காட்டுயானையை பரம்பிக்குளத்தில் விடுவதற்கு எதிர்ப்பு
கோவை, ஏப்.9- இடுக்கி பகுதியில் அச்சுறுத்தல் ஏற்படுத்தி வரும் காட்டு யானையை பரம்பிக்குளத்தில் விடுவதற்கு மலைவாழ் மக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் எதிர்ப்பு தெரி வித்து வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட் டத்தில் ஈடுபட்டனர். கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் சின்னக்கானால், சாந்தன் பாறை ஆகிய பகுதிகளில் 16 ரேசன் கடைகள், 60-க்கும் மேற்பட்ட வீடுகளை அரிக்கொம்பன் என்கிற யானை சேதப் படுத்தி உள்ளது. மேலும் 10 பேர் யானை தாக்கி இறந்ததாக தெரிகிறது. இந்நிலையில், அந்த யானையை பிடித்து பொள்ளாச்சி அருகே கேரள வனப்பகுதியில் உள்ள பரம்பிக் குளத்தில் விடுவதற்கு 5 பேர் கொண்ட நிபுணர் குழு அறிக்கையை உயர்நீதிமன்றத்தில் சமர்பித்து உள்ளது. இதன் அடிப்படையில் யானையை பரம்பிக்குளத்தில் கொண்டு வந்து விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வரு வதாக கூறப்படுகிறது. இதை கண்டித்து பரம்பிக்குளத்தில் உள்ள வனத்துறை அலுவலகத்தை மலைவாழ் மக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து மலை வாழ் மக்கள் கூறியதாவது, பரம்பிக்குளத்தில் 10க்கும் மேற்பட்ட பழங்குடியின கிராமங்கள் உள்ளன. இங்கு சுமார் 600 குடும்பங்களை சேர்ந்த 2500 பேர் வசித்து வருகின்றனர். இடுக்கியில் 10 பேரை கொன்ற அரிக்கொம்பன் என்கிற யானையை பரம்பிக்குளத்தில் விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது. அந்த யானை பரம்பிக்குளத்தில் விட்டால் விவசாயிகளுக்கும், பொது மக்களுக்கும் அச்சுறுத்தலாக இருக்கும். மேலும் வீடுகள், ரேசன் கடைகளை யானை இடிப்பதோடு, பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்படும். எனவே அரிகொம்பன் யானையை பரம்பிக்குளம் பகுதிக்கு கொண்டு செல்வது என்கிற நிபுணர் குழுவின் முடிவை கைவிட வேண்டும். இதே கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 10ஆம் தேதியன்று மீண்டும் பரம்பிக் குளத்தில் வனத்துறை அலுவலகம் முன்பு போராட்டத்தை நடத்துவோம், என்றனர்.
குண்டர் சட்டத்தில் இருவர் கைது
அவிநாசி, ஏப்.9- பெருமாநல்லூர் அருகே கஞ்சா கடந்தி வந்த இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்த நிலையில், அவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் போலீசார் கடந்த மார்ச் 2ம் தேதி மாதம் வாகனச் சோதனையில் ஈடுபட்டி ருந்தனர். அப்போது, கஞ்சா கடத்தி வந்த தேனி மாவட்டம், கம்பம், வடக்குப்பட்டியைச் மகேந்திரன் மகன் பிரபாகரன் (25), அதே பகுதியைச் சேர்ந்த செல்லப்பாண்டி மகன் சுஜித் குமார் (25) ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 21 கிலோ கஞ்சாவை பறி முதல் செய்தனர். இந்நிலையில் மேற்கண்ட இருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
உதகையில் பசுவை வேட்டையாடிய புலி
உதகை, ஏப்.9- எமரால்டு பகுதியில் புலி தாக்கிய பசு மாடு உயிரிழந்த சம்பவம் பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. நீலகிரி மாவட்டமானது உதகை, கோத்தகிரி, குன்னூர், கூடலூர், ஓவேலி, மஞ்சூர் உட்பட 65 சதவிதத் திற்கும் அதிகமாக வனப்பகுதிகளை கொண்டுள்ளது. இதற்கிடையே தீவன தட்டுப்பாடு, வனப்பகுதியில் ஆக்கிர மிப்பு, வழித்தடங்கள் அழிப்பு உள்பட பல்வேறு காரணங்களால் கடந்த சில நாட்களாக வனப்பகுதியில் இருந்து வனவிலங்குகள் அதிகளவில் ஊருக் குள் புகுந்து விடுகின்றன. குறிப்பாக குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர் பகுதிகளில் கரடி, சிறுத்தை நடமாட்டமும், கூடலூர் பகுதியில் காட்டு யானை நடமாட்டம் அதிகரித் துள்ளது. இந்நிலையில், தற்போது எமரால்டு பகுதியில் மின்வாரிய அலுவலகம் அருகில் புட்டன் என்ப வரின் வீடு அருகில் ராஜன் கார்த்தி எந்த ஊருக்கு சொந்தமான பசுமாட்டை புலி தாக்கி கொன்று விட்டது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந் துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறு கையில், வனப்பகுதியில் வேட்டை யாடப்பட்ட பசு மாட்டின் உடல் கிடந் ்ததை பார்த்து இந்த பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். ஏனென்றால் இந்த புலி மீண்டும் கால்நடைகளை தேடி இந்த பகுதிக்கு வரலாம். அப்போது மனிதர் களை தாக்கும் அபாயம் உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் இந்த புலி 23 கால்நடைகளை வேட்டை யாடி உள்ளது. எனவே, இதை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர். இதே போல், கடந்த ஏப்.6 ஆம் தேதி எமரால்டு பஜார் பகுதியில் கரடி ஒன்று சுற்றி திரிந்த தால், அதிகாலை நேரத்தில் வேலைக்கு வந்த தொழிலாளர்கள் ஓட்டம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
