districts

img

கோபி அருகே புதிய வீடு கட்ட பழங்குடியின மக்களுக்கு உத்தரவு

கோபிசெட்டிபாளையம், அக்.18- கோபிசெட்டிபாளையம் அருகே பழங்குடி மக்களின் சிதிலமடைந்த தொகுப்பு வீடுகளை அப்புறப்படுத்தி புதிய வீடுகள் கட்டுவதற்கான பணி உத்தரவு வழங்கப்பட்டது. ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கணக்கம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட வேதபாறை யில் பழங்குடி மக்கள் 100க்கும் மேற்பட்டோர் குடும்பத்து டன் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு கடந்த 30  ஆண்டுகளுக்கு முன்னர் பகவதி நகரில் அரசு சார்பில் இல வச தொகுப்பு வீடுகள் கட்டி வழங்கப்பட்டன. இதில், பல வீடு கள் சிதலமடைந்து இடிந்து விழும் நிலையில் இருப்பதால், குடியிருக்கவே அச்சமாக உள்ளது. எனவே, தங்களது பகுதியில் தொகுப்பு வீடுகளுக்கு மாற்றாக குடியிருக்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டி பழங்குடி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதை யேற்று தமிழ்நாடு அரசு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பழங் குடி நலதிட்டத்தின் கீழ் சிதலமடைந்த ஒவ்வொரு தொகுப்பு வீட்டிற்கும் தலா ரூ.4 லட்சத்து 37 ஆயிரம் வீதம் என 40 வீடுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில், புதனன்று வேதபாறையில் பழங்குடி மக்க ளின் சிதலமடைந்த தொகுப்பு வீடுகளை அப்புறப்படுத்தி விட்டு புதிய வீடுகள் கட்டுவதற்கான பணி உத்தரவை அந்தி யூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் பயனாளி களுக்கு வழங்கினார். மேலும், சிலதமடைந்த வீடுகளை அப்புறப்படுத்துவதால் பயனாளிகள் புதிய வீடுகள் கட்டும் வரை தங்குவதற்கு தற்காலிக குடியிருப்புகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.