districts

img

பட்டியலின மக்கள் மீது அடக்குமுறை!

ஈரோடு, நவ.8- அந்தியூரில் பட்டியலின மக்கள் மீது மாவட்ட நிர்வாகம் அடக்கு முறையை ஏவிய சம்பவம் அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது.  ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டம், வேம்பத்தி கிராமம், கூலி வலசு அருந்ததியர் காலனியில் 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி யின் அருகில் வசிக்கும் அர்ஜூனன் என்பவர், ஊரை ஒட்டிய பகுதியில் தனக்கு வண்டி பாதை அமைக்க  வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றத்தை அணுகினார். ஒருதலை பட்சமாக அப்பகுதி மக்களை எதிர் தரப்பாக சேர்க்காமல் நீதிமன்ற வழி காட்டுதலை பெற்றுள்ளார். அதன் படி அந்தியூர் வட்டாட்சியர், கோபி  சார் ஆட்சியர், அப்பாவி மக்களை  மிரட்டி வண்டி தடம் அமைக்க முயற்சி நடைபெறுகிறது.  ஏற்கனவே, இதுகுறித்து அந்தி யூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருமுறை பேச்சுவார்த்தை நடை பெற்று, முடிவு எட்டப்படாத நிலை  உள்ளது. தற்பொழுது அதை மறித்து வண்டித்தடம் போடுவதாக சொல் கிறார்கள். இந்நிலையில், அவசர கதியாக காவல்துறையை வைத்து,  மிரட்டி வண்டி தடம் அமைக்கப் போவதாக கடந்த இரண்டு நாட்க ளாக போலீசார் அச்சுறுத்தி வருகின் றனர். இதனால் அச்சமடைந்த அப் பகுதி மக்கள், ஆட்சியர் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என வெள்ளி யன்று, ஆட்சியர் முகாம் அலுவல கத்திற்கு வந்தனர். ஊர் கொத்துக் காரர் சித்தன் தலைமையில், மார்க் சிஸ்ட் கட்சியினரும் ஆட்சியரை சந் திக்க வந்தனர். ஆனால் ஆட்சியரை சந்திக்க முடியவில்லை.  போலீசாரின் உதவியோடு, வரு வாய் துறையினர் அக்குடியிருப் பிற்குச் சென்றனர். இதற்கிடையில், பட்டியலின மக்களை கைது செய்து வாகனத்தில் ஏற்றிச் சென்ற னர். இம்மக்களுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள் பி.பி.பழனிச்சாமி, ஆர்.விஜய ராகவன், மாவட்டக்குழு உறுப்பி னர் எஸ்.வீ.மாரிமுத்து, அந்தியூர் தாலுகாச் செயலாளர் ஆர்.முருகே சன், தாலுக்கா கமிட்டி உறுப்பினர் ஏ.கே.பழனிச்சாமி மற்றும் திமுக நிர்வாகிகள் சி.மாணிக்கம், ஆர்.பாலுச்சாமி போராட்டத்தில் ஈடு பட்டு கைதாகினர். முன்னதாக, போலீசாருடன் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில், அப் பகுதியை சேர்ந்த ராமாயி, சென் டாயா, வடிவேல் மற்றும் அபிராமி ஆகியோர் காயமடைந்து மருத்து வமனையில் சேர்க்கப்பட்டனர்.