நூலகம் கட்டும் பணியை விரைந்து முடிக்க உத்தரவு
நூலகம் கட்டும் பணியை விரைந்து முடிக்க உத்தரவு சேலம், மார்ச் 7- சேலம் மாநகராட்சிக்குட்பட்ட களரம்பட்டியில் ரூ.54 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும், நூலகம் கட்டும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என மாந கராட்சி மேயர் ஆ.ராமச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார். சேலம் மாநகராட்சி, அம்மாப்பேட்டை மண்டலம், 44 ஆவது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப் பட்டு வரும் பல்வேறு பணிகளை மேயர் ஆ.ராமச்சந்தி ரன், ஆணையர் சீ.பாலச்சந்தர் ஆகியோர் ஆய்வு மேற் கொண்டனர். அப்போது களரம்பட்டியில் கல்வி நிதி யின்கீழ் ரூ.54 லட்சம் மதிப்பில் தொடங்கப்பட்டுள்ள நூலக கட்டுமானப் பணியை பார்வையிட்டு, பணியை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட பொறியாளர், அலு வலர்களுக்கு மேயர், ஆணையர் ஆகியோா் உத்தர விட்டனர். இதேபோல், கரீம் காம்பவுண்ட் அருகில் 15 ஆவது மத்திய நிதிக்குழு திட்டத்தின்கீழ் கட்டி முடிக்கப் பட்டுள்ள ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் நகர்ப்புற நல வாழ்வு மைய கட்டடத்தையும் மேயர், ஆணையர் பார்வையிட்ட னர். மேலும், இப்பகுதியில் நமக்கு நாமே திட்டம் மூலம் கைப்பந்து திடல் ஒன்று அமைக்க அப்பகுதி மாமன்ற உறுப்பினர் மு.இமயவர்மன் கோரிக்கை வைத்தார். இதனையேற்று, நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மதிப் பீடு செய்ய மேயர், ஆணையர் சம்பந்தப்பட்ட அலு வலர்களுக்கு உத்தரவிட்டனர்.
ரேசன் அரிசி பறிமுதல்
ரேசன் அரிசி பறிமுதல் கோவை, மார்ச் 7- கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள செலக் கரிசல் கிராமத்தில் செந்தில்குமார் என்பவருக்கு சொந்த மான கோழி பண்ணை உள்ளது. இங்கு சுமார் பத்து லட் சத்துக்கு மேற்பட்ட முட்டையிடும் கோழிகள் வளர்க்கப் பட்டு வருகிறது. இந்த கோழிகளுக்கு தீவனமாக ரேசன் அரிசியை பதுக்கி பயன்படுத்தி வருவதாக சென்னை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் உணவுக் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் ரமேஷ் கண்ணன் தலைமையி லான போலீசார் கோழி பண்ணையில் வியாழனன்று காலை திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கி ருந்த குடோனில் சுமார் 40 டன் அளவிலான அரிசி தீவ னத்திற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. அதனை அதி காரிகள் சோதித்துப் பார்த்தபோது ரேசன் அரிசி என்பது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை அதிகாரிகள் ரேசன் அரிசிகளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அல்லிக்குட்டை ஏரியில் புனரமைப்புப் பணிகள்