மத நல்லிணக்க இப்தார் நோன்பு நிகழ்ச்சி
திருப்பூர், ஏப்.9 - திருப்பூர், கோம்பைத் தோட்டம் பகுதியில் சாதி, மத பேதமின்றி மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில், இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரமலான் நோன்பின் போது மத நல்லிணக்கத்தை கடைபிடிக்கும் வகையில் திருப்பூர், பெரிய தோட்டம் பகுதியில் சாதி, மத பேதமின்றி அனைத்து சமுதாய மக்களுக்கு நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில், திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வ ராஜ் மற்றும் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் இஸ்லாமியர்கள், அப்பகுதி பொது மக்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண் டனர்.
சிறுசேமிப்பு என்ற பெயரில் பணமோடி
சூலூர், ஏப்.9- சிறுசேமிப்பு என்ற பெயரில் கோடிக்கணக்கில் பொது மக்களிடம் பணத்தை வசூலித்து ஏமாற்றிய கணவன், மனைவியை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கோவை மாவட்டம், சூலூரில் வசித்து வரும் ரமேஷ் குமார் (51) மற்றும் சுமதி (46) ஆகிய இருவரும் இணைந்து சிறு சேமிப்பு என்ற பெயரில் ஏலச்சீட்டு நிறுவனம் ஒன்றை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி, நடத்தி வந்தனர். அந்த நிறுவனத்தை நம்பி ஏலச்சீட்டில் முதலீடு செய்த பலருக்கு சரியான நேரத்தில் பணத்தை திருப்பிக் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏலச்சீட்டில் பணம் செலுத்தி வந்த 43 பேர் சந்தேகமடைந்து சூலூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருந்தனர். கோடிக் கணக்கில் பணமோசடி என புகார் வந்ததால் வழக்கு கோவை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றப் பட்டது. இதுகுறித்து, விசாரணை மேற்கொண்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் மேற்கொண்ட விசாரணையில் ஏலச் சீட்டில் 94 பேர் பாதிக்கப்பட்டு பணத்தை இழந்திருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொரு ளாதார குற்றப்பிரிவினர் கணவன், மனைவியான சுமதி, ரமேஷ் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் நேர் நிறுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
முட்டை விலை சரிவு: பண்ணையாளர்கள் கவலை
பள்ளிபாளையம், ஏப்.9- நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 30 பைசா சரிவு ஏற்பட்டதால் பண்ணை யாளர்கள் கவலை அடைந்துள்ளனர். நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை ஆகியவற்றை உள்ளடக்கிய நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு எட்டு கோடி முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு தமிழ் நாடு அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளி நாட்டிற்கும், வெளி மாநிலங்களுக்கும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், தேசிய முட்டை ஒருங்கி ணைப்பு குழு வாரத்தில் இரண்டு முறை முட்டை விலையை நிர்ணயம் செய்து அறிவிக்கிறது. அதனடிப்படையில் நெஸ் பேக் அமைப்பு முட்டை வியாபாரிகளுக்கு விற்பனை செய்ய வேண்டிய மைனஸ் விலையை நெக் விலையில் இருந்து குறைத்து அறிவிக்கிறது. இந்த முட்டை கொள்முதல் விலை தட்பவெட்ப நிலை, திருவிழா, பண்டிகை காலங்களில் தேவை, முட்டை நுகர்வு ஆகியவற்றை அடிப்படை யாகக் கொண்டு நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு முட்டை விலை ரூ.5.60 பைசாவாக இருந்தது. அதன்பின் முட்டை விலை பல் வேறு ஏற்ற, இறக்கங்களை சந்தித்து கடந்த ஒரு மாதமாக ஒரு முட்டை ரூ.4.50 பைசா வாக இருந்தது. இந்நிலையில், முட்டை விலை திடீரென 30 பைசா குறைக்கப்பட்டு ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.4.20 பைசாவாக நிர்ணயம் செய்யப்பட்டு, நெஸ்பேக் 30 பைசா மைனஸ் விலை அறி விக்கப்பட்டது. இதனால் ஒரு முட்டைக்கு ரூ.3.90 பைசா மட்டுமே கிடைக்கும் என்ப தால் பண்ணையாளர்கள் கவலை அடைந் துள்ளனர்.
