சேலம், மே 26- சேலம் சௌடேஸ்வரி அரசு உதவி பெறும் கல்லூரியை மகளிர் கல்லூரி யாக மாற்றும் கல்லூரி நிர்வாகத்தின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, கல் லூரியை ஆய்வு செய்ய வந்த பல் கலைக்கழக ஆய்வு குழுவினரிடம் கல் லூரி மாணவர்கள் மனு அளித்து காத்தி ருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாநகரின் மையப்பகுதி யில் அமைந்துள்ள சேலம் சௌடேஸ் வரி இருபாலர் அரசு உதவிபெறும் கல் லூரியை மகளிர் கல்லூரியாக மாற்ற கல்லூரி நிர்வாகம் முடிவெடுத்துள் ளது. இதனை கண்டித்தும், அங்கு கல்வி பயிலும் மாணவர்களின் எதிர்கா லம் குறித்தும் இந்திய மாணவர் சங்கம் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடு பட்டு வருகிறது. இந்த பிரச்சனை சம்பந் தமாக கல்லூரி முன்பும், அதனை தொடர்ந்து பல்கலைக்கழக துணை வேந்தரிடமும் மனு அளித்து போராட் டத்தில் ஈடுபட்டனர். தற்போது, பல் கலைக்கழக ஆய்வுக் குழுவினர் சேலம் சௌடேஸ்வரி கல்லூரியில் ஆய்வு மேற்கொண்ட நிலையில், கல் லூரி மாணவ, மாணவிகள் மகளிர் கல் லூரியாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து, ஆய்வு குழுவினரிடம் மனு அளித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட னர்.