சேலம், மார்ச் 7- சேலம் அல்லிக்குட்டை ஏரியில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்புப் பணிகளை வரும் ஜூன் மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ரா.பிருந்தாதேவி உத்தர விட்டுள்ளார். சேலம் மாநகராட்சி, அல்லிக்குட்டை ஏரியை புனரமைத்து அழகுபடுத்தும் பணி மற்றும் அம்மாப்பேட்டை மண்டலம் நுண்ணு யிரி உரம் தயாரிக்கும் மையத்தில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ரா.பிருந்தாதேவி புதனன்று ஆய்வு செய்தார். இதன்பின் அவர் பேசுகையில், சேலம் மாநக ராட்சியில் அல்லிக்குட்டை ஏரி, போடி நாயக்கன்பட்டி ஏரி, மூக்கனேரி ஆகிய நீர் நிலைகளில் ரூ.52 கோடி மதிப்பீட்டில் புனர மைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அல்லிக்குட்டை ஏரியானது அம்மாப்பேட்டை வார்டு அலுவலகப் பகுதி யில் 23.65 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள் ளது. இந்த ஏரியைப் புனரமைத்து அழகு படுத்துவதற்கு உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதியின் கீழ் ரூ.10 கோடி வழங் கப்பட்டுள்ளது. இந்த ஏரியை புனரமைப்ப தன் மூலம் ஏரியைச் சுற்றியுள்ள விவசாய நிலங்களின் மண், குடிநீா், நிலத்தடி நீர் மாசு படுவது தடுக்கப்படுவதுடன், மழைக்காலங் களில் மழைநீர் தேங்கி நிற்பதால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து, விவசாயத்துக்கான தண் ணீர் தேவையை பூர்த்தி செய்து, விவசாய உற்பத்தி பெருக்கத்திற்கு வழிவகை செய்யப் பட்டுள்ளது. இந்த ஏரி புனரமைப்புப் பணிகள் அனைத் தும் வரும் ஜூன் மாதத்திற்குள் முடிக்கப் பட்டு, ஏரியின் நீர் பரவல் பகுதி அதிகரிக் கப்படுவதுடன், மழைக்காலங்களில் அதிகள வில் வெளியேறும் உபரிநீர், தற்போது அமைக் கப்பட்டு வரும் கால்வாய் மூலம் திருமணி முத்தாற்றில் கலக்கும் வகையில் செயல் படுத்தப்பட உள்ளதென ஆட்சியர் ரா. பிருந்தாதேவி கூறினார்.
கல்லூரி மாணவர்களுக்கான ஜூடோ போட்டி
சேலம், மார்ச் 7- கோரிமேடு அரசு மகளிர் கலைக்கல்லூரி யில் நடைபெற்ற ஜூடோ போட்டியில் ஏராள மான மாணவர்கள் கலந்து கொண்டனர். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற கலைக்கல்லூரி மாணவர்க ளுக்கான ஜூடோ போட்டிகள் கோரிமேடு அரசு மகளிர் கலைக்கல்லூரியில் நடைபெற் றது. தொடக்க நிகழ்ச்சிக்கு கல்லூரி பேராசி ரியர்கள் கீதா, பூங்கோதை ஆகியோர் முன் னிலை வகித்தனர். உடற்கல்வி இயக்குநர் சிவகுமார் வரவேற்றார். கல்லூரி முதல்வர் (பொ) ரங்கநாயகி, பெரியார் பல்கலைக் கழக உடற்கல்வி இயக்குநர் வெங்கடாஜ லம் ஆகியோர் போட்டிகளை தொடங்கி வைத்தனர். இதில் சேலம், நாமக்கல், தரும புரி, கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட வீரர், வீராங் கனைகள் கலந்துகொண்டு தங்களது திற மைகளை வெளிப்படுத்தினர். ஆண்கள், பெண்களுக்கு 48, 52, 57, 62, 69, 70 மற்றும் அதற்கு மேல் என்ற 7 எடைப்பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடைபெற்றன. ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்ற வீரர்களுக்கு தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் வழங்கப்பட்டன.