உணவுக்காக சாலைக்கு வரும் யானைகள்
ஈரோடு, ஏப்.9- உணவு, தண்ணீர் தேடி தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி காட்டு யானைகள் சுற்றித்திரிகிற நிலையில், வாகன ஓட்டிகள் மெதுவாக செல் லுமாறு வனத்துறையினர் அறிவு றுத்தியுள்ளனர். சத்தியமங்கலம் புலிகள் காப்ப கத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்கள் வழியாக திண்டுக்கல்லில் இருந்து மைசூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இச்சாலையில் செல்லும் கரும்பு லாரி ஓட்டுநர்கள், கரும்பை சாலையில் வீசுவதால் அதனை தின்பதற்காக யானை கள் குட்டியுடன் சாலைக்கு வரு கின்றன. இந்நிலையில், வெள்ளியன்று மாலை ஆசனூர் வனப்பகுதியில் இருந்து காட்டு யானை ஒன்று வெளி யேறியது. பின்னர் அந்த யானை ஆசனூர்-திம்பம் சாலைக்கு வந்தது. சாலையில் அங்கும், இங்கும் யானை நடமாடி வந்தது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் வந்தவர் கள் சற்று தூரத்திலேயே வாகனங் களை நிறுத்திக் கொண்டனர். பின்னர், சுமார் 10 நிமிடத்துக்கு பிறகு யானை சாலையின் ஒருபுறத்தில் இருந்து மறுபுறத்துக்கு சென்றது. அதன்பின்னரே வாகனங்கள் அங்கி ருந்து சென்றன. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து ஆசனூர் வனத் துறையினர் கூறுகையில், கடந்த சில நாட்களாக வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகள் உணவு, தண்ணீருக்காக சாலையை கடந்து செல்கின்றன. எனவே அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் வாகனத்தை மெதுவாக இயக்க வேண்டும்,என் ்றனர்.
போக்குவரத்து மாற்றம்: வாகன ஓட்டிகள் தவிப்பு
பள்ளிபாளையம், ஏப்.9- சென்னை - கன்னியாகுமரி தொழிற்தட திட்டத்தின் அடிப் படையில், பள்ளிபாளையத்தில் மேம்பால பணிகள் மற்றும் பள்ளிபாளையம் - திருச்செங்கோடு சாலை விரிவாக்க பணி கள் கடந்த ஒரு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரு கிறது. இந்நிலையில் இந்த பணிகளின் ஒரு பகுதியாக, பள்ளி பாளையம் - சங்ககிரி சாலையில் மேம்பால பணிகளை மேற் கொள்வது என முடிவு செய்யப்பட்டு, அதற்காக நகராட்சி அலுவலகம் வரை சாலையை முழுமையாக தடுத்து, நகராட் சிக்கு எதிரே செல்லும் சாலையில், கிராம நிர்வாக அலுவல கம் வழியே அனைத்து வாகனங்களும் பள்ளிபாளையம் பிர தான சாலையில் செல்ல முயற்சி எடுக்கப்பட்டது. இந்நிலை யில், சனியன்று முதல் மாற்றுப்பாதையில் வாகனங்கள் செல்ல வேண்டுமென நெடுஞ்சாலைத்துறை சார்பில் அறி விப்பு வெளியான நிலையில், பள்ளிபாளையம் - சங்ககிரி சாலை நகராட்சி அலுவலகம் வரை தடுப்புகள் அமைக்கப் பட்டு வாகனப் போக்குவரத்து திருப்பி விடப்பட்டது. இந்நிலையில் ஒரே நேரத்தில் அதிகளவு வாகனங்கள் வந் ததாலும், குறுகிய சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதாலும், கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட் டது. மேலும் விபத்து ஏற்படும் சூழலும் உருவானது. இதன் கார ணமாக காலையில் பணிக்கு செல்வோம் மிகுந்த சிரமத் திற்கு உள்ளாகினர். இதுகுறித்து பள்ளிபாளையம் நகர்மன்ற தலைவர் மோ.செல்வராஜ் கூறுகையில், திங்களன்று அதி காரிகளுடன் கலந்து ஆலோசனை செய்யும் கூட்டமானது நடைபெற உள்ளது. அக்கூட்டத்தில், மேற்கண்ட பணிகள் நடைபெறும்போது, இருசக்கர வாகனங்கள் மட்டும் செல் லும் வகையிலும், மாற்றுப்பாதையில் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் மட்டும் செல்லும் வகையிலும், லாரிகளை மாற்றுப்பாதையில் அனுப்புவது குறித்தும் உத்தேசித்து வரு கிறோம், என்றார்.
