாபுரம்- டி. சுரேஷ், வால்பாறை-கே.மணி கண்டன், நாகரூத்து - எஸ்.பாபு, சின்னார்பதி - ஐ.லட்சு மணன், அன்பு நகர் - பி. மாரிமுத்து, பந்தல்கால் அம்மன் பதி - டி.நாகராஜ், பந்தல்கால் அம்மன் பதி, பெண்கள் கிளை - செல்லம்மாள், ஜே ஜே நகர்- சின்னமாரி, புளியங் கண்டி - லோகநாதன், அங்காளக்குறிச்சி - சந்தியா, ஆழி யார் - ரஞ்சிதா, அண்ணாநகர் - சுரேஷ்குமார், பாரதி நகர் - பிரபு, காமராஜர் நகர்-மருது துறை ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
எஸ்எஸ் குளம் மேற்கு
இடிகரை - ஏ.சௌந்திரராஜன், அத்திப்பாளையம் - டி. சாமிநாதன், கோவிந்தநாயக்கன் பாளையம் - ஏ.விஸ் வநாதன், கீரணம் 1 ஆவது கிளை - எஸ்.சிதம்பரம், கீரணம் 2 ஆவது கிளை - பி.முருகேசன், கீரணம் ஹவுசிங் யூனிட் கிளை - கே.செந்தில்குமார், கிரணம் புதுப்பாளை யம் - ஏ.சிவக்குமார், சாம்பரானி குட்டை - ஆர்.செல்வ ராஜ், பண்ணாரியம்மன் நகர் கிளை-என்.ரமேஷ், சரவ ணம்பட்டி கிளை - கே. ஆறுமுகம், விசுவாசபுரம் கிளை - பி.ஜி.தாமஸ், சிவானந்தாபுரம் 1 ஆவது கிளை - சி.கனக ராஜ், சிவானந்தாபுரம் 2 கிளை - முத்துமுருகன், சிவா னத்தாபுரம் மாதர்-எஸ்.சுகந்தி, சி.வே.பட்டி 1 ஆவது கிளை - எஸ்.மோகன், சி.வே.பட்டி 2 கிளை - கே.அருண் குமார், சி.வே.பட்டி மாதர் - ஜி.ராதா, உடையாம்பாளை யம் 1ஆவது கிளை - வெள்ளியங்கிரி, உடையாம்பாளை யம் 2 ஆவது கிளை - ஏ.பிரபாகரன், உடையாம்பாளை யம் 3 ஆவது கிளை-எம்.வெள்ளையங்கிரி, காந்திநகர் மேற்கு - கே.சந்திரசேகர், வஞ்சியம்மன் நகர் கிளை - ஏ. கோவிந்தன் குட்டி, உடையாம்பாளையம் மாதர் கிளை 1 - ஆர்.சகுந்தலா, உடையாம்பாளையம் மாதர் கிளை 2 - ஆர்.லதா, அஞ்சுகம் நகர் கிளை - வடிவேலு, நா.க.புதூர் கிளை 1- என்.கனகராஜ், நா.க.புதூர் கிளை 2- எஸ்.பி. செல்வராஜ், கே.கே நகர் கிளை 1- கிருஷ்ணன், கே.கே நகர் கிளை 2 - எம்.நாகராஜ், உருமாண்டம் பாளையம் - சம்பத், வெள்ளக் கிணறு கிளை- பழனிசாமி, சீ. மே. பாளையம் - வீ.குமாரசாமி ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர்.
தெருநாய் கடித்து 30 பேர் காயம்
நாமக்கல், டிச.1- பள்ளிபாளையத்தில் 30க்கும் மேற்பட்டோர் தெரு நாய் கடித்து, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள னர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் நகராட்சிக்குட் பட்ட பல்வேறு இடங்களில் தெருநாய்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. கூட்டாக உலாவும் தெருநாய்கள் பொதுமக்களை அச்சுறுத்தியும், சில நேரங்களில் காயப் படுத்தியும் வருகிறது. தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும் என தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ள நிலையில், கடந்த சில தினங்க ளாக தெருநாய்களால் பொதுமக்கள் அதிகளவில் பாதிப்புக் குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில், ஞாயிறன்று காலை பெரியார் நகர், ஆவரங்காடு, காந்திபுரம், நான்காவது கிராஸ், ஆர்.எஸ்.சாலை என பல்வேறு இடங்களில் சுமார் 30க்கும் மேற்பட்டோரை தெரு நாய் ஒன்று கடித்தது. காயமடைந்த அனைவரும் பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பள்ளிபாளையம் நகராட்சி யில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர் சண்முகசுந்தரம் என்பவரின் கைவிரலை தெரு நாய் கடித்துக் குதறியதில் கைவிரல் பலத்த சேதம் அடைந்தது. ஒரேநாளில் 30க் கும் மேற்பட்டோரை தெரு நாய் கடித்த சம்பவம் பள்ளி பாளையம் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. இதையடுத்து அந்த நாயை நகராட்சி நிர்வாகத்தி னர் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு பிடித்தனர்.