சமூக ஒற்றுமையை சீர்குலைக்க குழந்தை கடத்தல் வதந்தி: காவல்துறை எச்சரிக்கை
சமூக ஒற்றுமையை சீர்குலைக்க குழந்தை கடத்தல் வதந்தி: காவல்துறை எச்சரிக்கை திருப்பூர், மார்ச் 7 - தமிழ்நாட்டில் சமீபகாலமாக வெளிமாநிலத்தவர் குழந் தைகளை கடத்த முயற்சிப்பது போன்ற போலி வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகின்றன. பொது மக்கள் இதை பார்த்து அச்சப்படத் தேவையில்லை. உதவி தேவைப்பட்டால் காவல்துறையை அணுகவும் என்று திருப்பூர் மாநகர காவல் துறை தெரிவித்துள்ளது. பொதுமக்களிடையே அச்சத்தையும் பீதியையும் உரு வாக்க வேண்டும் என்ற எண்ணத்துடன், சமூக ஒற்றுமையை சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் சமூக விரோதி கள் இதுபோன்ற காணொளிகளையும் செய்திகளையும் பரப்பி வருகின்றனர். இது போன்ற போலியான காணொளிகளையும் செய்திக ளையும் பார்த்து பொதுமக்கள் அச்சப்படவோ, பதற்றமடை யவோ வேண்டாம். பொதுமக்களுக்கு ஏதேனும் சந்தேகமோ அல்லது உதவி தேவை பட்டாலோ மாநகர காவல் கட்டுப் பாட்டு அறை உதவி எண்: 9498181209, அல்லது 100-க்கு அழைக்கலாம். இது போன்ற வதந்திகளை பரப்பவோ, மற்ற வர்களுக்கு பகிரவோ வேண்டாம். தவறான தகவல்களை பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகர காவல் ஆணையாளர் பிரவீன் குமார் அபினபு கூறியி ருக்கிறார்.
பளு தூக்கும் போட்டி: பல்லடம் மாணவர்கள் சாதனை
பளு தூக்கும் போட்டி: பல்லடம் மாணவர்கள் சாதனை திருப்பூர், மார்ச் 7- தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டியில் பல்லடம் மாணவர்கள் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ள னர். பல்லடம், ஆண்டாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரித்திக். இவர் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு யுபிஎஸ்இ தேர்வுக்கா கப் பயிற்சி பெற்று வருகிறார். பல்லடம், மகாலட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ். இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு இளங்கலை படித்து வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக பளு தூக்கும் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலை யில் தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டி குஜராத் மாநி லம், சூரத் நகரில் அண்மையில் நடைபெற்றது. இந்தியா முழு வதும் இருந்து 400 க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்தப் போட்டியில் 83 கிலோ எடைப் பிரிவில் ரித்திக் தங்கப்பதக்கத் தையும், 59 கிலோ எடை பிரிவில் விக்னேஷ் வெள்ளிப் பதக்கத் தையும் வென்று அமெரிக்காவில் ஜூன் மாதம் நடைபெற உள்ள சர்வதேச பளு தூக்கும் போட்டியில் கலந்து கொள்ள தேர்வாகி உள்ளனர். இந்நிலையில் பல்லடத்துக்கு புதன்கி ழமை வந்த இருவருக்கும் அவரது குடும்பத்தினர் மற்றும் நண் பர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். வெற்றிபெற்ற இருவ ரையும் ஊக்குவிக்கும் வகையில் சர்வதேச போட்டியில் பங் கேற்க இருவருக்கும் தமிழக அரசு உதவ வேண்டும் என விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
37 கிலோ கஞ்சா பறிமுதல்
37 கிலோ கஞ்சா பறிமுதல் அவிநாசி, மார்ச் 7- அவிநாசி - மங்கலம் சாலையில் கடந்த வாரம் காவல்ர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சாலையோரம் கிடந்த 4 சாக்கு மூட்டைகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அதில் 37 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. மேலும், விற்பனைக்காக கஞ்சா கடத்தி வரப்பட்டு, காவலர்கள் ரோந்துப் பணியை அறிந்து மர்ம நபர்கள் கஞ்சா மூட்டைகளை வீசிச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் தனிப்படை அமைத்து அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் தப்பியோடிய மர்ம நபர்களை தேடி வந்தனர். இதைத்தொ டர்ந்து அவிநாசி போலீஸார் வழக்குப்பதிவு செய்து, இவ்வ ழக்கில் தொடர்புடைய மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த பியாருல் சேக் (34), சகில் முஸ்தாக்(22) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த பெண் மார்கீஸ் பிபி(35) ஆகியோரைக் கைது செய்தனர்.
