districts

img

ஒன்றிய மோடி அரசின் மூன்று சட்டங்களுக்கு எதிர்ப்பு

கோவை, ஜூன் 25- அடிப்படையான வழக்காழி களின் உரிமைகளை பறிக்கும் ஒன்றிய மோடி அரசின் மூன்று புதிய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் திங்களன்று வழக்கறி ஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். இந்தியாவின் மிக முக்கியமான மூன்று சட்டங்களை காலவதியாக் கிவிட்டு, புதிய மூன்று சட்டங்களை  ஒன்றிய பாஜக அரசு திணித்துள்ளது. கடந்த நாடாளுமன்றத்தில் மிருக பலத்தோடு ஆட்சியில் இருந்த மோடி அரசு, எதிர்க்கட்சிகளை கூண்டோடு வெளியேற்றி விட்டு, இரு அவைகளி லும் மசோதா தாக்கல் செய்து நிறை வேற்றியது. இந்த சட்டம் ஜூலை 1  ஆம்தேதி முதல் நடைமுறைக்கு வரும் என அறிவித்துள்ளது. இச் சட்டத்திற்கு அறிமுக நிலையி லேயே பாஜகவைத்தவிர அனைத்து  கட்சியினரும் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இந்த சட்டத்தி னால், அடிப்படை வழக்காழிகளின் உரிமைகள் பறிக்கப்படும், காவல் துறைக்கு அதிக அதிகாரங்கள் வழங் கப்படும், மேலும் இந்தி மற்றும்  சமஸ்கிருத மொழியில் இச்சட்டம் கொண்டு வரப்படுகிறது. எனவே, இச்சட்டம் நடைமுறைப்படுத்தக்கூ டாது என நாடு முழுவதும் வழக் கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்ஒருபகுதியாக கோவை ஒருங்கினைந்த நீதிமன்ற வாயில் முன்பு அகில இந்திய வழக்கறிஞர் கள் சங்கத்தின் சார்பில் ஒன்றிய அரசின் மோசடி சட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட் டச் செயலாளர் ஜோதி குமார் தலை மையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில், அகில இந்திய வழக்கறிஞர் கள் சங்கத்தின் மாநிலப் பொருளாளர் மாசேதுங், தேசியக் குழு உறுப்பினர் மு.ஆனந்தன் மற்றும் மூத்த வழக்க றிஞர்கள் ச.பாலமுருகன், நிக்கோ லஸ், ராதா கிருஷ்ணன், சக்திவேல், வெண்மணி, கோபால்சங்கர் உள் ளிட்ட திரளானோர் பங்கேற்று, ஒன் றிய அரசின் மூன்று சட்டங்களுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். நாமக்கல் நாமக்கல் மாவட்டத்தில், திருச் செங்கோடு ஒருங்கிணைந்த நீதி மன்ற வளாகம் முன்பு செவ்வா யன்று (25.06.24) அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் மாவட் டத் தலைவர் வழக்கறிஞர் சி.பரணீ தரன் தலைமையில் கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இதில், வழக் கறிஞர்கள் சி.கோவிந்தராஜ், வி.பாபு  சுப்ரமணியம், கோமதி, கவிதா உள்ளிட்ட திரளான வழக்கறிஞர்கள் பங்கேற்று ஒன்றிய அரசின் மூன்று சட்டங்களுக்கு எதிரான கண்டன முழக்கங்களை எழுப்பினர். முடி வில், வழக்கறிஞர் ஜி.கோபி நன்றி கூறினார்.