அதிமுக கூட்டத்தில் தள்ளுமுள்ளு, கைகலப்பு
திருப்பூர், ஏப்.9 - திருப்பூரில் அதிமுக உறுப்பினர் சேர்க்கை ஆலோசனை கூட்டத்தில் இரு தரப்பினர் இடையே தள்ளுமுள்ளு, கைகலப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து அந்த நிகழ்ச்சி பாதியிலேயே நிறுத்தப் பட்டது. திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக வின் சார்பில் குமார் நகரில் ஞாயிறன்று புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான ஆலோசனை கூட்டம் மாநகர மாவட்ட செயலாளர், அதிமுக தேர்தல் பிரிவு செயலாளருமான பொள்ளாச்சி ஜெய ராமன் எம்எல்ஏ தலைமையில் நடை பெற்றது. இதில் திருப்பூர் வடக்கு எம்எல்ஏ விஜயகுமார், பல்லடம் எம்எல்ஏ எம்.எஸ்.எம்.ஆனந்தன், முன் னாள் எம்எல்ஏ குணசேகரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தின் முடிவில் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெய ராமன் புதிய உறுப்பினர் சேர்க்கைக் கான படிவங்களை அந்தந்த வார்டு செயலாளர்களிடம் வழங்கிக் கொண்டி ருந்தார். அப்போது திருப்பூர் மாநக ராட்சிக்கு உட்பட்ட 25ஆவது வார்டு செயலாளரும், கவுன்சிலருமான தங்க ராஜிடம் உறுப்பினர் சேர்க்கை படிவங் களை வழங்கியபோது, அதே வார்டை சேர்ந்த அதிமுக நிர்வாகி பழனிச்சாமி என்பவர் தன்னிடம் படிவத்தை வழங் குமாறு கேட்டிருக்கிறார். இதையடுத்து பழனிச்சாமிக்கும், தங்கராஜுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி, தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒரு கட்டத் தில் கைகலப்பாக மாறியது. இதையடுத்து மற்றவர்கள் இரு வரையும் தடுத்து அழைத்துச் சென்ற னர். இதனால் இந்நிகழ்ச்சி பாதியி லேயே நிறுத்தப்பட்டது. இதன்பின் மாந கர மாவட்ட செயலாளர் மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்கள் அங்கிருந்து புறப் பட்டுச் சென்றனர்.
மின்சாரம் தாக்கி ஒருவர் பலி
நாமக்கல், ஏப்.9- பரமத்திவேலூர் அருகே மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசா ரணை மேற்கொண்டு வரு கின்றனர். நாமக்கல் மாவட்டம், பர மத்திவேலூர் தாலுகா, கபி லர்மலை அருகே உள்ள வேட்டுவம்பாளையம் அரிசி ஆலைக்கு நெல் அரவை இயந்திரங்களை பொருத்து வதற்காக கடந்த ஏப்.3 ஆம் தேதியன்று திருவாரூர் மாவட்டம், கிடாரம்கொண் டான் பகுதியைச் சேர்ந்த விஜயராஜ் வந்துள்ளார். வெல்டராக பணிபுரிந்து வரும் இவர் இயந்திரத்தை பொருத்தும் பணியில் ஈடு பட்டிருந்தார். அப்பொழுது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட விஜ யராஜை அக்கம் பக்கத்தி னர் மீட்டு, பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் செல்லும் வழியில் பரிதாபமாக உயி ரிழந்தார். இதுகுறித்து ஜேடர் பாளையம் காவல் துறையி னர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி பொதுமக்களி டையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரூ.75 லட்சத்திற்கு பருத்தி ஏலம்
சேலம், ஏப்.9- கொங்கணாபுரம் கூட்டு றவு சங்கத்தில் சனியன்று பருத்தி ஏலம் நடைபெற்றது. சுமார் 3 ஆயிரம் பருத்தி மூட்டைகள் 550 லாட்டுகளாக பிரிக்கப்பட்டு ஏலம் தொடங் கியது. இதில் பிடி ரகப் பருத்தியானது குவிண்டா லுக்கு ரூ.7,350 முதல் ரூ.8,361 வரையிலும், டிசிஎச் ரகப்பருத்தி ரூ.7,600 முதல் ரூ.8,529 வரையிலும், கொட்டு ரகப்பருத்தி ரூ.4,250 முதல் ரூ.6,500 வரையிலும் விற்பனையானது. மொத்தம் ரூ.75 லட்சத்துக்கு வர்த்த கம் நடைபெற்றதாக ஏல அதி காரிகள் தெரிவித்துள்ளனர்.