பஞ்சு விலையை உயர்த்தும் பெருநிறுவனங்கள்: விலை உயர்வை கட்டுப்படுத்த சைமா கோரிக்கை
திருப்பூர், மார்ச் 7 – தற்போது இருப்பு வைத்துள்ள பஞ்சு விலையை பெரு நிறுவனங்கள் உயர்த்தத் தொடங்கியுள்ளனர். பின்ன லாடைத் தொழிலைப் பாதுகாக்க விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும். அதற்கு ஒன்றிய ஜவுளித்துறை அமைச் சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம் (சைமா) கடிதம் அனுப்பியுள் ளது. சைமா தலைவர் ஏ.சி. ஈஸ்வரன் இது குறித்து வியாழக்கிழமை வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது: கடந்த ஆறு மாதங்களாக பஞ்சு, நூல் விலையில் பெரிய மாற்றம் இல்லா மல் பின்னலாடைத் தொழில் சீராக நடை பெற்று வந்தது. பஞ்சு பேல் விலை ரூ.55 ஆயிரத்தில் இருந்து ரூ.57ஆயிரம் வரை இருந்தது. பருத்தி சீசனில் வழக்கமாக 325 லட் சம் பேல் பஞ்சு வரத்துக்கு வாய்ப்பு உள் ளது. இதில் சுமார் 300 லட்சம் பேல்கள் பஞ்சு, நம் உள்நாட்டு தயாரிப்புக்கும், ஏற்றுமதி ஆயத்த ஆடைகள் தயாரிப் புக்கும் தேவைப்படும். நடப்பு சீசனில் இதுவரை 215 லட்சம் பேல்கள் மட்டுமே சந்தைக்கு வந்துள் ளது. இதில் 125 லட்சம் பேல்கள் நூற் பாலை, பின்னலாடை நிறுவனங்க ளுக்குச் சென்றுவிட்டது. மீதமுள்ள 90 லட்சம் பேல்கள் பஞ்சு இந்திய பருத்திக் கழகம் (சிசிஐ), கார்ப்பரேட்டுகள் மற் றும் ஜின்னர்கள் வசம் இருப்பில் உள் ளன. இந்த சீசன் முடிவதற்குள் மேலும் சுமார் 100 லட்சம் பேல்கள் பஞ்சு சந் தைக்கு வர வேண்டியுள்ளது. இந்த நிலையில் இருப்பு வைத் துள்ள பெரு நிறுவனங்கள் பஞ்சு விலையை ஒரு கண்டி ரூ.63 ஆயிரம் முதல் ரூ.65 ஆயிரம் வரை உயர்த்தி விற்க ஆரம்பித்துள்ளனர். இதனால் மேலும் விலை உயரக்கூடும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி விவசாயிக ளும், ஜின்னர்களும் தங்களிடம் உள்ள இருப்பை நிறுத்தி வைத்துள்ளனர். இது மாதிரியான சந்தர்ப்பங்களில் இந்திய பருத்திக்கழகம், பன்னாட்டு நிறு வனங்கள் மற்றும் ஜின்னர்கள் தங்களது இருப்பில் இருந்து நியாயமான விலைக்கு விற்றால்தான் நூற்பாலை களும், பின்னலாடைத் தொழிலும் சீராக இயங்க முடியும். இந்த விலை உயர்வு நிலை மேலும் நீடித்தால் எதிர்வரும் ஆறு மாதங்களில் சில நூற்பாலைக ளும், பல பின்னலாடை நிறுவனங்க ளும் தங்கள் இயக்கத்தை நிறுத்திக் கொள்ள நேரிடும். ஏற்கெனவே ஒரு ஷிப்ட் என்ற அள வில் இயங்கும் ஆலைகள் ஸ்தம்பிக் கும். எனவே மத்திய அரசு ஜவுளித்துறை உடனடியாக இவற்றைப் பரிசீலித்து விலை உயர்வைக் கடுப்படுத்தி பின்ன லாடைத் தொழிலைப் பாதுகாக்க வேண் டும் என்று கேட்டுக் கொள்வதாக ஏ.சி. ஈஸ்வரன் கூறியிருக்கிறார்.
