districts

img

டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு: பொதுமக்கள் போராட்டம்

திருப்பூர், ஜூன் 8 - அணைப்பாளையம் காலேஜ் ரோடு பகுதியில் புதிதாக திறக்க உள்ள டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரி வித்து அப்பகுதி பொதுமக்கள் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் காலேஜ் ரோடு அணைப் பாளையம் பகுதியில், நொய்யல் பாலத்திற்கு செல்லும் இடத்தில் புதி தாக டாஸ்மாக் கடை திறக்க மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்திருக் கிறது. இதற்கான ஏற்பாட்டை டாஸ் மாக் நிர்வாகம் செய்து வருகிறது. இந்த  நிலையில் பொதுமக்கள் அதிகம் பயன் படுத்தக்கூடிய சாலையில் டாஸ் மாக் கடை செயல்பட்டால், பெண்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிக ளுக்கு இடையூறாக இருக்கும் என்று  இப்பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித் துள்ளனர். இந்நிலையில் புதன்கிழமை காலை நொய்யல் பாலத்திற்கு செல் லும் இடத்தில் அணைப்பாளையம் பொது மக்கள், அனைத்து கட்சியினர் சேர்ந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி னர். டாஸ்மாக் கடை வேண்டாம் என்ற  பதாகைகளை கையில் ஏந்தி இருந்த னர். மாவட்ட நிர்வாகம் இங்கு டாஸ் மாக் கடையை அமைக்கக்கூடாது என முழக்கங்கள் எழுப்பினர்.  சம்பவ இடத்துக்கு வந்த துணை  மேயர் எம்.கே.எம். பாலசுப்பிரமணி யம் போராட்டம் நடத்திய பொது மக் களிடம் கோரிக்கை குறித்து கேட்ட றிந்து அதிகாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். மேலும் டாஸ் மாக் கடை அமைப்பதை எதிர்த்து மாவட்ட ஆட்சியரிடம் மீண்டும் மனு அளிக்கவும் இப்பகுதி மக்கள் முடிவு செய்துள்ளனர். காவல் துறையினர், மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை அனுப்பும்படியும் கூறிய நிலையில், அனைவரும் கலைந்து சென்றனர்.