சேலம், மார்ச் 27- சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே புதிதாக டாஸ்மார்க் கடை திறப்ப தற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் சேலம் ஓமலூர் பிரதான சாலையில் மறி யலில் ஈடுபட்டதால் பர பரப்பு ஏற்பட்டது. இதனை யடுத்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை போலீசார் கைது செய்தனர். தமிழகம் முழுவதும் டாஸ்மார்க் மதுபானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல் வேறு தரப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர் இந்நிலையில் சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே கோவிந்த கவுண்டர் தோட்டம் பகுதியில் புதிதாக டாஸ்மாக் மதுபான கடை திறக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் அப்பகுதி யில் நடைபெற்று வந்த நிலையில், அப் பகுதி சேர்ந்த பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் ஓமலூர் பிரதான சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து, காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். காவல்துறையின் பேச்சு வார்த்தைக்கு உடன்படாத மக்கள் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து, இந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை காவல் துறையின் கைது செய்தனர்.