பட்டா இடத்துக்கு தடையின்மை சான்று கோரி காத்திருப்புப் போராட்டம் நடத்த நெசவாளர் முடிவு
பட்டா இடத்துக்கு தடையின்மை சான்று கோரி காத்திருப்புப் போராட்டம் நடத்த நெசவாளர் முடிவு திருப்பூர், மார்ச் 7 – பல்லடம் வடுகபாளையத்தில் கைத்தறி நெசவாளர்க ளுக்கு வழங்கப்பட்ட பட்டா இடத்துக்கு தடையின்மைச் சான்று வழங்கக் கோரி மார்ச் 13ஆம் தேதி காத்திருப்புப் போராட்டம் நடத்தப்படும் என்று திருப்பூர் மாவட்ட சிஐடியு கைத்தறி நெசவாளர் சங்கம் கூறியுள்ளது. இது குறித்து திருப்பூர் மாவட்ட கைத்தறி நெசவாளர் சங்கச் செயலாளர் என்.கனகராஜ் வியாழக்கிழமை மாவட்ட ஆட்சிய ருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் வடுகபாளையம் கிராமத்துக்கு உட்பட்ட பூமி தான நிலத்தில் 292 கைத்தறி நெசவாளர்க ளுக்கு 20 ஆண்டுகளுக்கு முன் பட்டா வழங்கப்பட்டது. அதன் பேரில் நீதிமன்ற தடையாணை பெறப்பட்டது. அதை நீதிமன் றத்தில் வாதாடி கைத்தறி நெசவாளர்களுக்கு அந்த பட்டா வழங்க வேண்டும் என்று தீர்ப்பும் பெறப்பட்டது. அந்த நிலத் தில் மின்சாரம் வாங்க வேண்டும் என்றாலும், வங்கிகளில் கட னுதவி பெற வேண்டும் என்றாலும்கூட, வீடு கட்டுவதற்காக தடையின்மை சான்று வங்கிகளில் கேட்கப்படுகிறது. இத னால் எதுவும் செய்வதற்கு வழி இல்லாமல் நெசவாளர்கள் தடு மாறிக் கொண்டு இருக்கிறார்கள். எனவே நீண்ட காலமாக இருக்கக்கூடிய இந்த பிரச்சனையை மாவட்ட ஆட்சித் தலை வர் கவனத்தில் எடுத்து உடனடியாக தலையிட்டு தடை யின்மை சான்று வழங்க கேட்டுக் கொள்கிறோம். இதை மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு வருவ தற்காக மார்ச் 13, புதன்கிழமை காலை 10 மணி முதல் பல்லடம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கைத்தறி நெசவாளர்க ளின் காத்திருப்பு போராட்டம் நடைபெறும். எனவே தமிழக முதல்வரும் இப்பிரச்சனையில் தலையிட்டு உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட கைத்தறி நெசவாளர் சங்க மாவட்டச் செயலாளர் என்.கனகராஜ் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
சிறுமிக்கு பாலியல் தொல்லை 20 ஆண்டுகள் சிறை
சிறுமிக்கு பாலியல் தொல்லை 20 ஆண்டுகள் சிறை தருமபுரி, மார்ச் 7- சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் தொடர்பு டையவருக்கு, 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தரும புரி போக்சோ நீதிமன்றம் தீர்ப்ளித்துள்ளது. தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள கிரா மத்தைச் சோ்ந்த 7 வயது சிறுமி, அருகிலுள்ள தனியார் பள்ளி யில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 2022 டிச.4 ஆம் தேதியன்று வீட்டருகே உள்ள உறவினர் வீட்டுக்கு விளை யாடச் சென்ற இந்த சிறுமியை, அதேபகுதியைச் சேர்ந்த முருகேசன் (47) என்பவர் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதையறிந்த சிறுமி யின் பெற்றோா் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன் பேரில் காவல் துறையினர் போக்சோ உள்ளிட்ட சட்டப்பி ரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து முருகேசனை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை தரும புரி மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், விசாரணை முடிவுற்று, குற்றம் சாட்டப்பட்ட முருகேசனுக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.25 ஆயிரம் அபரா தம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
ஓடையில் குப்பைக் கழிவு தடுக்க பொதுமக்கள் கோரிக்கை
ஓடையில் குப்பைக் கழிவு தடுக்க பொதுமக்கள் கோரிக்கை கோபி, மார்ச் 7- ஈரோடு மாவட்டம், கோபி நகராட்சி தூய்மை நகராட்சி யாக்கிட “எனது குப்பை எனது பொறுப்பு” என்ற தலைப்பில் தூய்மைப்பணி நடைபெற்று வருகிறது. நகராட்சியில் உள்ள 30 வார்டுகளில் வாரம் ஒருநாள் ஒவ்வொரு பகுதியில் முகாம் அமைத்து தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வருகின்ற னர். மேலும், குப்பைகளை தரம் பிரித்து கொடுக்க வேண்டி விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தனர். இந்நிலையில் நகராட்சி கழிவுநீர் செல்லும் கீரிப்பள்ளம் ஓடையில் குப்பை கழிவுகளுடன் நெகழி மற்றும் இறைச்சி கழிவுகள் கொண்ட குப்பைகளை மூட்டைகளில் அடைத்து இரவு நேரங்களில் மர்ம நபர்கள் ஓடையில் வீசி செல்கின்ற னர். இதனால் கீரிப்பள்ளம் ஓடையில் தூற்நாற்றம் வீசி வரு கிறது. மேலும் நோய் தொற்றுகள் பரவும் முன் கீரிப்பள்ளம் ஓடையில் மிதக்கும் குப்பை மூட்டைகளை அகற்றி கழிவுநீர் தேங்காமல் செல்லவும் கீரிப்பள்ளம் ஓடையில் குப்பை கழிவு மூட்டைகளை வீசி செல்வதை தடுக்க நகராட்சியினர் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார் க்கின்றனர்
ரூ. 6 கோடி மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டு பணிகள்
ரூ. 6 கோடி மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டு பணிகள் கோபி, மார்ச் 7- ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள நல்லகவுண்டம் பாளையம் முதல் அயலூர் பிரிவு வரையிலான இடைவ ழிச் சாலை வழியாக நகரப் பகுதிக்கு செல்ல தீத்தாம்பாளை யம், அயலூர், மல்லிபாளையம், குருமந்தூர் மேடு, செம் மாண்டம்பாளையம், அவ்வையார்பாளையம், கலிங்கியம் உள்ளிட்ட ஏராளமான கிராமங்களிலிருந்து நாள்தோறும் பொதுமக்கள், பள்ளி, கல்லூரிக்கு செல்ல முக்கிய சாலையா கவும் இது உள்ளது. இந்நிலையில், இந்த சாலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை மேம்படுத்திட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். பின்பு இந்த சாலையில் இருந்த ஆக்கிரமிப்பு களை அகற்றப்பட்டது. சுமார் 7 கிமீ தொலைவிற்கு 10 இடங்களில் பெட்டி பாலங்கள், தார் சாலை அமைக்க ரூ. 6 கோடியே 15 இலட்சம் மதிப்பீட்டில் பணிகள் நடை பெற்று வருகின்றது. இதனால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கண்காட்சிகளின் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் நீலகிரி மாவட்ட ஆட்சியர் பேட்டி
உதகை,மார்ச் 7- நாடாளுமன்றத் தேர்தல் நடைப்பெறவுள்ள நிலையில் தேர்தல் விதிமுறைகள் காரணமாக பழக்கண்காட்சி, காய்கறி கண்காட்சி உள்ளிட்ட கண்காட்சிகளின் தேதி பிறகு அறி விக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத் தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் நிலவும் கோடை சீசனை அனுபவிக்க உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து ஏப்ரல், மே ஆகிய இரு மாதங்களில் ஏரளமான சுற்றுலா பயணிகள் ஆண்டு தோறும் வந்து செல்லுகின்றனர். உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் மே மாதம் முழுவதும் கோடை விழா நடத்தப்படுவது வழக்கம் உள்ளது. இந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் இருக்கும் என்பதால், உத கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக் கும் வகையில் இந்த ஆண்டு கோடை விழா மலர் கண் காட்சி மே மாதம் 17ஆம் தேதியன்று துவங்கவுள்ளது. குன் னூர் சிம்ஸ் பூங்காவில் பழ கண்காட்சி மே 24 ஆம் தேதி நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் மு.அருணா செய்தியா ளர்களிடம் தெரிவித்தார். மேலும், சுற்றுலாத் தலங்களுக்கு வரும் சுற்றுலாப் பயணிக ளுக்கு குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, போக்குவரத்து வசதி போன்ற அடிப்படை வசதிகள் இந்த ஆண்டு முறையாக கடை பிடிக்கப்படும். அதேப்போல் அரசு தாவரவியல் பூங்கா விற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் உணவு தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் சிறு தா னிய உணவகம் செயல்படும் என தெரிவித்தார். மேலும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி ரோஜா கண்காட்சி, காய்கறி கண்காட்சி, வாசனை திரவிய கண்காட்சி ஆகிய கோடை விழாக்களின் தேதிகளை ஆலோ சனைக்கு பிறகு பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.
நீர்நிலைகளில் கலக்கப்படும் கழிவுநீர்!
சேலம், மார்ச் 7- ஏற்காட்டில் தங்கும் விடுதியிலிருந்து வெளியேறும் கழிவுநீர், நீர்வீழ்ச்சி ஓடையில் கலக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காடு, தமிழ்நாட்டிலுள்ள சுற்றுலாத் தலங்க ளில் மிக முக்கியமானதாக விளங்குகிறது. இங்கு வருடந்தோரும் தமிழ்நாடு மட்டு மின்றி, அண்டை மாநிலங்களான கேரளம், கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களி லிருந்தும் அதிகளவில் சுற்றுலாப் பயணி களின் வந்து செல்கின்றனர். இங்கு 100க் கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள் உள்ளன. அவைகளின் கழிவுநீர் சாலையிலும், நீர்நி லைகளிலும் கொட்டப்படும் அவலம் நீடித்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், வியாழ னன்று காலை, ஏற்காடு கிளியூர் நீர்வீழ்ச்சி செல்லும் சாலையில் உள்ள தனியாருக்கு சொந்தமான உணவகத்திலிருந்து கழிவுநீர் சேகரிக்கும் வாகனத்தில் கழிவுநீரை சேக ரித்து, அதை கிளியூர் நீர்வீழ்ச்சிக்கு செல்லும் ஓடையில் கொட்டியுள்ளனர். அவ்வழியாக சென்ற சுற்றுலாப் பயணிகள் மூக்கை துணி யால் மூடியபடி சென்றனர். துர்நாற்றம் அதி கமாக இருப்பதை உணர்ந்த அப்பகுதி மக்கள் கழிவுநீர் வாகனத்தை முற்றுகை யிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இத னால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஏற்காட்டில் உள்ள தங்கும் விடுதிகள் உணவகங்களின் கழிவுநீர் நீர்நிலைகளிலும், ஓடைகளிலும் கொட்டப்படும் அவலம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவ டிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் வலியு றுத்தியுள்ளனர். இதேபோன்று, ஏற்காடு பேருந்து நிலை யத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, சாக்கடை கால்வாய் வசதி இல் லாததால் கழிவுநீர் வழிந்தோடியது. இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள், ஏற்காடு ஊராட்சி ஒன்றிய ஆணையரிடம் மனு அளித்தனர். அதைத் தொடர்ந்து கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஏற்காடு ஊராட்சி மன்றம் சார்பில், கழிவு நீரை தடுத்து நிறுத்தும் வண்ணம் நான்கு அடி குழி தோண்டி அதில் கழிவுநீரை தேக்கி வைத்தனர். பின்பு ஒருமாதமாகியும் சாக் கடை கால்வாய் அமைக்கும் பணிகள் மேற் கொள்ளாததால், கழிவுநீர் தேங்கி துர்நாற் றம் வீசு வருகிறது. மேலும், தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. நாடாளு மன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசு பணிகள் அனைத்தும் நிறுத்தப்படும். எனவே, விரைந்து கழிவுநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குழந்தைகளை கடத்துவது போன்று காணொளி வதந்திகளை நம்ப வேண்டாம்: காவல்துறை
தருமபுரி, மார்ச் 7- குழந்தைகளை கடத்த முயற்சிப்பது போன்ற பொய்யான காணொளி வதந்திகளை நம்ப வேண்டாம் என தருமபுரி மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத் துள்ளது. இதுகுறித்து தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பா ளர் ஸ்டீபன் ஜேசுபாதம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது, அண்மை காலமாக வடமாநிலத்தவர்கள் குழந்தைகளை கடத்த முயற்சிப்பது போன்ற பொய்யான காணொளிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரு வதை காண முடிகிறது. இதுபோன்ற காணொளிகள் மக்களி டையே அச்சத்தையும், பதற்றத்தையும் உருவாக்க வேண் டும் என்று பிரதான எண்ணத்துடனும் சமூகவிரோதிகள் சிலர் தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர். போலியான செய்திகளை கேட்டும், காணொளிகளை பார்த்தும் பொது மக்கள் பதட்டம் அடையை தேவையில்லை. இது சம்பந் தமாக பொதுமக்களுக்கு உதவி தேவைப்பட்டால், காவல் துறை உதவி எண் 100ஐ அழைக்கலாம். மேலும், உதவிக்கு அருகாமையில் உள்ள காவல் நிலையங்களை அணுகலாம். தேவையற்ற வதந்திகளை பொதுமக்கள் யாரும் நம்ப வேண் டாம். வதந்திகளை மற்றவர்களுக்கு பகிரவோ, சமூக வலை தளங்களில் பரப்பவோ வேண்டாம். மேலும், அவ்வாறு செயல்படும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்ப டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு கொடநாடு எஸ்டேட்டில் சிறப்பு புலனாய்வுக் குழு ஆய்வு
உதகை,மார்ச் 7- சிபிசிஐடி உதவி ஆய்வாளர் தலை மையிலான பதினைந்து பேர் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழு மற்றும் தட யவியல் நிபுணர்கள் கொடநாடு எஸ் டேட்டில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கோடநாடு எஸ்டேட் டில் கடந்த 2017 ஆம் ஆண்டு காவ லாளி ஓம்பகதூர் கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இச் சம்பவம் தொடர்பாக மறைந்த முன் னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் விபத்தில் இறந்த கனகராஜ் உட்பட கேரளாவை சேர்ந்த குற்றவாளி களாக சேர்க்கப்பட்டுள்ள சயான், வாளையார் மனோஜ் உட்பட 11 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள் ளது. இது உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த பிப் மாதம் 23 ஆம் தேதி இவ்வழக்கு விசார ணைக்கு வந்தபோது, முன்பு நடை பெற்ற விசாரணையில் எதிரி தரப்பு வழக் கறிஞர் மூலம் சம்பவம் நடைபெற்ற இடத்தில் தற்போது பல்வேறு மாற்றங் கள் ஏற்பட்டுள்ளன எனவும், இச்சம்ப வம் நடைபெற்ற இடத்தை மீண்டும் ஆய்வு மேற்கொள்ள மனு அளிக்கப் பட்டது. இதன் அடிப்படையில் அரசு தரப்பு இது சம்மந்தமாக விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிமன்ற உத்தரவிட்டி ருந்த நிலையில், இவ்வழக்கின் கடந்த விசாரணையின் போது அரசு தரப்பு மூலம் அளிக்கப்பட்ட பதில் மனு ஏற்கப்பட்டு அதன் அடிப்படையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து சம்ப வம் நடைபெற்ற இடத்தை ஆய்வு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டி ருந்தது. இதனை தொடர்ந்து வியாழனன்று சிபிசிஐடி உதவி ஆய்வாளர் தலைமை யிலான சிறப்பு குழு மற்றும் தடயவி யல் நிபுணர்கள் சம்பவம் நடைபெற்ற இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இதில், சம்பவ இடத்தில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளது என முழு மையாக ஆய்வு மேற்கொண்டு வரு கின்றனர். மேலும் வெள்ளியன்று (இன்று) நடைபெறும் விசாரணையின் போது இந்த ஆய்வு குறித்து விளக்கம் அளிக் கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படு கிறது.